Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
வாரிசு - cover

வாரிசு

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

கான்ஃப்ரன்ஸ் அறையில் நுழைந்தார் ராஜன்.ஏற்கனவே ஞானசேகரும் - கண்ணப்பனும் காத்திருந்தார்கள்.ஒரு சில முக்கிய அதிகாரிகள் தவிர அவர்களது ஏஜெண்டுகள், பேங்கர்ஸ், ஆடிட்டர், கம்பெனி லாயர் என சகல பேரும் காத்திருந்தார்கள்.ஒரு வீடியோ காணொலிக்காக சகல நவீன ஆயத்தங்களும் செய்யப்பட்டிருந்தன.ராஜன் பிரமித்தார்.தனக்கு மட்டுமே தர வேண்டிய ஒரு விளக்கம். எதற்கு இத்தனை முன்னேற்பாடுகள்.உள்ளே நுழைந்தாள் ரேகா.கூடவே பிரபலமான மீடியா ஆட்கள் காமிரா சகிதம்.ஞானசேகர், கண்ணப்பன் டென்ஷனாகிவிட்டார்கள்.“சேர்மன் சார்! இது முழுக்க முழுக்க நம் கம்பெனியோட உள்விவகாரம். நாங்க கேட்ட சில கேள்விகளுக்கு ரேகா பதில் தரணும்னு நீங்க விரும்பினீங்க. அவகாசம் குடுத்தீங்க. எதுக்கு பிஸினஸ் ஏஜெண்டுகள், பேங்கர்ஸ், மீடியா எல்லாம்?”ராஜனுக்கும் புரியலீங்க. கேட்டே விட்டார், மகளிடம்.“அப்பா நமது உலகளாவிய வர்த்தகம். இதுல போட்டியாளர்களும் அதிகம். இதை அடுத்த கட்டத்துக்கு நாம கொண்டு போகனும்னா, உள்ளே மட்டுமே பேசி லாபமில்லை. வெளிய தெரியனும். அப்பத்தான் உலகத்தோட பார்வை நம்ம பக்கம் திரும்பும். என்னை அனுமதிங்க.”“சரிம்மா.மீடியா காமிராக்களுடன் காத்திருக்க,அறை இருட்டாக்கப்பட, திரையின் வெளிச்சம். சீனியர்கள் இதுவரை சாதித்தது, அவர்களது பல வருட அனுபவம், ஏஜெண்டுகள், ரெகுலர் சப்ளையர்ஸ் லாப நஷ்ட கணக்குகள், கம்பெனியை உயர்த்த அவர்கள் எடுத்த முடிவுகள் என சகலமும் விவாதிக்கப்பட்டது. திரையில தோன்றி சகலத்தையும் ரேகாவே சொன்னாள்.அவர்களது கேள்விகள் திரையிடப்பட்டன.ஒவ்வொரு கேள்விக்கும், ரேகா தரும் பதில்கள், அதற்கு பக்கபலமான டாக்குமென்ட்ஸ், ஆதாரங்கள், ஒப்பிட்டு பார்க்கும்போது, ரேகா அதை உடைத்து கம்பெனியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக எடுக்கும் முயற்சிகள்.இதுபோல 37 கேள்விகளுக்கும் தெளிவான பதில்-விளக்கம், முன்னேற்றம், லாபக் கணக்கு.பழைய ஒப்பந்தங்கள் பதினாறு ரத்து.பதிலாக புதிய ஒப்பந்தங்கள் இருபத்தி ஏழு உருவான விதம்.உலக மார்க்கெட்.அவர்களோடு இணைய போகும் முயற்சி.முடிச்சவுடன் விளக்கு எரிய கைதட்டல் அரங்கத்தையே அதிர வைத்தது.கண்ணப்பர் எழுந்தார்.“நாங்க பேசனும். இது ஒரு மாதிரி மீடியாவை வச்சிட்டு நடத்தற ஆடம்பர மீட்டிங். கொஞ்சம் உள்ளே போய் பார்க்கனும். விளக்கம் சொல்லணும்.”ரேகா எழுந்தாள்.“சார் யார் யாருக்கு விளக்கம் தரணும்?”“நீங்க எங்களுக்கு!”ஹலோ நீங்க ரெண்டு பேரும் கம்பெனில பார்ட்னரா, ஷேர்வோல்டறா? டைரக்டர்களா, எது? சேர்மன்கிட்ட சம்பளம் வாங்கற சீனியர் அதிகாரிகள். உழைச்ச உழைப்புக்கு தாராளமா எல்லாம் கிடைச்சிருக்கு. அதனால் முதலாளியை கேள்வி கேட்கற தகுதி இல்லை. உங்க கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனா, கம்பெனியோட நோக்கம், வளர்ச்சி, அதோட நவீன பாதையை மீடியாவுக்குத் தெரிவிக்கத்தான் இந்த கான்பரன்ஸ். உங்களுக்கு விளக்கம் தர அல்ல.”அவர்கள் ஆடிப் போக, “உங்க உழைப்பை மதிக்கிறோம். ஆனா, அதே பழைய ஸ்டைல்ல நடந்தா, பின் தங்குவோம். அதை நவீனமாக்கத்தான் பலவித மாற்றங்கள். உங்க ரெண்டு பேருக்கும் இப்ப முடிய கம்பல்சரி ரிடையர்மென்ட்! உங்க செட்டில்மென்ட் செக் ‘ரெடி’ சார்! உங்க கையாலே குடுத்து அவங்களை கௌரவமா அனுப்பி வைங்க!”ராஜனே ஆடிப் போனார்.“டு வாட் ஐ ஸே சார்!”அவள் குரலில் அதட்டலும் அதிகாரமும் இருந்தது.ஞானசேகர் எழுந்தார்.“அப்படியெல்லாம் எங்களை வெளிய அனுப்ப முடியாது”“யார் சொன்னது? லாயரை கலந்து பேசித்தான் இந்த முடிவை எடுத்தேன். நீங்க கோர்ட்டுக்கு போகலாம். சந்திக்க நான் தயாரா இருக்கேன், நீங்க பிரச்சனை பண்ணினா, உங்களுக்கு சேர வேண்டிய பணத்தைக்கூட கோர்ட்லதான் வாங்கிக்க முடியும்!”“சார் என்ன இது?”“அப்புறமா உங்களுக்கு இன்கம்டாக்ஸ் பிராபளம் வரும். அப்பாகிட்ட நீங்க எல்லாத்தையும் ஒயிட்ல வாங்கலை ப்ளாக் இருக்கு! அதுக்கெல்லாம் பதில் சொல்லணும்!”இருவரும் மிரண்டார்கள்
Available since: 01/16/2024.
Print length: 92 pages.

Other books that might interest you

  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Show book
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Show book