Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
துரோகம் புதிது! - cover

துரோகம் புதிது!

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

“நம்ம ஜேம்ஸைப் பத்தி நீ என்ன நினைக்கறே மேரி?”
 
“யாரு? உங்க தங்கச்சி மகன் தானே?”
 
“ம்!”
 
“அவனை விட ஒரு நல்ல பையன் உண்டா?”
 
“அவன் நல்லவன்தான். ஆனா மூணாவது தங்கச்சியைக் கூட இப்பத்தான் கட்டிக் குடுத்தான். ஏகப்பட்ட கடன் இருக்கே அவனுக்கு!”
 
“அவனுக்குக் கடன் இருந்தா, உங்களை அது எப்படி பாதிக்கும்?”
 
“நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரியலையா?”
 
“புரியுதுங்க. நம்ம ஸ்டெல்லாவை ஜேம்ஸுக்குக் கட்டிக் குடுக்கலாம்னு சொல்ல வர்றீங்க!”
 
“ஆமாம்.”
 
“ரொம்ப நல்ல தீர்மானம். கடன் சுமையும், குடும்ப பாரமும் உள்ள இடத்துல வாழ்க்கைப்படட்டும். அப்பத்தான் அவளுக்கு பொறுப்பு வரும்”
 
“குழந்தை கஷ்டப் படுவாளோ?”
 
“படட்டும். நீங்க செல்லம் குடுத்து அவளைக் கெடுத்தது போதும். உருப்படியா இன்னிக்குக் காலைலதான். கண்டிச்சீங்க அவளை முதன் முதலா!”
 
“ஏதும் ஏடாகூடமா ஆகக் கூடாதுன்னு பயந்துதான் இந்தக் கல்யாண யோசனை!”
 
“உங்க தங்கச்சிகிட்ட பேச வேண்டாமா? ஜேம்ஸ் சம்மதிக்க வேண்டாமா?”
 
அழைப்பு மணி ஒலித்தது.
 
திறந்தார் ராபர்ட்.
 
ஜேம்ஸ் வாசலில் நின்றான்.
 
“ஆயுசு நூறு! உன்னைப் பற்றித்தான் நானும் உங்கத்தையும் பேசிட்டு இருக்கம்!”
 
“வா தம்பி!”
 
“இந்தாங்க மாமா ஸ்வீட்!”
 
“என்ன விசேஷம் ஜேம்ஸ்?”
 
“எனக்கு ஆபீஸ்ல ப்ரமோஷன் வந்திருக்கு. அதான் அம்மா ஸ்வீட் வாங்கிட்டுப் போகச் சொன்னாங்க!”
 
“அவளும் வந்திருக்கலாமே!”
 
“வழக்கமான ரத்த அழுத்தம். என் கடன் சுமையெல்லாம் நீங்கி, நான் தெளியற வரைக்கும் அம்மாவோட நோய் தீராது!”
 
“உன் கடனைத் தீர்க்க நான் ஒரு வழி சொல்லப் போறேன் ஜேம்ஸ்!”
 
“என்ன மாமா அது?”
 
“என்னங்க நீங்க? உங்க தங்கச்சி கிட்ட பேச வேண்டிய விஷயம் இது!”
 
“சரிதான்! சம்மதம் சொல்ல வேண்டியது இவன்தானே?”
 
“என்ன மாமா பேசறீங்க ரெண்டு பேரும்?”
 
“சம்பாதிக்கற பெண் ஒருத்தி உனக்கு மனைவியா வந்தா, கஷ்டம் தீரும் இல்லையா?”
 
“அம்மாவும் இதைச் சொல்லத் தொடங்கிட்டாங்க மாமா. தரகர் வீட்டுக்கு வரத் தொடங்கிட்டார்!”
 
“அப்படியா?”
 
“அம்மா போற வேகத்தைப் பார்த்தா, ஒரு மாசத்துக்குள்ள நிச்சயம் பண்ணிடுவாங்கனு தோணுது!”
 
“பார்த்தியா மேரி? சரியான நேரத்துல பேசத் தொடங்கிட்டம் ரெண்டு பேரும். நீ இப்பவே புறப்படு ஜேம்ஸ்!”
 
“எங்கே மாமா?”
 
“உங்க வீட்டுக்குத் தான்!”
 
“எதுக்கு?”
 
“மத்தவங்க முந்திக்கறதுக்கு முன்னால, நான் அப்ளிகேஷன் போட்ரலாம்னு பாக்கறேன்!”
 
“புரியலை!”
 
“கையில ஸ்டெல்லாவை வச்சிட்டு, வெளிப் பெண்களுக்கு உங்கம்மா ஏன் அலையணும்?”
 
“மாமா!”
 
“உனக்கு ஸ்டெல்லாவைக் கட்டிக்க இஷ்டமா ஜேம்ஸ்?”
 
“உடனே எப்படி மாமா பதில் சொல்ல முடியும்?”
 
“ஏன்? எம் பொண்ணு அழகா இல்லையா? கை நிறைய சம்பாதிக்கலையா? உன்னோட குழந்தைக் காலம் தொட்டு பழகின பெண். என்ன யோசனை ஜேம்ஸ்?”
 
“அம்மாவைக் கலக்காம யாருக்கும், எந்த பதிலும் நான் சொல்றதில்லை!”
 
“சரி வா! இப்பவே புறப்படலாம்!”
 
“நீங்க நாளைக்கு வாங்களேன் மாமா. இது தொடர்பா நானும், அம்மாவும் இன்னிக்கு பேசிர்றம்!”
 
“குட்! அதுவும் நல்லதுதான். உங்கம்மா என்ன சொல்லப் போறா? மனப்பூர்வமா சம்மதிப்பா. எனக்குத் தெரியாதா என் தங்கையை?”
 
“நான் வர்றேன் மாமா. அத்தே நான் வர்றேன்!”
 
வீடு வரும்வரை ஒரு மாதிரி குழப்பத்தில் இருந்தான் ஜேம்ஸ். வீட்டுக்குள் நுழைந்தான்.
Available since: 02/03/2024.
Print length: 109 pages.

Other books that might interest you

  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book