Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
துணையிருப்பாள் துர்கா! - cover

துணையிருப்பாள் துர்கா!

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

மௌலி தனது அலுவலகத்தில் தனி அறையில் இருந்தார்.போனில் பேசிக்கொண்டிருந்தார்.வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.நாளைய ஏற்பாடுகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தார்.இன்டர்காம் ஒலித்தது.“ஜோசியர் வந்திருக்கார்!”“உள்ளே அனுப்புங்க!”சில நொடிகளில் குடும்ப ஜோசியர் உள்ளே நுழைந்து வணங்கினார்!“ஒக்காருங்க ஜோசியரே! என்ன சாப்பிடறீங்க?”“எதுவும் வேண்டாம்! பொண்ணு நல்லபடியா வந்துட்டாளா?”“ம்! வந்தாச்சு! ஓய்வுல இருக்கா! இனிமே பொறுப்புகளை அவதானே சுமக்கப் போறா! சரி... சரி! ஜாதகத்தைப் பார்த்தீங்களா?”“பார்த்துட்டேன்!”“பதவி ஏற்கணும். நல்ல ஒரு மாப்பிள்ளை வரணும்! அதெல்லாம் எப்பனு உங்ககிட்ட கலந்துதானே, அடுத்த கட்டத்துக்குப் போகணும்?”ஜோசியர் கொஞ்சம் கண் மூடி உட்கார்ந்தார்.“ஜாதகம் கைல இருக்கா?”“நெஞ்சுல இருக்கு! பலமுறை பாத்துட்ட காரணமா, பதிவாயிருக்கு! கல்யாண யோகம் உங்க பொண்ணுக்கு வந்தாச்சு!”“அப்படியா?”“ஒரு மாசத்துல நடந்துடும்!”“ஆச்சர்யமா இருக்கே!”“பையனைத் தேடிப் புடிங்க! அதுகூட அவசியமில்லை. தானா வரன் வாசல்ல தேடி வரும். யோகம் வந்துட்டா, யார் தடுத்தாலும் நிக்காது!”“சரி! துர்க்கா வாழ்க்கை எப்படி இருக்கும்?”“சிக்கலான ஜாதகம். தெளிவா இல்லை! நிறைய குழப்பங்கள் அவ வாழ்க்கைல வரும்!”“வாய்ப்பே இல்லை!”“எப்படி சொல்றீங்க?”“அவ என் மகள் ஜோசியரே! கோடீஸ்வரி! பட்டுக் கம்பளத்துல நடந்த கால்கள்! அவ வாழ்க்கைல எப்படி குழப்பம் வரும்? சான்ஸே இல்லை!”ஜோசியர் சிரித்தார்.“ஏன் சிரிக்கறீங்க?”“மன்னிக்கணும்! பணம் மட்டுமே ஒரு மனுஷனோட வாழ்க்கையைத் தீர்மானிக்கறதில்லை! ஒரு நள மகாராஜா, சமையல்காரனா மாறக் காரணம் அந்த சனீஸ்வர பகவான்தானே? குரு வக்ரமாப் பார்த்தா நல்லதா? சாதகமில்லாத வீட்ல கிரகங்கள் இருந்தா பிரச்னையை தவிர்க்கமுடியுமா?”“நீங்க ஏன்ன சொல்றீங்க?”“உங்க பொண்ணுக்கு இப்ப நேரம் சரியா இல்லை! அவளோட ஜாதகம் சொல்லுது! அது தரக்கூடிய பிரச்னைகளை அவ சந்திச்சுத்தான் ஆகணும்!பரிகாரம் தேடிட்டா?”“தீவிரத்தைக் குறைக்கலாம்! அதுக்காக பிரச்னைகளையே இல்லைனு ஆக்கிட முடியாது!”“கல்யாணம் நடந்தே தீரும்னு சொல்றீங்க?”“பிரச்னையோட முதல் அத்யாயமே கல்யாணம்தான். அதுக்காக மாங்கல்ய யோகம் வந்துட்டா, தடுத்து நிறுத்த முடியுமா?மௌலி தலையாட்டினார்.“நான் வரட்டுமா?”“சரி ஜோசியரே! சந்தோஷமா இருந்தேன். பொண்ணு வந்துட்டாளேனு பூரிச்சுப் போயிருந்தேன். அத்தனையும் ஊசிபட்ட பலூன் மாதிரி ஆயிடுச்சு!”“கவலைப்படாதீங்க! உங்க துர்க்காவுக்கு எதையும் சமாளிக்கற தெம்பு உண்டு. மோசமான ஜாதகம் உள்ளவங்க கூட பலசமயம் நல்லபடியா வாழறதுண்டு. எப்படி?”“எப்படி?”“தெய்வ பலம்! அது இருக்கறவங்களை கிரகங்கள் காட்டமாத் தாக்காது! தாக்கினாலும், தாங்கிக்கற சக்தி கண்டிப்பா இருக்கும். உங்க துர்க்கா அந்த ரகம்!”மௌலி பேசவில்லை!ஜோசியர் புறப்பட்டுப் போனார்.பிறகு அலுவலக சம்பந்தமான சந்திப்புகள் நிறைய இருந்ததால், வேறு எதையும் மௌலியால் யோசிக்க முடியவில்லை!அலுவலகத்தில் ஏழு மணியாகிவிட்டது!தொலைபேசி அழைத்தது! எடுத்தார்.
Available since: 01/16/2024.
Print length: 75 pages.

Other books that might interest you

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Show book
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Show book