Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
பட்டு மாமி! - cover

பட்டு மாமி!

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

ஆவி பறக்கும் காபியுடன் கூடத்துக்கு வந்தாள் பட்டு! ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார் ரமணி!“இந்தாங்கோ!”அதை வாங்கிக் கொண்டார் ரமணி. அவளை ஏற இறங்கப் பார்த்தார்.“ஏன் அப்படி பார்க்கறேள்?”“காலங்காத்தாலே குளிச்சு லட்சணமா நெத்தி நிறைய குங்குமத்தோட வர்ற உன் மூஞ்சில முழிச்சாத்தான்மா பொழுதே சரியா விடியறது நேக்கு!”பட்டு சின்னதாகச் சிரித்தாள்.“நீ காப்பி சாப்பிட்டியோ?”“இல்லை!”“ஏன்?”“தினமும் காப்பி சாப்பிட்டா, ஒருநாள் அது இல்லைனா கஷ்டமா இருக்கும். எப்பவும் எல்லாமே கிடைக்கும்னு என்ன நிச்சயம்? நான் எதுக்கும் அடிமையானதில்லை!”அவர் ஆச்சர்யமாகப் பார்த்தார்.“என்ன டிபன் பண்ணட்டும்?”“நீ எது பண்ணினாலும் நன்னா இருக்கும். உன் இஷ்டம் போல செய்!”“மாமி எப்ப வருவா?“யாருக்குத் தெரியும்? எனக்கு சமைச்சுப் போட நீ இருக்கே! மற்ற வேலைகளை கவனிக்கவும் ஆள் இருக்கு. அவ தேச சஞ்சாரி. ஊரைச் சுத்திண்டு இருப்பா!”பட்டு மாமி உள்ளே வந்தாள்.ஆடிட்டர் ரமணிக்கு ரொம்ப கடமைப்பட்டவள். கடந்த நாலைந்து வருடங்களாக இந்த வீட்டில்தான் சமையல் வேலை!குருக்கள்மாமி மூலம் அறிமுகமாகி, அந்தப் பழக்கம் தொடர்ந்து, இன்று நெருங்கி விட்டாள்.ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருந்த ஆடிட்டர் ரமணி சம்பாதித்து குவித்துக் கொண்டிருந்தார்.ஒரே மகன்...அயல் நாட்டில் வைத்துப் படிக்க வைக்க ஆசைப் பட்டார். அவன் படிப்பு முடிந்த கையோடு, ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணியைக் காதலித்து மனைவியாக்கிக் கொள்ள, அதை ஒப்புக்கொள்ள முடியாத இவர், மகனுடன் உறவை முறித்துக் கொண்டார். மனைவி சாரதா என்ன சொல்லியும் எடுபடவில்லை. மகன் மும்பையில்தான் இருக்கிறான். சாரதா கோயில் குளம், தன் உறவுக்காரர்களின் கல்யாணம் என்று எதையாவது சொல்லிக் கொண்டு வருடத்தில் எட்டு மாதங்கள் வீட்டில் இருக்க மாட்டாள். ரமணி கண்டு கொள்ளவில்லை. தன் தொழிலில் மும்முரமாக இருந்ததால் அவரால் எதைப் பற்றியும் கவலைப்பட முடியவில்லை. வீட்டிலேயே அலுவலகம். காலை முதல் இரவு வரை க்ளையண்ட்டுகள். பிஸியான ஆடிட்டர். பட்டு மாமி வந்து சேர்ந்த ஒரு வருடத்தில் ஊர் மக்கள் சும்மா இருக்காமல், கொஞ்சம் சீண்டிவிடப் பார்த்தார்கள்-அடிக்கடி சாரதா வெளியூர் போய் விடுவதால் ஆடிட்டர் ரமணி பட்டுமாமியை வைத்திருக்கிறார் என்று. முதலில் குருக்கள் மாமிதான் இதை பட்டுவின் காதுக்குக் கொண்டு வந்தாள்.“பட்டு! நான் சொல்றேன்னு கோச்சுக்க மாட்டியே?”“சொன்னாத்தானே தெரியும்!”“நீ அந்த ஆடிட்டர் ரமணியாத்துக்கு வேலைக்குப் போறதை நிறுத்திடேன்!”“எதுக்கு?“நீயும் வயசான கிழவி இல்லை. இன்னிக்கெல்லாம் போனா, நாற்பது கூட ஆகலை நோக்கு. பெண் குழந்தை வேற இருக்கு.”“நேராச் சொல்லுங்கோ!”“கூசறது நேக்கு!”பட்டு வாசல் திண்ணையில்தான் உட்கார்ந்திருந்தாள். சற்று தள்ளி நாயரின் சாயாக் கடையில் நாலைந்து பேர்... ஆட்டோக்காரர் உண்ணியின் அம்மா... எதிரே சவுண்டி மடத்தில் சின்னதான ஒரு கூட்டம்... பட்டு சட்டென குரலை உயர்த்திவிட்டாள்.“எதுக்கு ஆடிட்டர் ரமணியாத்துக்கு சமையல் வேலைக்குப் போறதை நிறுத்தணும்?”“பட்டு, மொள்ளடி! எதுக்கு இப்ப நீ குரலை உசத்தறாய்?”“நாலு பேர் தெரிஞ்சுக்கட்டுமே மாமி! தனித்தனியா எல்லாரும் என்னைப் பத்திப் பேசத்தான் போறா. என்ன சொல்றா எல்லாரும்? ரமணி என்னை வச்சிண்டு இருக்கிறார்னுதானே! ஆமாம்... ரமணியோட ஆசைநாயகிதான் நான். போதுமா? வேறென்ன தெரியணும் இந்த கோயில்குண்டு ஜனங்களுக்கு?”“அய்யோ பட்டு... ஒரு பொம்மனாட்டி நட்ட நடு கிராமத்துல நின்னுண்டு பேசற பேச்சாடி இது?”“ஒரு பொம்மனாட்டி பத்தி ஒளிஞ்சு ஒளிஞ்சு எல்லாரும் பேசலாம். அதுல தப்பில்லை! ஆனா அவ பகிரங்மாக பதில் சொல்லக்கூடாது! அப்படித்தானே!”குருக்கள் மாமி வெல வெலத்துப் போனாள்.“த பாருங்கோ மாமி! இந்த என்னோட பதில் எல்லோருக்கும்தான். நான் உழைக்கிறேன். நாலு காசு சம்பாதிக்கிறேன். என் குழந்தைகளுக்கு சாதம் போடறேன். நான் கஷ்டப்பட்டப்ப யாரும் ஏன்னு கேக்கலை. போராடினது நான்தான். அதனால யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் நேக்கில்லை! எந்த நாய்க்காவது தைரியம் இருந்தா என் எதிர்ல வந்து நின்னு பேசட்டும்!”நின்றவர்கள் அத்தனை பேரும் சட்சட்டென காணாமல் போனார்கள்
Available since: 01/16/2024.
Print length: 220 pages.

Other books that might interest you

  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Show book
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book