Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
பிரசாதப் பொட்டலம் - cover

பிரசாதப் பொட்டலம்

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

காரியங்கள் சகலமும் முடிந்து விட்டன மளமளவென!
 
அதுவரை ஆலய பூஜைகளுக்குத் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்திருந்தான் நடேசன்.
 
எல்லாம் முடிந்து நடேசன் ஆலயத்துக்கு வரத் தொடங்கி விட்டான்.
 
பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த குருக்களை அந்தக் கிராம மக்களால் சுலபத்தில் மறக்க முடியாது!
 
அந்த கம்பீர உருவமும், வெண்கலக் குரலின் மந்திர உச்சாடனமும்... இப்போதும் காதில் ஒலிக்கிறது?
 
ஆனால் நடேசன் எந்தக் குறையும் வைக்கவில்லை!
 
அப்பாவும் போன பிறகு, கோயிலே கதி எனக் கிடந்தான்.
 
அன்றைக்கு இரவு நேர பூஜையை முடித்துப் பள்ளி கொள்ளச் செய்தபின், ஆலயத்தைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
 
அம்மா முனகல் கேட்டது.
 
ஓடி வந்தான். தொட்டுப் பார்த்தான்.
 
“ஜூரம் இருக்கும் போலிருக்கே! கஷாயம் போட்டுத் தரட்டுமா?”
 
“வேண்டாம்பா”
 
“அப்பா போன முதல் நீ சரியா இல்லை! தெனமும் விடிய ஒரு நாழிக்குக் குளிச்சு, நைவேத்தியத்துககுனு தனியா சமைச்சு... இனிமே இதெல்லாம் உன்னால முடியுமாம்மா?”
 
“முடிஞ்சுதானே ஆகணும்?”
 
“நான் அன்னத்தை வரச் சொல்லட்டுமா?”
 
“அவளுக்கு வயசாகலையா?”
 
“பின்ன எப்படீம்மா?”
 
“உங்கப்பாவுக்குக் குடுத்து வைக்கலை! அவரோட கடைசி ஆசை நிறைவேறவும் இல்லை! எனக்கும் எந்த ஆசையும் நிறைவேறாது”
 
கண்களை மூடிக் கொண்டாள்.
 
சுரீலென்றது நடேசனுக்கு!
 
'அம்மாவை இனி வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பது மிகப் பெரிய தண்டனை!'
 
'அப்பா என்ன தப்பாக ஆசைப்பட்டு விட்டார்?'
 
'நிறைவேற்ற முடியாத ஆசையல்லவே!
 
கங்காவை அவள் அம்மாவுடன் அடிக்கடி ஆலயப் பிரகாரத்தில் பார்ப்பதுண்டு!
 
மனசு வேறு எதற்கும் தயார் ஆகாததால், நின்று பார்க்கத் தோன்ற வில்லை!
 
'நானும் காலம் முழுக்கத் தனித்து வாழ்ந்து விட முடியாது!'
 
'மனைவி என்று ஒருத்தி நிச்சயமாக வேண்டி வரும்!”
 
'அது இந்த கங்காவாக இருந்து விட்டுப் போகட்டுமே!’
 
அம்மாவின் அருகில் வந்தான்.
 
“அம்மா! அப்பாவோட கடைசி ஆசையை நிறைவேற்ற நான் தயார்!”
 
அம்மா குபீரென எழுந்து உட்கார்ந்தாள்.
 
“நடேசா! நீயா சொல்ற?”
 
“நானேதான்மா!”
 
“அன்னத்தை சாயங்காலம் வரச் சொல்லு! நான் பேசி முடிவு பண்ணணும்!”
 
“சரிம்மா”
 
இரவு ஏழரைக்கு அன்னம் வந்தாள்.
 
“ஒக்காரு அன்னம்”
 
“எப்படிம்மா இருக்கேள்?”
 
“எத்தனை நாளைக்கோ? நடேசன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்!”
 
“அப்படியா?”
 
“எங்காத்துக்காரர், உன் பொண்ணு கங்காதான் இந்தாத்து மாட்டுப் பொண்ணா வரணும்னு சொன்னது உனக்கும் தெரியும்!”
 
“நான் தவிக்கறேன்மா”
 
“என்னதவிப்பு?”
 
“என் பொண்ணுக்கு அந்தத் தகுதி இருக்கா?”
 
“இதுல என்ன அன்னம் தகுதி? இது பெருமாள் போட்ட முடிச்சுனு நினைச்சுக்கோ. என்ன சொல்ற?”
 
அன்னம் பேசவில்லை!
 
“இன்னும் என்ன யோசனை? உம்பொண்ணு சம்மதிக்க மாட்டாளா?”
 
அன்னம் சிரித்தாள்
Available since: 02/03/2024.
Print length: 114 pages.

Other books that might interest you

  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book