Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
மனசுக்கு மட்டும்! - cover

மனசுக்கு மட்டும்!

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

“என்னடீது? நீயும் வந்திட்டியே! அவன்கூட யார் இருக்காங்க?” 
 
“பொறுப்பானவங்களை உட்கார வச்சிட்டுத்தான் வந்திருக்கேன். நீ கவலைப்படாதே! எனக்கு தலைவலியா இருக்கு. காபி குடு! அக்கா எங்கே?” 
 
“மாடில இருக்கா!” 
 
“நீ வா! உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்!” 
 
“இரு! வர்றேன்!” அம்மா காபியுடன் வந்து எதிரே உட்கார்ந்து கொண்டாள்.
 
“ஏன்மா? டாக்டர் ஏதாச்சும் சொன்னாரா? பிரச்னை எதுவும் இல்லையே?”
 
“உன்பிள்ளை பூரணமான ஆரோக்யத்தோட இருக்கான்!” 
 
“வேற என்ன? பணப் பிரச்சனையா?” 
 
வந்தனா அம்மாவை ஆழமாகப் பார்த்தாள். 
 
“அது இனிமேலதான் வரப்போகுது நமக்கு!” 
 
“புரியும்படியா பேசுடி!” 
 
“அம்மா நீ அதிர்ச்சி அடையாதே! பொறுமையாக் கேட்டுக்கோ! நேரடியா நான் விஷயத்துக்கு வர்றேன்!” 
 
அம்மா முகத்தில கலவரம். 
 
'என்ன சொல்லப் போகிறோள் இவள்?’ 
 
வந்தனா டாக்டர் சொன்னது - அந்த நீரஜாவின் அப்பா பேசியது... நீரஜாவின் விளக்கம் எல்லாம் சொன்னாள். 
 
அண்ணனின் எதிர்பார்ப்பையும் சொல்லிவிட்டாள். 
 
“உனக்கு வெக்கமால்ல?” 
 
“இதுல நான் வெக்கப்பட என்னம்மா இருக்கு?” 
 
“எங்க குடும்பத்துல மூத்தவன் அவன். எங்களை விட்டுட்டு அவனுக்காக ஒரு வாழ்க்கை அமைச்சுக்க முடியாதுனு அந்த பெரிய மனுஷன்கிட்ட படக்குனு நீ சொல்ல வேண்டியதுதானே!” 
 
“அம்மா! அதைச் சொல்ல வேண்டியது நானில்லை! உன் பிள்ளை!” 
 
“சொல்லமுடியாம மனசு புழுங்கித்தாளே மயக்கம் வந்திருக்கு!” 
 
“அவர்கிட்ட சொல்ல முடியாம அண்ணனுக்கு மனசு புழுங்கலை நம்மகிட்ட சொல்ல முடியாம தவிக்கறான்!” 
 
“அப்படியா சொல்ற?” 
 
“ஏறத்தாழ உன் பிள்ளையே இதை அப்பட்டமா எங்கிட்ட சொல்லியாச்சும்மா!” அம்மாவின் கண்களில் அதிர்ச்சி எட்டிப்பார்த்தது. 
 
அருண் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டான். 
 
நீரஜாவின் அப்பா வந்து பில் கட்டிவிட்டார். வந்தனாதான் கூட இருந்தாள். அருணைப்பிடித்து வந்து நீரஜா காரில் ஏற்ற, வந்தனாவையும் ஏறிக்கொள்ளச் சொன்னார். 
 
கார் அருண்வீட்டு வாசலில் நின்றது. 
 
வந்தனா இறங்கினாள் 
 
“உள்ள வாங்க!” வரவேற்றாள். 
 
இருவரும் வர, “உட்காருங்க! அம்மா! காபி போடு!” 
 
அம்மா கடுப்புடன் உள்ளே வந்தாள். 
 
“அது ஒண்ணுதான் குறைச்சல்!” 
 
“ஷ்! சொன்னதைச் செய்மா!” 
 
“நீங்க போய் படுங்க அருண்! ஹெல்ப் பண்ணும்மா!” 
 
நீரஜா அவனுடன் வந்தாள். அவனைப் படுக்க வைத்துவிட்டு திரும்பிவர, அம்மா காபியுடன் வந்தாள். 
 
ட்ரேயை நீரஜாவிடம் நீட்ட, 
 
அவள் காபியை எடுப்பதற்குள், திடீரென குறுக்கே புகுந்த கீர்த்தனா, காபியை எடுத்துவிட்டாள். 
 
அவள் அதை எடுத்த வேகத்தில் கோப்பையில் காபி வேகமாகத் தளும்பி, நீரஜாவின் சுடிதாரில் கொட்டிவிட்டது. 
 
“இடியட்!” 
 
நீரஜா பளாரென கீர்த்தனாவை அறைந்தாள். 
Available since: 02/03/2024.
Print length: 67 pages.

Other books that might interest you

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Show book