Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
இன்ப அதிர்ச்சி - cover

இன்ப அதிர்ச்சி

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

தாமுவால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை! வீட்டுக்கு வந்த பிறகு ஏராளமாகக் குடித்திருந்தான்.
 
‘அப்பாவிடம் சொல்லலாமா?'
 
'ச்சே! அப்பா தலையிடும் அளவுக்கு நிச்சயமா இது பெரிய விவகாரம் அல்ல!’
 
'தனிப்பட்ட ஒரு பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள என்னால் முடியாவிட்டால், பிறகு நானென்ன தாதா மகன்?’
 
'இல்லை! இப்படியே விட்டால், கல்லூரியில் நான் செல்லாக்காசாகி விடுவேன்! எச்சில் தீரும் வரை மாணவர்கள் துப்பித் தீர்த்து விடுவார்கள்!’
 
'விடக்கூடாது!’
 
‘சட்டென என்னைத் தள்ளி விட்டாள்.’
 
'எதிர்பாராத ஒரு நொடியில் அவள் கை ஓங்கி விட்டது. ஆனாலும் அசாத்தியத் துணிச்சல் அதுக்கு!'
 
'எச்சரிக்க வேண்டும்!'
 
காலை சீக்கிரமே தாமு வந்து விட்டான்.
 
லேசான தாடி... எப்போதும் போடும் அந்த வெளிறிய ஜீன்ஸ், டீ ஷர்ட்ஸ் அதுவும் மோசமான நிறம்:.. வாயில் புகையும் சிகரெட், மதுவால் சிவந்த கண்கள்... இதுதான் தாமு!
 
கல்லூரி வாசலில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்து விட்டான்.
 
அவன் பெரிய கலாட்டா பண்ணப் போகிறான் என்று எல்லாருக்கும் தெரிந்தே விட்டது.
 
அவனது பரிவாரம் நெருங்கியது.
 
“தாமு...!”
 
“பொட்டப் பசங்களா! நான் அடிபட்டப்ப, அத்தனை பேரும் ...பப் போனீங்களா? நாய்களா!”
 
அவர்கள் பேசவில்லை!
 
மாணவிகள் கடந்து போனார்கள்.
 
“போகுதுங்க பாரு ஆட்டிக் குலுக்கிட்டு! கம்மனாட்டிங்க!”
 
சரியாக ஒன்பதுக்கு ரேஷ்மா தன் ஸ்கூட்டியில் வந்தாள்.
 
தாமு தன் கைகளை விரித்துக் கொண்டு நின்றான்.
 
அவள் வண்டியை விட்டு இறங்கினாள். ஸ்டாண்ட் போட்டாள் அங்கேயே!
 
அவனை நெருங்கினாள்.
 
“என்ன தாமு சாலை மறியலா?”
 
“இதப்பாரு! இப்ப நான் சண்டை போட வரலை! உன்னை எச்சரிக்க வந்தேன்! அன்னிக்கு என்னைத் தள்ளி விட்ட காரணமா, நீ பெரிய சண்டியர்னு நெனக்காதே! ஆயிரம்தான் ஆனாலும் நீ பெண்! அதை மறக்கக் கூடாது!”
 
“தேங்க் யூ தாமு! அப்பப்ப நான் பொண்ணுனு நீ ஞாபகப்படுத்திட்டே இருக்கே! வழியை விடு!”
 
“என் வழில தலையிட மாட்டேன்னு சொல்லிட்டு நீ போகலாம்!”
 
“ஷ்யூர்! நீ ரௌடித்தனம் பண்ணாம, தண்ணியடிச்சிட்டு அனெக்ஸ்ல வராம, அடாவடி நடத்தாம, சராசரி மாணவனா படிக்கற நோக்கத்தோட மட்டுமே வந்தா, நீ இருக்கற திசைப் பக்கம் கூட நான் திரும்ப மாட்டேன்!”
 
“உபதேசமா?'
 
“இல்லை! உண்மை!”
 
“நீ சொல்ற எல்லாத்துக்கும் நான் கட்டுப்படறேன். நான் சொல்றதை இப்ப நீ செய்யணும்?”
 
“என்ன?”
 
“எனக்கு முத்தம் குடுக்கணும்!”
 
“அப்படியா? தந்தாப் போச்சு! கிட்ட வா தாமு!”
 
அவன் மிரண்டான்!
Available since: 02/03/2024.
Print length: 70 pages.

Other books that might interest you

  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book