Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
சக்கரம் - cover

சக்கரம்

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

சரியாக ஆறுமணிக்கு கதிரின் பைக் வந்து பங்களா வாசலில் நின்றது! சொப்னாவும் அதிலிருந்து இறங்குவதை அப்பா தன் அறையிலிருந்தே பார்த்தார்.எல்லா பக்கமும் வீட்டுக்குள் அவர் காமிரா பொருத்தியிருப்பதால் எந்த ஒரு நடவடிக்கையும் அவர் கண்களிலிருந்து தப்பிக்க முடியாது!இருவரும் உள்ளே நடந்து வந்தார்கள்.அவனது நடை, தோற்றம், கம்பீரம் - சகலத்தையும் தனசேகர் கணக்கெடுத்து விட்டார்.அவர்கள் ஹாலில் உட்கார்ந்த சில நொடிகளில் அம்மா மஞ்சுளா வந்து சொல்ல, மெதுவாக எழுந்து வந்தார்!கதிர் எழுந்து நின்று வணங்கினான்!பதிலுக்கு வணக்கம் சொல்லாமல், தலையை மட்டும் அசைத்தார். எதிரே உட்கார்ந்தார்.“சொப்னா எல்லாம் சொன்னா! உன்னைப் பற்றி நானும் விசாரிச்சேன். உள்ளே வா! உன்கிட்ட மட்டும் நான் கொஞ்சம் பேசணும்!”எழுந்து நடக்க, கதிர் பின்தொடர்ந்தான்.அவரது அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள்.“ஒக்காரு!”“இருக்கட்டும்!”“சொப்னா கோடீஸ்வரன் மகள்! அவ உன் வீட்ல வந்து வாழ முடியாது!“அப்படியா?”ஒரு பெட்டியை எடுத்து மேஜை மேல் வைத்தார்.“இதுல அஞ்சு லட்ச ரூபாய் இருக்கு. உங்க கேன்டீனை பெரிய ஹோட்டலா மாத்துங்க! பிழைச்சுப் போங்க! என் மகளை நீ விட்டுத்தர உனக்கு நான் தர்ற விலை!”கதிர் சிரித்தான்.“ஏன் சிரிக்கற?”“என்னை நீங்க புரிஞ்சுக்கலை! சொப்னா உங்க மகள். இப்ப அவ உங்க சொத்து! அதை நான் விட்டுத் தர்றதுக்கு விலையா? அபத்தமா இருக்கு. நான் என்கிட்ட வச்சுக்கிட்டாத்தான் விட்டுத்தர விலை தரணும். பணமெல்லாம் வேண்டாம். ‘இந்தப் பையன் உனக்கு வேண்டாம்’னு சொல்லி சொப்னாவை தடுத்து நிறுத்திடுங்க! இதுக்குப் போய் ஏன் அஞ்சு லட்சம் செலவு?”அவர் மிரண்டு போனார்.“அவ கேக்க மாட்டாளே! சொப்னா பிடிவாதக்காரி. கதிர்தான் வேணும்னு சொல்லுவா!”“அதுக்கு நான் என்ன சார் செய்ய முடியும்?”“நீ அவளை விட்டு விலகணும். அவ மனசுல கசப்பை உண்டாக்கணும்!”“எதுக்கு?”“எனக்கு நீ மாப்பிள்ளையாக முடியாது!”“அதுக்காகப் பொய்சொல்றதோ, சொப்னா கிட்ட நாடகமாடறதோ எனக்குப் பிடிக்காத விஷயம்!”அவர் அவனயே கூர்ந்து பார்த்தார்.“நீ பொய் சொல்லமாட்டே! பணத்துக்கும் விலை போக மாட்டே இல்லையா?”“ஆமாம்அருகில் வந்து தோளில் கை போட்டார்.“வெரிகுட்! நீதான் எனக்கு மாப்பிள்ளை!”“சார்!”“என் மகளை சந்தோஷமா உனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்! ஆனா நீ என் வீட்டோட வந்துடணும். பொறுப்புகளை ஏத்துக்கணும். உன் அப்பா, அக்கா வாழ எல்லா வசதிகளையும் நான் செஞ்சு தர்றேன்!”கதிர் எழுந்து விட்டான்.“ஸாரிங்க! அதுக்கு வாய்ப்பே இல்லை.”“என்ன பேசற? என் மகள் உன் வீட்ல வந்து வாழணுமா?”“அதுதான் முறை!”“இது நடக்குமா?”“சொப்னாவை நான் கட்டாயப்படுத்தலை. அவ விரும்பினா இதுக்கு சம்மதிக்கட்டும். கோடீஸ்வரர் தனசேகரோட மாப்பிள்ளையா நான் ஆயிட்டாலும், அன்பும் ஆதரவும் மட்டும்தான் எனக்கு வேணும். வேற எதையும் நான் எதிர்பாக்கலை. உங்க மகளையும் கேட்டு கலந்து முடிவெடுங்க! தேவைப்பட்டா மேற்கொண்டு பேசலாம்!”வணங்கினான்.கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்
Available since: 01/13/2024.
Print length: 63 pages.

Other books that might interest you

  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Show book
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book