Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
சொந்தக்காரங்க! - cover

சொந்தக்காரங்க!

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

வழக்கம் போல ஆபீசுக்கு வந்தான்! வேலைகள் நிறைய இருந்த காரணமாக, தீபாவுடன் பேச முடியவில்லை! தீபாவும் அவனை அழைக்கவில்லை!மாலை நாலுமணிக்கு தீபா போன் செய்தாள்!“சொல்லு தீபா!”“ஸாரி மனோ! அப்பாவுக்கு பீப்பி எக்கச்சக்கமா ஏறி, மயக்கம் போட்டு, காலைல நான் புறப்படற நேரத்துல அமளி துமளியாகி, அப்பாவைக் கொண்டு வந்து ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்!”“மை காட்! இதை ஏன் நீ காலைல சொல்லலை?”“இருந்த டென்ஷன்ல எதுவும் தோணலை மனோ!”“இப்ப அப்பா எப்படி இருக்கார்?”“ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு! எல்லா டெஸ்ட்டும் எடுத்திருக்காங்க! இந்த அளவுக்கு ரத்த அழுத்தம் இருந்தா, அது பல பெரிய விவகாரங்கள்ள கொண்டு போய் விடும்னு டாக்டர் எச்சரிக்கறார்.”“எந்த ஆஸ்பிட்டல் தீபா?”“காவேரி ஆஸ்பிட்டல்ல மனோ!”“நான் இப்பவே புறப்பட்டு வர்றேன் தீபா!”மனோ அவசரமாக புறப்பட்டான். ஏ.டி.எம்.மில் கொஞ்சம் பணமும் ட்ராப் செய்து கொண்டான்!அரை மணியில் வர, தீபாவின் அம்மா, தங்கை நிகிலா எல்லாரும் இருந்தார்கள். அப்பா ஐ.சி.யு.வில்!“வாங்க மனோ!அம்மாவுக்கு தீபா மனோவை அறிமுகப்படுத்த,வணங்கினான்!“உங்களை முதல் முதல்ல சந்திக்கறது ஆஸ்பத்திரில வச்சா? கஷ்டமா இருக்கு தம்பி!”“பரவால்லைம்மா! அப்பா இப்ப எப்படி இருக்கார் தீபா?”“மயக்கம் தெளியலை! இன்ஜெக்ஷன் போட்டிருக்காங்க! பீப்பி இப்பக் குறைஞ்சிருக்கு.”“ஏன் இந்த திடீர் ஏற்றம்?”“காரணம் நான்தான்.”“என்ன சொல்ற?”“கல்யாணப் பேச்சுத்தான். கைல பணமில்லை! நான் சொல்ற நிபந்தனைகளுக்கு பிள்ளை வீட்டார் கட்டுப்படணுமேனு கவலை! அப்பா கைல பணமில்லாத ஏக்கம், ஒரு குற்ற உணர்வா மாறியிருக்கு மனோ!”“எதுக்கு? மகள் சம்பாதிக்கறா! மனைவி மெஸ் நடத்தறாங்க! அவருக்கு என்ன குறைச்சல்?”“அப்படியில்லை மனோ! ஒரு மகன் இல்லை! பொண்ணுகளை நம்பி வாழ வேண்டியிருக்கே! என்ன எடுத்துச் சொன்னாலும் அவரோட தாழ்வு மனப்பான்மை போகலை! அது நோயை அதிமாக்குது!”“நான் பேசறேன் தீபா!”டாக்டர் வெளியே வந்தார்.“மயக்கம் தெளிஞ்சாச்சு! பயமில்லை! நீங்க போய்ப் பாக்கலாம்! கூட்டம் போட வேண்டாம். டென்ஷன் படுத்தாம பேசுங்க! நம்பிக்கை ஊட்டுங்க! அவருக்கு அதுதான் டானிக்! நாளைக்கு ஒரு நாள் இருந்துட்டு, மறுநாள் போகலாம்!சரி டாக்டர்!”“நீங்க மூணுபேரும் முதல்ல போங்க தீபா!”“சரி மனோ!”மூவரும் உள்ளே வந்தார்கள். பீறிட்ட அழுகையை அம்மா அடக்கிக் கொண்டாள்
Available since: 01/13/2024.
Print length: 80 pages.

Other books that might interest you

  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book