Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
விரியும் மலர் நானுனக்கு - cover

விரியும் மலர் நானுனக்கு

தோழர் கா.கருமலையப்பன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

குடும்பத்தில் ஆடவர்கள் வேலைக்குச் சென்றால் அங்கே சண்டையோ சச்சரவோ வருவதில்லை. காலையில் எழுந்து வேலைக்குச் செல்லும் ஆண் பணி முடிந்து களைத்து வருகையில் பதமாய்க் கவனித்து உணவு பரிமாறி உண்டு உறங்கி, மறுநாள் மீண்டும் வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும் நேரம் சண்டை போடவோ குற்றம் குறை காணவோ பொழுதும் இருக்காது. அவசியமும் இருக்காது. பொருளாதாரச் சிக்கலும் வராது. ஆனால் இதுவே ஒரு குடும்பத் தலைவன் வேலைக்குச் செல்லாமல் இருந்துவிட்டால் அனைத்தும் தலைகீழாகி விடும். பிரச்சனைகளின் ஆணிவேர் பொருளாதாரம். அதாவது வருமானம் இல்லாமை. இந்த இல்லாமை எல்லாச் சங்கடத்தையும் வரவழைக்கும். 
 
பெரியசாமியும் இந்த ரகம்தான். உடல் உழைப்பில் அதிக நாட்டமும் ஆர்வமும் இல்லாதவர். வசதியாக இருந்தவரை உழைக்காமலேயே இருந்து பழகியதால் உடலும் வளைய மறுத்தது. குந்தித் தின்றால் குன்றும் குறையுமே. அப்படித்தான் பெரியசாமியின் சொத்துக்கள் விற்பனையாயின. சொத்துக்கள் போனபின் மனைவியின் நகைகள் காணாமல் போயின. இதில் லட்சுமியின் சம்மதமோ அபிப்பிராயமோ கேட்கப்படுவதில்லை. பிள்ளைகள் வளரும் வரை அவரைக் கேள்வி கேட்க ஆளில்லை. ஆனால் பிள்ளைகள் வளரும் போது, துணிமணி வாங்க அது இதென்று தேவை வரும்போது, பணப் பற்றாக்குறை பல சண்டைகளை விளைவித்தது. பெரியசாமி தொடங்கும் சண்டையை அவர்தான் முடித்தும் வைப்பார். ஒரே ஒரு வார்த்தை கேட்டு அனைவரின் வாயையும் அடைத்துவிடுவார். அதோடு அன்றைய போர் முடிவிற்கு வந்துவிடும் இன்றும் அதே முறையைக் கையில் எடுத்தார். 
 
“அப்போ உன் மாமனை நினைச்சுக்கிட்டுத்தான் கல்யாணம் வேண்டாம்னு தள்ளிப்போடுறியா? அவனைக் கட்டிக்கிட்டு என்ன செய்யப்போற நீ? எப்பவும் வயல்காடு, கரும்புத் தோட்டம்னு காடு கரையிலேயே பழியாக் கிடப்பவனை, ஒரு படிப்பறிவு இல்லாத முட்டாப்பயலைக் கட்டிக்கொண்டு கிணற்றடியிலும் மாட்டுத்தொழுவத்திலும் உன் காலத்தைக் கடத்தப் போகிறாயா? இதுக்கு நான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன். நான் பார்த்த மாப்பிள்ளையைக் கட்டிக்கொண்டால் அவர்களை வைத்தே மற்ற இரு பெண்களைக் கடத்தி விடுவேன். என் கனவில் மண்ணையள்ளிப் போட்டுவிடாதே. இந்தத் திருமணம் மட்டும் நடக்கவில்லையென்றால் நான் இதே உத்திரத்தில் கயிற்றில் தொங்கி விடுவேன். அப்புறம் தாயும் மகள்களுமாய் எவனைக் கட்டிக்கொண்டாலும் சரி!” - உச்ச ஸ்தாயியில் பெரியசாமி கத்த, “ஐயோ” - என வாயை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் லட்சுமி. 
 
பாரதி கண்களை இறுக மூடிக்கொண்டாள். அப்பா தனது பிரம்ம அஸ்திரத்தை எய்துவிட்டார். கயிற்றில் தொங்கிவிடுவேன் என்ற ஒற்றைச் சொல் போதும். அம்மாவும் இனிக் கெஞ்சி அழுவாள். பாவம், அம்மா! நம்மால் அழ வேண்டாம். இந்த அப்பாவும்தான் என்னென்ன பேசுகிறார். போயும் போயும் மாமா உடனா தன்னை இணைத்துப் பேச வேண்டும். அவர் எனக்கு இன்னொரு தகப்பன் ஆயிற்றே. எப்படிப் பார்த்தாலும் மாமாவிற்கு முப்பத்து ஐந்து வயதிற்கும் மேல் இருக்கும். அவரைப் போய்ச் சந்தேகப்படலாமா? தன் படிப்பிற்காகச் செலவு செய்வதும் புதிது புதிதாய் ஆடைகள் வாங்கித் தருவதும் தவிர தவறான பேச்சோ பார்வையோ இல்லாத மாமாவை எப்படி அப்பா இப்படிப் பேசலாம். இதுவரை ஒரு துணி எடுத்துத் தந்திருப்பாரா? ஒரு நோட்டு... புத்தகம்? ஏன் அம்மாவிற்கு ஒரு முழம் பூ கூட வாங்கித் தந்ததில்லையே. மாப்பிள்ளை மட்டும் யார் கேட்டது இவரிடம்? இதில் மிரட்டல் வேறு. வெறுப்பால் முகத்தைச் சுழித்தாள்
Available since: 02/03/2024.
Print length: 344 pages.

Other books that might interest you

  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Show book
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book