Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
உன் வானம் நான்… - cover

உன் வானம் நான்…

தோழர் கா.கருமலையப்பன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

காரை விட்டு இறங்கினார் மகாதேவன். கடற்கரை செல்லும் வழியெங்கும் கடைகள். கூட்டங்கள். டிரைவரை அழைத்தார். 
 
“மணி!”
 
 “ஸார்!” என்றவாறு இறங்கி ஓடிவந்தான் மணிகண்டன். 
 
 “இன்னிக்கு எதுவும் விசேஷ நாளா? இவ்ளோ கூட்டமா இருக்கே?” 
 
“ஸார்! இன்னிக்கு பௌர்ணமி ஸார். கடல் அலைகளையும் நிலவையும் பார்க்க ரொம்ப அருமையா இருக்கும். அதான் இவ்வளவு கூட்டம்!” 
 
“அப்போ கடற்கரையிலும் ரொம்ப கூட்டமா இருக்குமோ?” 
 
“இருக்கும் ஸார். எதுக்கும் கொஞ்சம் நகர்ந்து போய் நடமாட்டம் கம்மியா இருக்கிற பக்கம் போனா நல்லது.” 
 
“சரி, நான் பார்த்துக்கிறேன். நீ காரை ஓரமா நிறுத்திட்டு காபி எதுவும் சாப்பிடுறதா இருந்தா சாப்பிடு. நான் போயிட்டு வர்றேன்.”  
 
“நானும் வரவா ஸார்?” எனக் கேட்டான் பவ்யமாய். 
 
“இல்லை வேண்டாம். நான் கொஞ்ச நேரம் தனிமையா இருக்கணும். எம்மக நடந்த இடத்தில் கொஞ்ச நேரம் உட்காரணும். என்னைத் தேடாதே. பசிச்சா சாப்பிட்டு வெயிட் பண்ணு... சரியா? '' 
 
 “சரிங்க ஸார்!” என்றவாறு பின்பக்கம் கதவைத் திறந்தான். 
 
குனிந்து அந்தப் பொருளை எடுத்துக் கொண்டார் மகாதேவன். உடலும் உள்ளமும் பதறியது. கைகள் நடுங்க அதைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார். பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்த பொருளைப் பார்த்ததும் உலர்ந்திருந்த கண்கள் மீண்டும் ஊற்றெடுத்தது. நடப்பதற்கு சற்றுத் தடுமாறினார். 
 
மணிகண்டன் குரல் கொடுத்தான். “ஸார்!”
 
“ம்...!” 
 
“வந்து... சத்யா சார் உங்களைத் தனியா விடக்கூடாதுன்னு சொன்னாங்க. எப்பவும் என்னையும் கூடப் போன்னு சொன்னாங்க!” என்றான் தயங்கி. 
 
வருத்தமாய்ப் புன்னகைத்தார் மகாதேவன். “எம்மேல உள்ள அக்கறையில் அப்படிச் சொல்லியிருப்பான். நீ என்னைப் பற்றிக் கவலைப்படாதே. ஆமா! வழக்கமா நிலா இங்கே வரும்போதெல்லாம் எங்கே சுற்றிப் பார்ப்பாள்? எந்த இடம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்?” 
 
“ஸார்! அம்மா எப்போ வந்தாலும் அதோ தெரியுதே அந்த பில்டிங்லதான் மணிக்கணக்கா நிற்பாங்க!” எனக் காட்டிய திசையைப் பார்த்து வியந்தார். அது ஒரு வெற்றுக் கட்டிடம். கோவிலோ சிலைகளோ கடைகளோ இல்லாத  இடம். 
 
“இதுவா? இங்கே நின்று என்ன செய்வாள்?” என்றார் வியப்பாய். 
 
“ஸார்! இங்கேதான் மூணு கடலும் ஒண்ணாச் சேருதாம். அதுக்கு அடையாளமாத்தான் இந்த பில்டிங்க கட்டி வெச்சிருக்காங்களாம். இங்கே நின்னு கடலை அமைதியா ரசிக்கத்தான் நிலாம்மா பிரியப்படுவாங்க.” 
 
மீண்டும் மனம் கனத்தது. நிலா எப்போதும் இப்படித்தான். அவள் ஒரு தனிமை விரும்பி. கூட்டமாய் இருக்கும் தியேட்டர்களுக்கு போக விரும்ப மாட்டாள். கேசட்டை வாங்கித் தன் அறையில் அமர்ந்து தனியாக படம் பார்ப்பாள். செவ்வாய், வெள்ளி அன்று கோவிலுக்குப் போகாமல் புதன்கிழமை மட்டுமே போவாள். 
 
கேட்டால், அன்னிக்குத் தாம்ப்பா கோவில்ல கூட்டமே இருக்காது. சாமியை நின்று நிதானமாய்ப் பார்க்கலாம் என்பாள். கல்யாண வீடு, விருந்து, விசேஷம் எங்கு என்று நடந்தாலும் வர மறுத்துவிடுவாள். அன்றே அதை மாற்றியிருக்க வேண்டும். 
 
தன் மகள் அமைதியே உருவானவள். அமைதியை விரும்புகிறாள் எனக் கவனியாமல் விட்டதால்தான் என் மகள் அமைதியாகி விட்டாளோ? 
 
அப்போதே நாலு இடத்திற்கு அழைத்துச் சென்று அனைவரிடமும் பழக வைத்திருக்க வேண்டும். அப்படிப் பழகியிருந்தால் துணிச்சலும் தைரியமும் இயல்பாகவே வந்திருக்கலாம். 
 
பெற்றவனிடமே பேசத் துணிவில்லாமல் என் மகள் என்னைத் தவிக்கவிட்டு போயிருக்க மாட்டாள். எல்லாம் என்னால்தானே! செல்லமாய் வளர்த்த நான் அவளைத் தைரியமாய் வளர்க்கவில்லையே! 
 
“ஸார்!” மணிகண்டன் குரல் கொடுக்க, திடுக்கிட்டு நிமிர்ந்தார். 
Available since: 02/03/2024.
Print length: 264 pages.

Other books that might interest you

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book