Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
உன் வானம் நான்… - cover

உன் வானம் நான்…

தோழர் கா.கருமலையப்பன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

காரை விட்டு இறங்கினார் மகாதேவன். கடற்கரை செல்லும் வழியெங்கும் கடைகள். கூட்டங்கள். டிரைவரை அழைத்தார். 
 
“மணி!”
 
 “ஸார்!” என்றவாறு இறங்கி ஓடிவந்தான் மணிகண்டன். 
 
 “இன்னிக்கு எதுவும் விசேஷ நாளா? இவ்ளோ கூட்டமா இருக்கே?” 
 
“ஸார்! இன்னிக்கு பௌர்ணமி ஸார். கடல் அலைகளையும் நிலவையும் பார்க்க ரொம்ப அருமையா இருக்கும். அதான் இவ்வளவு கூட்டம்!” 
 
“அப்போ கடற்கரையிலும் ரொம்ப கூட்டமா இருக்குமோ?” 
 
“இருக்கும் ஸார். எதுக்கும் கொஞ்சம் நகர்ந்து போய் நடமாட்டம் கம்மியா இருக்கிற பக்கம் போனா நல்லது.” 
 
“சரி, நான் பார்த்துக்கிறேன். நீ காரை ஓரமா நிறுத்திட்டு காபி எதுவும் சாப்பிடுறதா இருந்தா சாப்பிடு. நான் போயிட்டு வர்றேன்.”  
 
“நானும் வரவா ஸார்?” எனக் கேட்டான் பவ்யமாய். 
 
“இல்லை வேண்டாம். நான் கொஞ்ச நேரம் தனிமையா இருக்கணும். எம்மக நடந்த இடத்தில் கொஞ்ச நேரம் உட்காரணும். என்னைத் தேடாதே. பசிச்சா சாப்பிட்டு வெயிட் பண்ணு... சரியா? '' 
 
 “சரிங்க ஸார்!” என்றவாறு பின்பக்கம் கதவைத் திறந்தான். 
 
குனிந்து அந்தப் பொருளை எடுத்துக் கொண்டார் மகாதேவன். உடலும் உள்ளமும் பதறியது. கைகள் நடுங்க அதைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார். பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்த பொருளைப் பார்த்ததும் உலர்ந்திருந்த கண்கள் மீண்டும் ஊற்றெடுத்தது. நடப்பதற்கு சற்றுத் தடுமாறினார். 
 
மணிகண்டன் குரல் கொடுத்தான். “ஸார்!”
 
“ம்...!” 
 
“வந்து... சத்யா சார் உங்களைத் தனியா விடக்கூடாதுன்னு சொன்னாங்க. எப்பவும் என்னையும் கூடப் போன்னு சொன்னாங்க!” என்றான் தயங்கி. 
 
வருத்தமாய்ப் புன்னகைத்தார் மகாதேவன். “எம்மேல உள்ள அக்கறையில் அப்படிச் சொல்லியிருப்பான். நீ என்னைப் பற்றிக் கவலைப்படாதே. ஆமா! வழக்கமா நிலா இங்கே வரும்போதெல்லாம் எங்கே சுற்றிப் பார்ப்பாள்? எந்த இடம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்?” 
 
“ஸார்! அம்மா எப்போ வந்தாலும் அதோ தெரியுதே அந்த பில்டிங்லதான் மணிக்கணக்கா நிற்பாங்க!” எனக் காட்டிய திசையைப் பார்த்து வியந்தார். அது ஒரு வெற்றுக் கட்டிடம். கோவிலோ சிலைகளோ கடைகளோ இல்லாத  இடம். 
 
“இதுவா? இங்கே நின்று என்ன செய்வாள்?” என்றார் வியப்பாய். 
 
“ஸார்! இங்கேதான் மூணு கடலும் ஒண்ணாச் சேருதாம். அதுக்கு அடையாளமாத்தான் இந்த பில்டிங்க கட்டி வெச்சிருக்காங்களாம். இங்கே நின்னு கடலை அமைதியா ரசிக்கத்தான் நிலாம்மா பிரியப்படுவாங்க.” 
 
மீண்டும் மனம் கனத்தது. நிலா எப்போதும் இப்படித்தான். அவள் ஒரு தனிமை விரும்பி. கூட்டமாய் இருக்கும் தியேட்டர்களுக்கு போக விரும்ப மாட்டாள். கேசட்டை வாங்கித் தன் அறையில் அமர்ந்து தனியாக படம் பார்ப்பாள். செவ்வாய், வெள்ளி அன்று கோவிலுக்குப் போகாமல் புதன்கிழமை மட்டுமே போவாள். 
 
கேட்டால், அன்னிக்குத் தாம்ப்பா கோவில்ல கூட்டமே இருக்காது. சாமியை நின்று நிதானமாய்ப் பார்க்கலாம் என்பாள். கல்யாண வீடு, விருந்து, விசேஷம் எங்கு என்று நடந்தாலும் வர மறுத்துவிடுவாள். அன்றே அதை மாற்றியிருக்க வேண்டும். 
 
தன் மகள் அமைதியே உருவானவள். அமைதியை விரும்புகிறாள் எனக் கவனியாமல் விட்டதால்தான் என் மகள் அமைதியாகி விட்டாளோ? 
 
அப்போதே நாலு இடத்திற்கு அழைத்துச் சென்று அனைவரிடமும் பழக வைத்திருக்க வேண்டும். அப்படிப் பழகியிருந்தால் துணிச்சலும் தைரியமும் இயல்பாகவே வந்திருக்கலாம். 
 
பெற்றவனிடமே பேசத் துணிவில்லாமல் என் மகள் என்னைத் தவிக்கவிட்டு போயிருக்க மாட்டாள். எல்லாம் என்னால்தானே! செல்லமாய் வளர்த்த நான் அவளைத் தைரியமாய் வளர்க்கவில்லையே! 
 
“ஸார்!” மணிகண்டன் குரல் கொடுக்க, திடுக்கிட்டு நிமிர்ந்தார். 
Available since: 02/03/2024.
Print length: 264 pages.

Other books that might interest you

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Show book
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book