Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
பூவும் பொட்டும்! - cover

பூவும் பொட்டும்!

தோழர் கா.கருமலையப்பன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

கெட்டி மேளம் முழங்க, மணமகளின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான் மணமகன். ஊரும் உறவும் அட்சதை தூவி வாழ்த்த, முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிவசங்கரியும் மனோகரும் தங்கள் கையில் இருந்த  அட்சதைகளைத் தூவினர்.
 
“கடவுளே! மணமக்கள் கடைசிவரை சந்தோஷமா வாழணும்.”
 
மனதிற்குள் வேண்டிக்கொண்டே, எழுந்து நின்றாள் சிவசங்கரி.
 
“மனோ! போலாமா?” 
 
“கிப்ட் கொடுக்கணுமே. வாக்கா, கொடுத்திட்டு வந்திடலாம்” - என்றவாறே மனோகரும் எழுந்து கொண்டான். 
 
“நானுமா? வேண்டாம், மனோ. நான் வெளியே வெயிட் பண்றேன். நீ போய்க் கொடுத்திட்டு வந்திடு.” 
 
“ஏங்க்கா?”
 
“ம்ப்ச்! வேண்டாம்னா விடு.” 
 
“சரி வா. பொண்ணோட அப்பா கையிலே கொடுத்துட்டுப் போகலாம்.” கையிலிருந்த பரிசுப் பொட்டலத்தோடு மனோகர் நகர, தனது பட்டுப் புடவையை நீவிவிட்டுக் கொண்டவாறே தம்பியைப் பின் தொடர்ந்தாள் சிவசங்கரி.
 
அக்காள் தம்பி இருவரும் மருத்துவர்கள். சிவசங்கரி, பெண்கள் நலச் சிறப்பு மருத்துவர். மேலும் சர்க்கரை வியாதிக்கான ஆராய்ச்சிப் படிப்பைப் படித்துக் கொண்டிருப்பவள்.
 
மனோகர் குழந்தைகள் நல மருத்துவர். இளம் வயதிலேயே கைராசியான மருத்துவர் என்ற பட்டம் பெற்றவன். புன்னகையும் கனிவான பேச்சும் இவனது ப்ளஸ் பாயிண்ட்.  சிவசங்கரி, தனது மயில் கழுத்து நிறப் பட்டுப் புடவையைக் குனிந்து சரி செய்துகொண்டே வர, எதிரே வந்தவன் மீது மோதி நின்றாள். 
 
“ஐயாம் ஸோ ஸாரி.” - பதட்டமாய்க் கேட்டவாறே நிமிர்ந்தவளின் முகம் கருத்தது. எதிரே புன்னகையோடு நின்றிருந்தான் டாக்டர் பிரபாகர்.
 
“இவனா? இங்கேயா? ச்சே! இவன் முகத்தில் விழிக்கும்படி ஆயிற்றே!” - கடுப்பாய் விலகி நடக்க முயன்றவளைப் பிரபாகரின் குரல் தடுத்து நிறுத்தியது.
 
“ஹாய் சங்கரி! எப்படி இருக்கே?” - கேட்டவனை ஆத்திரமாய் முறைத்துவிட்டு விலகிச் சென்றாள். 
 
“இடியட்! எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுகிறான். நான்சென்ஸ்!” - முனகியவாறே வந்த சகோதரியைத் திரும்பிப் பார்த்தான் தம்பி. 
 
“அக்கா! என்னாச்சு?”
 
“ஒன்னுமில்ல...”
 
“இல்ல... ஏதோ இருக்கு. இப்ப யாரைத் திட்டினே?”
 
“ம்... அந்த இடியட்டைத்தான்.” - கடுப்பாய்ச் சொன்னாள். 
 
“எந்த இடியட்டை?”
 
“அதான்... அந்தப் பிரபாகர்.”
 
“அட! பிரபாகர்கூட மேரேஜுக்கு வந்திருக்காரா? நான் பார்க்கலியே!”
 
“நீ வேற கடுப்பேத்தாதே.” 
 
“நீ ஏங்க்கா டென்ஷனாகுறே. இது நம்ம சக டாக்டர் வீட்டுக் கல்யாணம். பிரபாகர் அவர் வீட்டுக்கு வர்றதுல உனக்கு என்ன கோபம்?”
 
“கல்யாணத்துக்கு வந்தவன் எங்கிட்ட ஏன் பேசணும்?”
 
“என்னக்கா நீ? உன்னோட க்ரூப் ஸ்டூடண்ட். ஒரே ஹாஸ்பிடல்ல வேலை செய்திருக்கீங்க. அந்தப் பழக்கத்தில பேசியிருக்கலாம்.” 
 
“புரியாமப் பேசாதடா. அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல்ல.” - சிவசங்கரியின் குரலில் தொனித்த வெறுப்பு, அவனை மேலே பேசவிடாமல் தடுத்தது.
 
அமைதியாகச் சென்றவன், மணப் பெண்ணின் தகப்பனாரைக் கண்டதும் நின்றான். முகமலர்ச்சியோடு  அவர்களை நெருங்கினார் பத்ரிநாத். 
 
“வாங்க. சாப்பிட்டீங்களா?”
 
“இல்ல. ஹாஸ்பிடல்ல கொஞ்சம் வேலை இருக்கு. கிளம்பறோம்.”
 
“என்ன மனோ நீங்க? நமக்கு என்னிக்குத்தான் வேலை இல்ல. இன்னிக்குக் கண்டிப்பாச் சாப்பிட்டுட்டுத்தான் போகணும். வாங்க என்கூட.” - கைப்பற்றி அழைத்தவரிடம் நாசூக்காக மறுத்தாள் சிவசங்கரி.
Available since: 02/03/2024.
Print length: 228 pages.

Other books that might interest you

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Show book
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book