Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
எனக்கு உதவி செய்யப் பிடிக்கும் - cover

எனக்கு உதவி செய்யப் பிடிக்கும்

Shelley Admont, KidKiddos Books

Publisher: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Summary

ஜிம்மி என்ற குட்டி முயல் தனது குடும்பத்துடன் கடற்கரைக்குச் செல்கிறது. மற்றவர்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி அங்கு அது கற்றுக்கொள்கிறது. ஜிம்மியின் மணல் கோட்டை கடல் அலையினால் அழிந்தபோது, இன்னுமொரு பெரிய மற்றும் சிறந்த கோட்டையை உருவாக்க அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள். நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் போது அனைத்தும் சிறப்பாக நடக்கிறது.
Available since: 05/06/2024.
Print length: 34 pages.

Other books that might interest you

  • Valmiki Ramayanam Part 6 - Yuddha Kandam - cover

    Valmiki Ramayanam Part 6 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    யுத்த காண்டத்தில் ராமர்  வானர சேனையுடன் கிஷ்கிந்தையிலிருந்து புறப்பட்டு தெற்குக் கடற்கரையை அடைவது, இலங்கையில் ராவணனுக்கு அறிவுரை சொன்ன தம்பி விபீஷ்ணன் ராவணனின் கோபத்துக்கு ஆளவது, விபீஷ்ணன் ராமரரிடம் வந்து சரணடைவது, கடலரசன் மீது ராமர் கோபத்தை வெளிப்படுத்துவது, கடலைக் கடந்து இலங்கை செல்லப்  பாலம் கட்டுவது, இலங்கைக்கு வந்து சேர்ந்து போரைத் துவங்குவது, ராவணன் மகன் இந்திரஜித்தால் தாக்கப் பட்ட ராம லக்ஷ்மணர்களை கருடன் குணப்படுத்துவது, ராவணனின் தம்பி கும்பகர்ணன் போரில் மடிவது, இந்திரஜித்தால் மீண்டும் படுகாயப் பட்ட ராம லக்ஷ்மணர்களை குணப்படுத்த அனுமார் ஸஞ்சீவனி மூலிகை மலையைத் தூக்கி வருவது, லக்ஷ்மணன் இந்திரஜித்தைக் கொல்வது, ராமர் கடைசியில் பிரம்மாஸ்திரம் கொண்டு ராவணனை வதம் செய்வது, சீதையைத் தீக்குளிக்கச் செய்து அவளது தூய்மையை உலகுக்கு நிரூபிப்பது, அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் எல்லாரும் திரும்பி வருவது, பதினான்காண்டு வனவாசம் முடிந்து வந்த ராமரை பரதன் வரவேற்பது, ராம பட்டாபிஷேகம் நடந்து மீண்டும் அயோத்தி மன்னராய் பொறுப்பேற்பது – ஆகியவை இடம்பெறுகின்றன.
    Show book
  • Pavalakkoti - cover

    Pavalakkoti

    Pukazhendi

    • 0
    • 0
    • 0
    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. 
    தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. 
    கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. 
    அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.
    Show book
  • Ayndhaavadhu Marundhu - cover

    Ayndhaavadhu Marundhu

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை சித்தரிக்கும் ஒரு சிறுகதை . இவ்விரு ஆற்றல்களுக்கும் இடையே இருந்தாக வேண்டிய இன்றியமையாத ஒத்திசைவை சற்றும் பொருட்படுத்தாது மனிதன் எங்ஙனம் இயற்கையிலிருந்து விலகிச் செல்கிறான் என்பதை சொல்லும் கதை. இயற்கையின் விதிகளை அவன் எந்த அளவுக்கு உதாசீன படுத்துகிறான் என்பதைச் சொல்லும் ஓர் படைப்பு.
    Show book
  • Avvaiyar Nalvazhi - Tamil Audio Book - நல்வழி - ஔவையார் பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Nalvazhi - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    நல்வழி பாடல் என்பது ஒளவையார் எழுதிய நற்பண்பு மற்றும் ஒழுக்கக் கவிதைகளின் தொகுப்பு. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்க்கை நெறி, ஒழுக்கம், மரியாதை மற்றும் நல்லொழுக்கப் பயிற்சிகளை எளிமையாக கற்றுத்தரும் இந்த நூல், தமிழ் கல்வி மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குகிறது. 
    Show book
  • Valmiki Ramayanam Part 4 - Kishkintha Kandam - cover

    Valmiki Ramayanam Part 4 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    கிஷ்கிந்தா காண்டத்தில் ராமர் அனுமனையும் சுக்ரீவனையும் சந்திப்பது, சுக்ரீவனுடன் நட்பு கொள்வது, வாலி-சுக்ரீவன் கதை, ராமர் வாலியைக் கொன்று, சுக்ரீவனை வானர அரசனாக்குவது, சுக்ரீவன் தன் வானரர்களை சீதையைத் தேடும் பணியில் அனுப்புவது, அங்கதன் தலைமையில் தெற்கே செல்லும் வானரர் படை, கழுகு சம்பாதியின் மூலம் சீதை இலங்கையில் இருப்பதை அறிவது, ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பறந்து செல்லத் தயாராவது – ஆகியவை இடம் பெறுகின்றன.
    Show book
  • Avvaiyar Moothurai - Tamil Audio Book - மூதுரை - ஔவையார் - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Moothurai - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    மூதுரை – ஒளவையார்: தமிழ் இலக்கியத்தின் பொற்கால படைப்புகளில் ஒன்றான மூதுரை,  ஒளவையார் அவர்களால் இயற்றப்பட்டது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்வியல் நெறிகளை எளிமையான மற்றும் இனிமையான சொற்களில் போதிக்கும் இந்த நூல், ஒழுக்கம், நற்பண்புகள், கல்வி, மரியாதை போன்றவற்றை கற்றுத்தரும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. பள்ளிக் கல்வியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மூதுரை, தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறப்புமிக்க நூலாகும். மூதுரை தமிழ் கலாசாரத்தையும், நல்லொழுக்கப் பாதையையும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரிய பொக்கிஷமாகும்.
    Show book