Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
விவேக்கின் 1000 நிமிஷங்கள் - cover

விவேக்கின் 1000 நிமிஷங்கள்

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

ஏர்ஃபோர்ட் வழியில் - ரோட்டோரமாய் மரங்களுக்கு மத்தியில் மறைந்து நின்றிருந்தது. அந்த ஜோர்டான் மெர்ஸிடிஸ் 500 SPL மாடல் ஜீப். இந்த நூற்றாண்டின் அதிவேக ஜீப் உச்சபட்ச வேகம் நூற்றி ஐம்பது கிலோமீட்டர்.ஜீப்புக்குள் அவனும் அவளும் காத்திருந்தார்கள்.அவன்? - மனோஅவள்? - தேவி.இருபத்தைந்து வயதான மனோ - ஒரு ராயல் ஷுட்டர். கடந்த இரண்டு வருஷ காலமாய் இந்தியாவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பாயிண்ட்டுகளை குவித்து ராயல் ஷுட்டர் பெயரை வாங்கிக் கொண்டவன். எந்த ரக துப்பாக்கியானாலும் சரி... அது மனோவின் கைகளுக்கு வந்து விட்டால், அவன் சொன்னபடி தான் கேட்கும் அவன் ‘எய்ம்’ பண்ணுகிற இடத்தில்தான் தோட்டாவை அனுப்பும். பிடிவாதமான உயரம் ‘வினோத் கன்னா’வை ஞாபகம் படுத்துகிற இறுக்கமான முகம்.இருப்த்தேழு வயதான தேவி, துப்பாக்கி சுடுவதில் பயிற்சி பெறுவதற்காக மனோவிடம் மாணவியாக சேர்ந்து, பின் காதலியாக பிரமோஷன் வாங்கிக் கொண்டவள் ஏர்ஹோஸ்டல் வேலைக்கு அப்பிளிகேஷன் போட்டால் - தயக்கம் காட்டாமல் ‘ஏர் இந்தியா’ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வழங்குகிற அளவுக்கு அழகு யோக்கியாதாம்சங்கள்.இரண்டு பேரும் ஸ்டோன்வாஷ் பேண்ட் ஷர்ட்டுக்குள் நுழைந்து இருந்தார்கள். கண்களில் பைனாகுலர் கண்ணாடி.“மனோ...”“ம்…”“அந்த பிளாஸ்க்கை எடுங்க...”“என்ன காப்பியா.”“ஆமா...”“இப்பத்தானே பத்து நிமிஷத்துக்கு முன்னாடி கொட்டிகிட்டே?”“அது எப்பவோ ஆவியா போயிடுச்சு...”“நாமென்ன பிக்னிக்கா வந்திருக்கோம்.... பிஸ்கெட்டை. கொரிச்சிட்டு காப்பி சாப்பிட்டுகிட்டு...! சை! உன்னை கூட்டிக்கிட்டு வந்திருக்கக்கூடாது...?”“ஸாரி... மனோ...’’“இதோ பார் தேவி... இங்கே காத்திட்டிருக்கிறது ஒரு காக்காயையோ குருவியையோ சுடறதுக்கு இல்லை. லாஸ்வேகா நாட்டுப் பிரதமர் ஆர்லேண்டோவை இந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கியாலே சுட்டுக் குதறத்தான் மத்தியானம் மூணு மணியிலிருந்து உட்கார்ந்திட்டிருக்கோம்.”“எனக்குத் தெரியாதா என்ன...?”“அந்த சீரியஸ்னெஸ்ஸே உன்கிட்டே இல்லையே...? மரத்துல வந்து உட்கார்ற குருவிகளைப் பார்க்கிறதும் - ரோட்ல போற கார்களை எண்ணறதும். பத்து நிமிஷத்துக்கொரு ‘க்ராக் ஜாக்’ பிஸ்கெட்டை கொரிச்சு காப்பியை விழுங்கறதும்...”“சரி... இனிமே நான் சீரியஸ்” - தேவி பைனாகுலரைப் பொருத்தி கொண்டு தொலைவில் தெரிந்த ஏர்ஃபோர்ட்டைப் பார்த்தாள். விமானம் ஒன்று புறப்படும் தருவாயில் ப்ரொப்பலர்களை சுழற்றிக் கொண்டிருந்தது.“ஆர்லேண்டோவுக்கு செக்யூரிட்டி ஏற்பாடுகள் எப்படியிருக்குன்னு பார்...?”பைனா குலரை நகர்த்தினாள் தேவி. உதடுகள் 0 வடிவத்தில் குவிந்தது..
Available since: 02/08/2024.
Print length: 87 pages.

Other books that might interest you

  • Detective DK - The First Case: Maranathin Marupakkam - A Perfect Crime One Flaw - cover

    Detective DK - The First Case:...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தரும் உண்மைகள்! 
    Miga sirandha thittamidhaludan seyyappatta kolai... anaitthu saatchiyangalaiyum azhithu, pudhiya adaiyaalathudan vaazhntha kolaiali... aana ore oru siriya thavaru avarai sikka vaithadhu. Andha thavaru enna? Eppadi andha thavaru avarai kaattikoduthadhu? DK-vin ariviyal poorvamaana visaranaiyil velivarum adhirshti tharum unmaigal! 
    A perfect crime. No evidence. A killer who vanished into a new identity. But one small mistake brings everything crashing down. What was that mistake? How did Detective DK uncover the shocking truth through pure logic and science? Dive into a gripping Tamil crime thriller where every page pulls you closer to a mind-blowing revelation. 'Maranathin Marupakkam' is the first intense case of Detective DK - a brilliant investigator with a sharp eye for hidden details. This is not just a story - it’s a psychological puzzle, a race against time, and a face-off with death.
    Show book
  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Show book
  • Varnavin Maranam - cover

    Varnavin Maranam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar. 
    இளமாறன் தன் மனைவி செவ்வந்தியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரோ திட்டமிட்டு செய்த கொலையா? மூன்று மரணங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள். ராஜேஷ் குமாரின் "வர்ணாவின் மரணம்" நாவல் - முழு ஆடியோ புக்.
    Show book
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Show book
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Show book
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Show book