Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
மரணத்திற்கு ஒரு மனு - cover

மரணத்திற்கு ஒரு மனு

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

பனி மெலிதாய் பெய்து கொண்டிருந்த அந்த ஆறரை மணி நேர அந்தி நேரத்தில் மலைச்சரிவில் வளைந்து வளைந்து போயிருந்த பாதையில் நிதானமாய் நடக்க ஆரம்பித்தான் பவித்ரன்.மலைச்சரிவு முழுவதும் சதுர சதுரமான பாத்திகளில் பெயர் தெரியாத தோட்டப் பயிர்கள் ஆரோக்கியமாய் பயிராகியிருந்தது. அவன் பஸ்ஸிலிருந்து இறங்கிய அந்த நிமிஷத்தைவிட இந்த நிமிஷம் காற்றில் குளிர் ஏறியிருந்தது. மூக்கின் நுனியும் காதுகளின் நுனிகளும் ஐஸ்கட்டி மாதிரி குளிர்ந்து போயிருந்தது.பவித்ரன் நடந்தான். அந்த டீக்கடை ஆள் சொன்ன மாதிரி வழி பூராவும் இருட்டாயிருந்தது. சில இடங்களில் பனி அடர்த்தியாய் வழியில் உட்கார்ந்திருந்தது.சுத்தமாய் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்த பிறகு - மரங்களுக்கு மத்தியில் - அந்த பழங்கால பங்களா தெரிந்தது. ஒரேயொரு ஜன்னல் மட்டும் வெளிச்சத்தில் தெரிய மற்ற ஜன்னல்கள் எல்லாம் இருட்டில் இருந்தன. பங்களாவுக்கு அரண் போட்ட மாதிரி முள்வேலி தெரிய அதைச் சுற்றிக் கொண்டு போனான்.மரச்சட்டங்களால் ஆன கேட் வந்தது. கேட் ஓரமாய் வாட்ச்மேன் கூண்டு தெரிந்தது. அதில் யாரோ உட்கார்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள்.கேட்டுக்கு முன்பாக வந்து நின்றான் பவித்ரன். கேட்டின் மரச்சட்டத்தை ‘டொக்’ என்று கையால் தட்டினான்.அந்த உருவம் அசையாமல் கூண்டுக்குள் உட்கார்ந்திருந்தது.“அய்யா...” குரல் கொடுத்தான்.“............”“அய்யா...” பவித்ரன் கொடுத்த குரலுக்கு பதிலாய் புகை மட்டும் கூண்டுக்குள்ளிருந்து வந்தது. அவன் காம்பவுண்ட் கேட்டை பலமாய்த் தட்டி “அய்யா” என்று கத்தினான்கூண்டுக்குள்ளிருந்து எந்த அசைவும் இல்லை. புகை மட்டும் வெளியேறிக் கொண்டிருந்தது. ‘ஒருவேளை வாட்ச்மேனுக்கு காது செவிடோ...?’ பவித்ரன் பொறுமையில்லாமல் காம்பவுண்ட் கேட்டை எக்கிப் பார்த்தான். கேட்டின் உள் பக்கமாய் தாழ்ப்பாள் கழண்டிருக்கவே தள்ளினான். கேட் காதுக்குப் பிடிக்காத சத்தத்தோடு கிர்ர்ர் என்று உள்ளே போக, பவித்ரன் ப்ரீப்கேஸை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.கூண்டை நோக்கி மெதுவாய் நடந்தான். கூண்டை நெருங்க... நெருங்க... சுருட்டு வாசம் குப்பென்று அடித்தது. கூண்டை நெருங்கி உள்ளே எட்டிப் பார்த்தான். கூண்டுக்குள் யாரோ சாய்ந்து உட்கார்ந்திருந்தார்கள். இருட்டில் முகம் தெரிய மறுத்தது.“அய்யா...”பேச்சில்லை... மூச்சில்லை...“அய்யா...” சொல்லிக் கொண்டே தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை உருவி எடுத்து தீக்குச்சியைப் பற்ற வைத்து ஒரு சின்ன நெருப்புப் பிழம்பை உண்டாக்கினான். அந்த வெளிச்சப் பிழம்பை கூண்டுக்குள் கொண்டு போய் அதன் இருட்டை விரட்டிப் பார்த்தான்.இருதயம் ஒருமுறை உதறிக் கொண்டது. உள்ளே காக்கி உடை யூனிபார்மில் இருந்த அந்த வாட்ச்மேன் கிழவன் கூண்டுக்குள் சாய்ந்து கால்களை வெளியே நீட்டியிருந்தான். கண்கள் வெறித்துப் பார்க்க, கைகள் தொய்ந்து போயிருந்தன. வாயிலிருந்த சிகரெட் மட்டும் உயிரோடு கனன்று புகையை வளர்த்துக் கொண்டிருந்தது.“அய்யா.”அவரைத் தொட்டான் பவித்ரன்.வாட்ச்மேன் கிழவன் ஒரு பக்கமாய் சாய, சுருட்டு கூண்டுக்கு வெளியே எகிறி விழுந்தது
Available since: 01/13/2024.
Print length: 94 pages.

Other books that might interest you

  • Jeiyppathu Nijam - cover

    Jeiyppathu Nijam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இலட்சியா -95 அதி நவீன ரக விமானத்தை பற்றிய சில இரகசிய குறிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு விற்க படுவதாக இரகசிய தகவல் டெல்லியில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி ஃபோர்ஸிடமிருந்து தகவல், சென்னையில் உள்ள விவேக்கிற்கு வர உடனே டெல்லிக்கு விரைகிறான்.
    இலட்சியா -95 பற்றிய சில இரகசிய தகவல்கள் சேட்டர்ஜி, மெஹரா மற்றும் விஷ்ணு வர்த்தன் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும், இதில் இருவர் கொல்லப்படுகின்றனர். கடைசியில் தீவிர இரகசிய குழுவில் உள்ள ஒரு கருப்பாடு யார்? என்று கண்டறிந்த இரகசியங்களை எவ்வாறு மீட்கின்றனர் என்பதை அறிய கேளுங்கள் ஜெயிப்பது நிஐம்..
    Show book
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Show book
  • Abaaya Malli - cover

    Abaaya Malli

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    When horror meets Romance, it is Abaaya Malli! Are ghosts real? Ghosts are better than traitors! With research done on ghosts, this is an enthralling story!
    
    திகிலும் காதலுமான மர்மக்கதை. ஆவிகள் உண்மையா? ஆவிகளை விட கொடியவர்கள் துரோகிகள். ஒரு ஆவியுலக ஆய்வு கொண்ட பரபரப்பான புதினம்.
    Show book
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Show book
  • Vittu Vidu Karuppaa - cover

    Vittu Vidu Karuppaa

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    The village of Vettaikara Mangalam has a strange rule. Only if the village deity Karuppusamy approves, will the villagers do anything. A doctor falls in love with Ratna, a young girl from the village. When he proposes, she asks him to seek the approval of Karuppusamy. Who is this Karuppusamy? Doctor Neena comes in search of the answer. What does she find out? Listen to Vittu Vidu Karuppa.
    
    வேட்டைக்காரன் மங்கலம் கருப்புசாமி துடியான சாமி. இந்த சாமி உத்தரவு தந்தால் தான் யாரும் எதையும் செய்யலாம். இந்த ஊரை சேர்ந்த ரத்னாவை டாக்டர் ஒருவர் காதலிக்க ரத்னா கருப்பு உத்தரவு தராது என்னை காதலிக்காதே என்கிறாள். கருப்பு யார் காதலிக்க அனுமதி தர? டாக்டர் நீனா என்பவள் உண்மையை கண்டறிய வருகிறாள். கண்டுபிடித்தாளா?
    
    ஒரு கிராமத்து மர்மம் தான் விட்டு விடு கருப்பா!
    Show book
  • Detective DK - The First Case: Maranathin Marupakkam - A Perfect Crime One Flaw - cover

    Detective DK - The First Case:...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தரும் உண்மைகள்! 
    Miga sirandha thittamidhaludan seyyappatta kolai... anaitthu saatchiyangalaiyum azhithu, pudhiya adaiyaalathudan vaazhntha kolaiali... aana ore oru siriya thavaru avarai sikka vaithadhu. Andha thavaru enna? Eppadi andha thavaru avarai kaattikoduthadhu? DK-vin ariviyal poorvamaana visaranaiyil velivarum adhirshti tharum unmaigal! 
    A perfect crime. No evidence. A killer who vanished into a new identity. But one small mistake brings everything crashing down. What was that mistake? How did Detective DK uncover the shocking truth through pure logic and science? Dive into a gripping Tamil crime thriller where every page pulls you closer to a mind-blowing revelation. 'Maranathin Marupakkam' is the first intense case of Detective DK - a brilliant investigator with a sharp eye for hidden details. This is not just a story - it’s a psychological puzzle, a race against time, and a face-off with death.
    Show book