¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
மரணத்திற்கு ஒரு மனு - cover

மரணத்திற்கு ஒரு மனு

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

பனி மெலிதாய் பெய்து கொண்டிருந்த அந்த ஆறரை மணி நேர அந்தி நேரத்தில் மலைச்சரிவில் வளைந்து வளைந்து போயிருந்த பாதையில் நிதானமாய் நடக்க ஆரம்பித்தான் பவித்ரன்.மலைச்சரிவு முழுவதும் சதுர சதுரமான பாத்திகளில் பெயர் தெரியாத தோட்டப் பயிர்கள் ஆரோக்கியமாய் பயிராகியிருந்தது. அவன் பஸ்ஸிலிருந்து இறங்கிய அந்த நிமிஷத்தைவிட இந்த நிமிஷம் காற்றில் குளிர் ஏறியிருந்தது. மூக்கின் நுனியும் காதுகளின் நுனிகளும் ஐஸ்கட்டி மாதிரி குளிர்ந்து போயிருந்தது.பவித்ரன் நடந்தான். அந்த டீக்கடை ஆள் சொன்ன மாதிரி வழி பூராவும் இருட்டாயிருந்தது. சில இடங்களில் பனி அடர்த்தியாய் வழியில் உட்கார்ந்திருந்தது.சுத்தமாய் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்த பிறகு - மரங்களுக்கு மத்தியில் - அந்த பழங்கால பங்களா தெரிந்தது. ஒரேயொரு ஜன்னல் மட்டும் வெளிச்சத்தில் தெரிய மற்ற ஜன்னல்கள் எல்லாம் இருட்டில் இருந்தன. பங்களாவுக்கு அரண் போட்ட மாதிரி முள்வேலி தெரிய அதைச் சுற்றிக் கொண்டு போனான்.மரச்சட்டங்களால் ஆன கேட் வந்தது. கேட் ஓரமாய் வாட்ச்மேன் கூண்டு தெரிந்தது. அதில் யாரோ உட்கார்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள்.கேட்டுக்கு முன்பாக வந்து நின்றான் பவித்ரன். கேட்டின் மரச்சட்டத்தை ‘டொக்’ என்று கையால் தட்டினான்.அந்த உருவம் அசையாமல் கூண்டுக்குள் உட்கார்ந்திருந்தது.“அய்யா...” குரல் கொடுத்தான்.“............”“அய்யா...” பவித்ரன் கொடுத்த குரலுக்கு பதிலாய் புகை மட்டும் கூண்டுக்குள்ளிருந்து வந்தது. அவன் காம்பவுண்ட் கேட்டை பலமாய்த் தட்டி “அய்யா” என்று கத்தினான்கூண்டுக்குள்ளிருந்து எந்த அசைவும் இல்லை. புகை மட்டும் வெளியேறிக் கொண்டிருந்தது. ‘ஒருவேளை வாட்ச்மேனுக்கு காது செவிடோ...?’ பவித்ரன் பொறுமையில்லாமல் காம்பவுண்ட் கேட்டை எக்கிப் பார்த்தான். கேட்டின் உள் பக்கமாய் தாழ்ப்பாள் கழண்டிருக்கவே தள்ளினான். கேட் காதுக்குப் பிடிக்காத சத்தத்தோடு கிர்ர்ர் என்று உள்ளே போக, பவித்ரன் ப்ரீப்கேஸை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.கூண்டை நோக்கி மெதுவாய் நடந்தான். கூண்டை நெருங்க... நெருங்க... சுருட்டு வாசம் குப்பென்று அடித்தது. கூண்டை நெருங்கி உள்ளே எட்டிப் பார்த்தான். கூண்டுக்குள் யாரோ சாய்ந்து உட்கார்ந்திருந்தார்கள். இருட்டில் முகம் தெரிய மறுத்தது.“அய்யா...”பேச்சில்லை... மூச்சில்லை...“அய்யா...” சொல்லிக் கொண்டே தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை உருவி எடுத்து தீக்குச்சியைப் பற்ற வைத்து ஒரு சின்ன நெருப்புப் பிழம்பை உண்டாக்கினான். அந்த வெளிச்சப் பிழம்பை கூண்டுக்குள் கொண்டு போய் அதன் இருட்டை விரட்டிப் பார்த்தான்.இருதயம் ஒருமுறை உதறிக் கொண்டது. உள்ளே காக்கி உடை யூனிபார்மில் இருந்த அந்த வாட்ச்மேன் கிழவன் கூண்டுக்குள் சாய்ந்து கால்களை வெளியே நீட்டியிருந்தான். கண்கள் வெறித்துப் பார்க்க, கைகள் தொய்ந்து போயிருந்தன. வாயிலிருந்த சிகரெட் மட்டும் உயிரோடு கனன்று புகையை வளர்த்துக் கொண்டிருந்தது.“அய்யா.”அவரைத் தொட்டான் பவித்ரன்.வாட்ச்மேன் கிழவன் ஒரு பக்கமாய் சாய, சுருட்டு கூண்டுக்கு வெளியே எகிறி விழுந்தது
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 94 páginas.

Otros libros que te pueden interesar

  • Vivek In Tokyo - cover

    Vivek In Tokyo

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார். அங்கு இடையூறுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக ரகசிய உளவுத்துறை அதிகாரிகளான விவேக் மற்றும் விஷ்ணுவின் உதவியை நாடுகிறார். அதற்குப் பின் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. யார் உண்மையான குற்றவாளி என்று அறிந்து கொள்ள கேளுங்கள் விவேக் இன் டோக்கியோ!
    Ver libro
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Ver libro
  • Detective DK - The First Case: Maranathin Marupakkam - A Perfect Crime One Flaw - cover

    Detective DK - The First Case:...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தரும் உண்மைகள்! 
    Miga sirandha thittamidhaludan seyyappatta kolai... anaitthu saatchiyangalaiyum azhithu, pudhiya adaiyaalathudan vaazhntha kolaiali... aana ore oru siriya thavaru avarai sikka vaithadhu. Andha thavaru enna? Eppadi andha thavaru avarai kaattikoduthadhu? DK-vin ariviyal poorvamaana visaranaiyil velivarum adhirshti tharum unmaigal! 
    A perfect crime. No evidence. A killer who vanished into a new identity. But one small mistake brings everything crashing down. What was that mistake? How did Detective DK uncover the shocking truth through pure logic and science? Dive into a gripping Tamil crime thriller where every page pulls you closer to a mind-blowing revelation. 'Maranathin Marupakkam' is the first intense case of Detective DK - a brilliant investigator with a sharp eye for hidden details. This is not just a story - it’s a psychological puzzle, a race against time, and a face-off with death.
    Ver libro
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Ver libro
  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Ver libro
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Ver libro