Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
கற்பனையோ அற்புதமோ! - cover

கற்பனையோ அற்புதமோ!

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

அம்மா!” என்று, தன் ‘சன்னி’யைக் கிளப்பியவாறே உரக்க அழைத்தாள் சித்ரகலா. “நான் ஸ்கூலுக்குப் போய்விட்டு வருகிறேன்...” என்று அவள் கூறிக் கொண்டிருந்தபோதே, அவளுடைய அன்னை மாலினி வந்து சேர்ந்தாள்.கையிலிருந்த உணவு பாக்கெட், தண்ணீர் அடங்கிய பையை ‘சன்னி’யில் தொங்கவிட்டவள், “சரிதான்மா, போய் நல்ல பிள்ளையாய்ப் படித்துவிட்டு வாடாம்மா, கண்ணு!” என்று உருக்கமாய்க் கூறவும் தாய் மகள் இருவருக்கும் சிரிப்பு வந்தது.“நூற்றுக்கு ஒரு பத்து... அல்லது பதினைந்து மார்க் வாங்குகிற அளவு படித்தால் போதுமா?” என்று மகள் அப்பாவியாய்க் கண்களை விரிக்க, “சேச்சே! அவ்வளவு கஷ்டப்படாதே, கண்மணி! சும்மா ஓர் ஐந்து, ஆறு மதிப்பெண் எடுத்தால் போதாது?” என்று கேட்க மீண்டும் சதங்கை ஓசையாய் நகையொலி கலகலத்தது.“ம்கூம்! அந்தக்காலத்தில் நீங்கள் என்ன மாதிரி படித்தீர்கள் என்று இப்போது தெரிகிறது. இருக்கட்டும், உங்களை வந்து பேசிக் கொள்கிறேன்!” என்று செல்ல மிரட்டலுடன் வண்டியைக் கிளப்பிச் சென்றாள் மகள்.வெறும் ‘பான்ட்’ மட்டும் மாட்டி விட்டிருந்த நீளக் கூந்தல் காற்றில் பறக்க, எழில் ஓவிமாய்ச் சென்ற மகளின் அழகை ரசித்தபடி நின்றிருந்த மாலினிக்குத் திடுமென உள்ளூரத் திக்கென்றதுபெற்றவளின் கண்தானே பிள்ளைகளுக்கு ஆதாரம்!சேச்சே! அதெல்லாம் சும்மா! பெற்று வளர்த்த தாயார் அன்பாய் ஆசையாய்ப் பார்ப்பதனாலேயே பிள்ளைகளுக்குக் கெடுதல் நேருமா, என்ன? வெறும் கதை!... ஆனாலும், ‘என் மகளை எந்தத் தீமையும் அணுகாமல் கூடவே துணையிருந்து காப்பாற்று, முருகா!’ என்றும் வேண்டிக் கொண்டது அந்த அன்னை மனம்
 
தாயின் மனதில் இப்படி ஒரு சில சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், தான் செல்ல வேண்டிய இடத்தை நல்லபடியாகவே சென்றடைந்தாள் சித்ரகலா.‘காது கேளாதோர், வாய் பேசாதோர்’ பள்ளி அது அவளது பள்ளி இறுதி ஆண்டிலும், கல்லூரி நாட்களிலும் ‘வாலன்டரி வொர்க்’காக அவ்வப்போது இங்கு வந்து. அவள் பணியாற்றினாள். ஏனோ, மனதிற்கு மிகவும் பாந்தமாக இருக்கவே, படிப்பு முடிந்தபின், இங்கு ஒரு முழுநேர ஆசிரியையாகப் பணி செய்யத் தொடங்கினாள்.அவளுடைய தாயார் மாலினிக்கு முதலில் இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ‘பொழுது போகவில்லை என்றால் மேலே படி, படிப்பு விருப்பம் இல்லை என்றால் தையல், பெயிண்டிங், கம்ப்யூட்டர் கோர்ஸ் எதிலாவது சேர். எல்லாம் விட்டு, இது எதற்கு? முதலில் பணி, தொண்டு என்று பெருமையாக இருந்தாலும், எப்போதும் அந்தப் பிள்ளைகளின் இழப்பை எண்ணி ஒரு வேதனையுடனேயே வேலை செய்ய வேண்டும் உனக்கு ஏனம்மா இந்தத் தலையெழுத்து?” என்று மகளைத் தடுக்க முயன்றாள்.“எல்லோரும் இப்படியே நினைத்து விலகிப் போனால் யார் அம்மா அவர்களுக்கு உதவுவார்கள்?” என்று திருப்பிக் கேட்டாள் மகள்.“சம்பளத்திற்காக வருகிறவர்கள் இருப்பார் என்று சொல்லாதீர்கள், மன ஈடுபாடு இல்லாமல் வெறும் கூலிக்காக உழைக்கிற உழைப்பு இங்கே போதாது!” என்று கூறிப் பிடிவாதமாக இந்த வேலையில் சித்ரகலா ஈடுபட்டாள்.ஆனால், அவளை அறிந்த அவளுடைய அன்னை சொன்னது உன்மையில், உள்ளூர ஒரு சிறு வருத்தம் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் அந்தப் பிள்ளைகளின் சாதனைகளைப் பார்க்கும்போது அவளுக்கு மகிழ்ச்சியும் அதிகமாகவே இருந்தது. அவர்கள் செய்த கைவினைப் பொருட்களைக் கொண்டுவந்து காட்டியபோது, மாலினியே மிகவும் ஆச்சரியப்பட்டாள். அவ்வளவு நேர்த்தி அவற்றில்! இல்லாத புலன்களின் சக்தியெல்லாம் இருக்கிற மற்ற புலன்களில் வந்து அதிகப்படியாகச் சேர்ந்துவிட்டது போல அவ்வளவு திறமையோடு செய்யப்பட்டிருந்தன
Available since: 04/03/2025.
Print length: 252 pages.

Other books that might interest you

  • Oru Naal - cover

    Oru Naal

    Ka Naa Subramaniam

    • 0
    • 0
    • 0
    Recommended by Author Jeyamohan as one of the Top 100 novels in Tamil, this story narrates one day from the life of Major Murthy who has come to visit his maternal uncle in a small village. Philosophical and deep thoughts are embedded in a simple story. 
    மேஜர் மூர்த்தியின் வாழ்க்கைச்சுவடியிலிருந்து ஒரு நாளை அழகாய் படம்பிடித்துக் காட்டி இருக்கிறார் க. நா. சு இந்த நாவலில். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இணையத்தளத்தில் தமிழில் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ள புத்தகம்.
    Show book
  • Elam Thirumurai - cover

    Elam Thirumurai

    Sundarar

    • 0
    • 0
    • 0
    தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் பாடியுள்ளார்கள். 
    முதல் இருவரும் கி.பி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. 
    தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர். 
    திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். 
    சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம். 
    10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்
    Show book
  • சுயசரிதை - cover

    சுயசரிதை

    Bharathiyaar

    • 0
    • 0
    • 0
    மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விவரிக்கின்றது. 
    பாரதி அறுபத்தாறு என்ற பகுதியில் ‘எனக்கு முன்னே பல சித்தர்கள் இருந்தனர், யானும் வந்தேன் – ஒரு சித்தன் இந்நாட்டில்’ என்று தன்னையும் ஒரு சித்தனாக அறிமுகப்படுத்திக் கொண்டு துவங்குகிறார். கடவுள் வாழ்த்து, மரணத்தை வெல்லும் வழி, கடவுள் எங்கே இருக்கிறார்? சினத்தின் கேடு. பொறுமையின் பெருமை, குள்ளச்சாமி கதை, கோவிந்தசாமி புகழ், யாழ்ப்பாணத்து சாமி புகழ், குவளைக்கண்ணன் புகழ் என்று செல்லும் இப்பாடல் பெண் விடுதலை, தாய் மாண்பு, காதலின் புகழ் என்று தொடர்கிறது. சர்வமத சமரசம் என்ற முத்தாய்ப்போடு பாடல் முடிகிறது. மாங்கொட்டைசாமி மற்றும் குள்ளச்சாமி எனுப்படும் சித்தர் – அவரையே பாரதி – தன் மோனகுரு - கோவிந்தசாமி மற்றும் யாழ்ப்பாணத்துச்சாமி ஆகியோரின் நேரடித் சந்திப்புகள் பாரதியின் ஆன்ம தாகத்திற்கு உரமூட்டின. 
    ரமணி இந்நூலை ஒலி நூலாக்கியிருக்கிறார்.
    Show book
  • விருத்தம் - வேல் விருத்தம் மயில் விருத்தம் சேவல் விருத்தம் - cover

    விருத்தம் - வேல் விருத்தம் மயில்...

    நிலோபர் அன்பரசு

    • 0
    • 0
    • 0
    வேல் விருத்தம் என்னும் நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் அருணகிரிநாதர் வேல் விருத்தம் என்னும் பெயரில் 10 சந்தப்பாடல்கள் கொண்ட நூல் ஒன்றைச் செய்துள்ளார். முருகப் பெருமானின் வேல் இதில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது. கடலின் மத்தியில் மாமரமாய் நின்ற சூரபத்மாவின் மேல் வேலை எறிந்த போது வேலின் வெப்பத்தை தாங்க முடியாமல் கடல் நீர் ஆவியாகி அடியில் சேறு மட்டும் இருந்தது. வேலாயுதத்தின் வேகத்தில் மேகங்களின் உட்பகுதி சுழற்சி அடைந்து மழை பெய்கிறது. தன் அடியார்களின் குறைகளை தீர்ப்பதற்காக விநாயகப் பெருமானுக்கு தழைத்த பெரிய செவிகள் உள்ளன. அடியார்களின் பகையை ஓட்டுவற்காக அவருக்கு நெற்றியில் மூன்றாவது கண் போன்ற செய்திகள் இதில் காணப்படுகின்றன. 
    மயில் விருத்தம் என்னும் நூல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது. சந்தப்பாக்களால் ஆன நூல். இந்த நூலில் விநாயகர் காப்புச் செய்யுளையும் சேர்த்து 11 பாடல்கள் உள்ளன. முருகப் பெருமானின் மயில் ஊர்தி இந்த நூலில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது. விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொல்லாமல் தன்னுடைய அருளுக்குப் பாத்திரமாக தனது வாகனமாகக்கொண்டது அவரது தனிப் பெருங் கருணையே. சரவணப் பொய்கையில் ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகள் வடிவம் எடுத்து தாமரை மலரில் பள்ளி கொண்டதை ராஜீவ பரியங்க என அழகுபட கூறுவார் அருணகிரியார். 'பரியங்க' என்ற சொல்லுக்கு 'கட்டில்' என்பது பொருள். 
    சேவல் விருத்தம் சந்தப்பாக்களால் ஆன நூல். இந்த நூலில் விநாயகர் காப்புச் செய்யுளையும் சேர்த்து 11 பாடல்கள் உள்ளன. சைவ சித்தாந்தத்தில் உள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று, 'ஒரு ஜீவன் இரு வினைகளினால் அடிபட்டு அடிபட்டு பக்குவப்படும் சமயம், பராசக்தி அந்த ஜீவனின் இருவினைகளையும் சமன்படுத்தி, மும்மலங்களையும் ஒழித்து, முக்தி நிலைக்கு சேர்ப்பிப்பாள்'. இந்த அரும் பெரும் தொழிலை குமரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலும் செய்து கொடுக்கும் என்பதை அருணகிரியார் குறிப்பிடுகிறார். 
    ரமணியின் நேர்த்தியான சந்த ஓசையில் இந்த மூன்று விருத்தங்களையும் கேட்கலாம்.
    Show book
  • Irunta Veetu - cover

    Irunta Veetu

    Bharathidasan

    • 0
    • 0
    • 0
    ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தில் தலைவன், தலைவி, மகன் மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர்களின் அன்றைய நிகழ்வுகள் வாயிலாக எப்படி ஒரு குடும்பம் இருக்கக்கூடாது என்பதை பாரதிதாசன் தனது கவிதை நடையில் பொருட்பட புனைந்துள்ளார். எந்த ஒரு குடும்பத்தில் சோம்பேறி குணமும், மூட நம்பிக்கைகளும் இருக்கின்றனவோ அவையே "இருண்ட வீடு'. குடும்பத் தலைவர் வாணிகத்தின் வழியாகப் பொருள் ஈட்டுகிறார். அவருக்குச் சிற்றம்பலம் என்பவர் கடன் கொடுக்க வேண்டும். இந்தச் சிற்றம்பலம் கடனைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடிவிடத் திட்டம் தீட்டியிருந்தார். இதை அறிந்த தலைவரின் நண்பர் ஒருவர், இச்செய்தியைக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார். தலைவரின் வீட்டுக்கு வந்த கடிதத்தைத் தலைவி பார்த்தாள். அவள் கல்வி அறிவு இல்லாதவள். ஆதலால், அந்தக் கடிதத்தைத் திருமண அழைப்பிதழ் என்று எண்ணினாள்; அக்கடிதத்தை ஒரு வாரமாகத் தலைவரிடம் காட்டவில்லை. கடிதம் கிடைக்காததால் தலைவர், சிற்றம்பலத்திடம் பணம் வசூலிக்க உடனே ஆள் அனுப்பவில்லை. அவன் பணத்தைக் கொடுக்காமல் ஐதராபாத்திற்கு ஓடி விட்டான் என்ற செய்தியை அறிந்து தலைவர் வருந்தினார். தலைவி கல்வி அறிவு இல்லாதவள். எனவே, தலைவனுக்குப் பொருள் இழப்பு ஏற்படக் காரணமாகிவிட்டாள். பொருள் இழப்பு ஏற்பட்டதால் தலைவர் கோபம் கொண்டார். தலைவியும் ‘விட்டேனா பார்’ என்று சண்டைக்கு எழுந்தாள். இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு தலைவர் வெளியேறி விட்டார். தலைவர் தமது கோபத்தை உணர்த்தக் கருதியதால் வீட்டை விட்டு வெளியேற எண்ணினார். தலைவி தன்னை ‘வெளியே போக வேண்டாம்’ என்று சொல்லித் தடுப்பாள் என்று அவர் எதிர்பார்த்தார். கல்வி அறிவும் குடும்பப் பொறுப்பும் சிறிதும் இல்லாத தலைவிக
    Show book
  • Kanivu - cover

    Kanivu

    Ki Rajanarayanan

    • 0
    • 0
    • 0
    கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல் இலக்கியத்தின் முன்னோடி கி. ராஜநாராயணனின் தேர்ந்தெடுத்த 17 கதைகளின் தொகுப்பு இந்நூல். A collection of 14 selected short stories by well-knows writer Ki.Rajanarayanan. His charachters are as unique as his writing style. Writer Sundara Ramasamy describes the stories of Ki.Ra as a fruit garden of Tamil literary world. His aesthetics is unparalleled and he is considered a pioneer of literature from Karisal region in Tamil.
    Show book