¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
காத்திருக்கிறேன் ராஜகுமாரா - cover

காத்திருக்கிறேன் ராஜகுமாரா

ரமணிசந்திரன்

Editorial: Publishdrive

  • 0
  • 0
  • 0

Sinopsis

அந்தப் பழைய கால அரண்மனையின் அலங்கார மாடிப்படியில் தடதடவென்று இறங்கி வேகமாக ஓடிவந்தாள் அவள். மற்றவர் பார்க்குமுன் சென்று, வாயில் புறத்துத் தூணை தொட்டு விட்டால் அன்று அவளே வென்றவள் ஆவாள்.பின்புறமாய்ப் பார்வையைச் செலுத்தியபடியே விரைந்தோடி இறங்கியவள், மாடிப்படி வளைவில் நிதானமாக ஏறி வந்து கொண்டிருந்த அவன் மேல் நன்றாக மோதிக்கொண்டு விட்டாள்.அவள் ஓடிவந்த வேகத்துக்கு இருவருமே மிச்சப் படிகளை உருண்டுதான் கடந்திருக்க வேண்டும்.ஆனால் அவள் ஓடிவந்த சத்தம் கேட்டு ஏறி வந்தவன் தயாராயிருந்ததால் இருவருமே ரத்த காயமின்றித் தப்பினர்.அப்போதும் கால் தடுமாறியவளின் தோளை அழுந்தப் பற்றி, அவள் விழுந்து விடாமல் நிறுத்தினான் அவன்.மூச்சு வாங்க நின்றவளை ஏற இறங்க நோக்கியவனின் பார்வை கடைசியாக அவளது பூமுகத்தில் வந்து நிலைத்தது.பளீரிட்ட புன்னகையுடன், “என்ன அழகான முக அமைப்பு இன்னும் கொஞ்சம் வளர்ந்து, இன்னும் கொஞ்சம் மெலிந்து மேலே ஓர் ஐந்தாறு வயதேனும் கூடுதலாகவும் ஆகியிருந்தால், இப்போதே என் ராணி என்று அறிந்திருப்பேனே! பரவாயில்லை. அப்படி வளர்ந்த பிறகு வருகிறேன். அப்போது என்னையே மணப்பாயில்லையா, பிரின்சஸ்?” என்று ஆவலாகக் கேட்டவன், குனிந்து, அவளது பிரமித்த இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான்.அவள் திகைத்து விழிக்கவும், சிரித்து, அவளது குண்டுக் கன்னத்தில் லேசாக வருடி, அவளை வழியிலிருந்து விலக்கி, நிறுத்தி விட்டு மேலே ஏறிச் சென்றான்
 
கனவில் நடப்பது போல எங்கோ வெறித்தபடி நடந்து சென்றாள் மடந்தைப் பருவத்தில் அடியெடுத்து வைத்திருந்த அந்தச் சிறுமி
Disponible desde: 03/04/2025.
Longitud de impresión: 86 páginas.

Otros libros que te pueden interesar

  • Nakshatravilada Akasha - cover

    Nakshatravilada Akasha

    Kasturi Bayari

    • 0
    • 0
    • 0
    Short story by Kasturi Bayari
    Ver libro
  • Thiruvarutpa - Fifth Thirumurai - cover

    Thiruvarutpa - Fifth Thirumurai

    Vallalar

    • 0
    • 0
    • 0
    வள்ளலாரின் திருவருட்பா ஐந்தாம் திருமுறையில் 83 பதிகங்கள் உள்ளன. இவற்றின் பாடல்கள் முழுக்கக் கேட்பதற்கு இந்த ஒலிநூலை வாங்கிப் பயனடையுங்கள். இயற்றமிழுக்கு உரிய யாப்போசையில் இந்தப் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 
    முதலாம் திருமுறையிலிருந்து ஆறாம் திருமுறை வரை ஒவ்வொன்றும் ஒரு ஒலிநூலாக வெளியிடப்படும். 
    Vallalar's Thiruvarutpa Fifth Thirumurai is an anthology of 83 pathikams. Several hundreds of verses are there in the volume. This is the second in the series of Vallalar's work in the form of an audiobook. First to Sixth Thirumurai are presented as separate books each.
    Ver libro
  • Maduve Hennu - cover

    Maduve Hennu

    H S Shivaprakash

    • 0
    • 0
    • 0
    ಎಚ್.ಎಸ್.ಶಿವಪ್ರಕಾಶ್ ಅವರ "ಮದುವೆ ಹೆಣ್ಣು" ಜಪಾನೀಸ್ ನಾಟಕ "no" ಅನ್ನು ಆಧರಿಸಿದೆ.
    ನಾಟಕದಲ್ಲಿ, ತೊಂಡಾ ಬುಡಕಟ್ಟಿನ ಮದುಮಗನು ತನ್ನ ಮದುವೆಗೆ ಮೊದಲು, ತೊಂಡಾ ಬುಡಕಟ್ಟಿನ ಪದ್ಧತಿಯಂತೆ ಮನುಷ್ಯನ ತಲೆಯ ಬೇಟೆಗೆ ಹೋಗುತ್ತಾನೆ. ಗಂಡು ಸಿಗದ ಕಾರಣ, ಅವನು ಒಬ್ಬ ಮಹಿಳೆಯನ್ನು ಕೊಂದು...
    Ver libro
  • கவிஞன் - cover

    கவிஞன்

    Velliyankattan

    • 0
    • 0
    • 0
    வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார்.  "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. 
    ஒரு கவிஞனுக்குத் தேவை அவனை ஒரு கவிஞனென்று எந்த வரைகோடுகளும் இழுக்காமல் ஏற்றுக் கொள்ளும் பக்குவமே. அப்படித் தன்னை ஏற்றுக் கொள்ளக் கவிபாடும் நிகழ்வுகளின் நீரோட்டமே வெள்ளியங்காட்டான் அவர்களின் கவிஞன் என்ற நூல். //கவினுற உதித்தான் வானில்/ கதிரவன்; கங்குல் அஞ்சிப்/புவிதனை விரைந்து விட்டுப்/போயிற்ரு புகலை நாடி/ செவியினில் தீந்தேன் என்னச்/சிறுகுயில் இசைக்க மெல்லக்/கவிஞன் கண் மலர்ந்தான் செய்ய/ கமலங்கள் மலர்ந்தவாறே..// எனத் தொடங்குகிறது இந்தப் பாவியம். பேராசிரியர் ரமணி ஒலி நூலாக்கியிருக்கிறார்.
    Ver libro
  • Ponniyin Selvan Part 3 - cover

    Ponniyin Selvan Part 3

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    Listen to Amarar Kalki's Ponniyin Selvan audiobook by Deepika Arun to get teleported to the golden era of Chozhas. 
    காலத்தால் அழியாத அமரர் கல்கியின் மாபெரும் காப்பியத்தை ஒலிவடிவில் தீபிகா அருணின் குரலில் கேளுங்கள்
    Ver libro
  • Thaaimai Oru Konam - cover

    Thaaimai Oru Konam

    Sivasankari

    • 0
    • 0
    • 0
    திருமதி. சிவசங்கரி அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளும் முதல் தொகுப்பினைப் போன்று சுவாரஸ்யமாகவும் ஆவலைத்தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யதார்த்தமான நடையில் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறன. நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை நயம்பட வழங்குகியுள்ளார்.
    Ver libro