Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
ஜனவரி மரணங்கள் - cover

ஜனவரி மரணங்கள்

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

கவர்ன்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ். அகலமான காம்பௌண்ட் கேட்டுக்குள் வண்டியை நுழைத்தான் ஜெயேஷ். லூஸ் ஃபிட்டிங் ஷர்ட்டிலும் பேரலல் பேன்ட்டிலும் ஹீரோத்தனமாய் இருந்தான். குளிர் கண்ணாடி - அவன் பர்சனலாட்டியை சில சதவீதங்கள் ஏற்றியது. (அவனுடைய ‘க்ளோஸப்’ புன்னகை பெண்கள் மத்தியில் ரொம்பவும் பிரசித்தம்.).யமாஹா ஷெல்டர் நிழலுக்கு தந்துவிட்டு கல்லூரியின் பிரதான கட்டிடத்தை நோக்கிப்போனான்.சல்வார் கம்மீஸ், மிடி, சூரிதார், பேண்ட் சர்ட், ஜீன்ஸ் என்று சகலவிதமான உடைகளிலும் இந்தியாவின் வருங்காலத்தூண்கள் மர நிழலில் நின்று புதிதாய் பாடனி க்ரூப்பில் சேர்ந்திருக்கும் சியாமளாவுக்கு அது ஒரிஜினல் தானா... அல்லது பிரா கைங்கர்யமா என்கிற பட்டி மன்றத்தையும், பிசிக்ஸ் லெக்சர்ணி கோகிலா பிரின்சிபால் ரூமுக்குள் போனால் மட்டும் வெளியே வர ஏன் இவ்வளவு நேரமாகிறது என்பதைப் பற்றியும் ஹாஸ்டல் மெஸ்ஸில் போடும் ஊத்தாப்பத்தின் சைஸ் வரவர சின்னதாகிக் கொண்டே வருவதை முன் வைத்து எப்போது ஸ்ட்ரைக் தொடங்கலாம் என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.ஜெயேஷ் மெயின் பில்டிங் வராந்தாவைப் பிடித்து நாலைந்து அறைகளைக் கடந்து அந்த வகுப்பறையின் முன் நின்றான்.தடிமனாய் கண்ணாடி போட்ட பெண் லெக்சரர் க்வார்ட் டைல் கோ எஃபிஷியண்ட்டை மழுங்கின பிளேடாக மாணவ மாணவிகள், மேல் உபயோகித்துக் கொண்டிருந்தார். முன் வரிசை பெஞ்சைத் தவிர மீதி பெஞ்சுக்கள் பூராவும், ஸ்டூடண்ட்ஸ் - கோழித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.முன் வரிசையில் மூன்றாவது பெண்ணாக தாரிணி இருந்தாள். வெள்ளையும் வயலட்டும் கலந்த சூடிதார்க்குள் நுழைந்திருந்தாள். ஒரு ஸ்பிரிங் முடி நெற்றியில் விழுந்து ஸ்டிக்கர் பொட்டைத் தொட்டுப் பார்ப்பதும் விலக்குவதுமாய் இருந்தது.“எக்ஸ்க்யூஸ் மீ...’’ ஜெயேஷ் குரல் கொடுக்க லெக்சரரோடு சேர்ந்து வகுப்பு மொத்தமும் திரும்பிப் பார்த்தது. லெக்சரர் கேட்டாள்.‘‘வாட் டு யூ வான்ட்”‘‘ஐயாம் இன் வாண்ட் ஆஃப் தாரிணி’’ லெக்சரர் கோபமாய் தாரிணியை பார்க்க அந்த கோபத்தைக் கண்டு கொள்ளாதவளாய் புத்தகங்களை அடுக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.ஜெயேஷைப் பார்த்துப் புன்னகைத்தாள்.“நல்ல சமயத்தில் வந்து காப்பாத்தினீங்க ஜெயேஷ்!”“நீ என்ன சொல்றே?’’‘‘சத்தியமா? லெக்சரர் அறுவையைத் தாங்கவே முடியலை. முன்னால் பெஞ்ச்ல உக்காந்துட்டு தூங்கவும், முடியலை! பல்லைக் கடிச்சிட்டிருந்தேன். நல்ல வேளையா நீங்க வந்தீங்க...’’“இப்பவாவது என்னோட அருமை உனக்கு புரிஞ்சுதா?’’ சிரித்தபடி இடதுபுறம் திரும்பினான்.“இந்தப் பக்கம் எங்கே போறீங்க?’’“கார்டனில் உட்கார்ந்து பேசலாம்.’’‘‘வேண்டாம். மொதல்ல காலேஜ் காம்பஸை விட்டு வெளியே போகணும்”“ஏன்?”‘‘எங்க அக்கா பாத்துட்டா வம்பு.”‘‘இது க்ளாஸ் ஹவர். அவங்க வெளியே வர வாய்ப்பில்லை.’’‘‘சொல்ல முடியாது. அக்கா ஃபைனல் இயர் ஆச்சே. ப்ராஜக்ட் வொர்க் அது இதுன்னு வெளியே வந்து சுத்திக்கிட்டிருப்பா... ரிஸ்க் - எதுக்கு ரெஸ்டாரென்ட் போயிடலாம்.’’‘‘எப்படி இருந்தாலும் ஒரு நாள் உங்க அக்காவுக்கு நம்ம விஷயம் தெரியத்தானே போகுது?’‘‘இப்ப தெரிய வேண்டாம். அக்காவோட மேரேஜெல்லாம் முடிஞ்ச பிறகுதான் எங்கப்பா என்னைப் பத்தி பேச்செடுப்பாங்க. அதுக்குள்ள நம்ம காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிய வேண்டாம்.’’‘‘வீட்டுக்குத் தெரிய வேண்டாம். அட்லிஸ்ட் அக்காவுக்கு தெரியறது நல்லது தானே. பின்னால் நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.’’“யாரு சித்ரா அக்காவா? நல்லா செய்வாளே? அவளுக்கு என்னை வீட்ல மாட்டி விட்றதுன்னா கொள்ளை சந்தோஷம். நம்ம காதல் விவகாரம் தெரிஞ்சா - முதல் வேலையா வீட்ல வத்தி வெச்சுருவா...’’பேசிக் கொண்டே பைக் நிறுத்தியிருந்த ஷெல்டருக்கு வந்தார்கள், ஜெயேஷ் கிக்கரை உதைத்தான். பைக் ‘தடதடக்க’ பில்லியனில் அமர்ந்தாள் தாரணி. சைலன்சரில் புகை சிந்த காலேஜ் காம்பஸைப் புறக்கணித்தார்கள்
Available since: 01/13/2024.
Print length: 71 pages.

Other books that might interest you

  • Konjam Megam Konjam Nilavu - cover

    Konjam Megam Konjam Nilavu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "தியாகு ஒரு பணக்கார ,இளைஞன். அவனுக்கு ஒரு அண்ணனும் அண்ணியும்
    இருக்கிறார்கள். அவன் ஒரு "சைக்கோ" என்பது வெளியே யாருக்கும் தெரிவது இல்லை. குடும்பத்தில் இயல்பாய் இருந்து கொண்டே அவ்வப்போது மனநோயாளியாய் மாறி சில விபரீதங்களைப் புரிகிறான். அவனுடைய இந்த செயல்களுக்கு ஒரு நாயும் துணை புரிகிறது. தியாகு ஒரு சைக்கோவாக மாற என்ன காரணம் ? அவனைப் பிடிக்க காவல்துறை எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளில் இருந்தும் தியாகு எப்படித் தப்பிக்கிறான்… கடைசியில் அவன் மாட்டுவானா, இல்லை அவனுக்கு வேறு ஒரு முடிவு காத்திருக்கிறதா ?
    நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாய் நகரும் எதிர்பாராத சம்பவங்கள் கேட்பவர்களைத் திகைக்க வைக்கும்"
    Show book
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Show book
  • Edhayum Oru Thadavai - cover

    Edhayum Oru Thadavai

    Anonymous

    • 0
    • 0
    • 0
    சென்னையிலும், சிகாக்கோவிலும் மர்மமான முறையில் சில சம்பவங்கள் நடைபெறுகின்றன். அஸ்திரா தன் கணவன் சூர்யகுமார் மேல் சந்தேகம் கொள்கிறாள். இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கும் இந்த நாவல் க்ளைமேக்ஸில் அசர வைக்கும்.
    Show book
  • Adipatta Puli - cover

    Adipatta Puli

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    Coimbatore city is rocked by two terrorist bomb blasts. The mastermind behind them is Karuppasamy who has escaped police custody and joined a terrorist group as a 'consultant'. He sends letters to the Police commissioner's office in advance through courier, giving hints about the upcoming blasts. He demands the release of the arrested terrorist leader Shahul Iqbal. Two more blasts were in the offing. Did the police succumb? Did they trace the location of Karuppusamy? What is the role of the young college-going son of a Police officer who lies in bed recovering from gun-shots, in the complex process of investigations? Did the police thwart the subsequent bomb blasts?
    
    கோயம்புத்தூர் நகரம் அடுத்தடுத்த இரண்டு தீவிரவாத வெடிகுண்டுகளால் அதிர்கிறது. தீவிரவாதிகளுக்குப் பின்னால் மூளையாக இருந்து செயல்படுபவன் கருப்பசாமி. போலீஸ் காவலில் இருந்து தப்பித்த அவன், வெடி குண்டு வைப்பதற்கு அந்த பயங்கரவாதக் குழுவுக்கு 'ஆலோசகராக' இருக்கிறான். போலீசை சீண்டும் விதத்தில் , வரவிருக்கும் குண்டுவெடிப்பு பற்றிய குறிப்புகளைக் முன்கூட்டியே தந்து , போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குக் கூரியர் மூலம் கடிதங்கள் அனுப்புகிறான். கைது செய்யப்பட்ட பயங்கரவாதத் தலைவன் 'ஷாகுல் இக்பாலை' விடுதலை செய்ய கோருகிறான்.
    
    மேலும் இரு குண்டுவெடிப்புகள் நிகழ இருக்கின்றன. போலீசார் அடிபணிந்தார்களா? அவர்கள் கருப்புசாமியின் இருப்பிடத்தைக் கண்டறிந்தார்களா? போலீஸ் விசாரணைகளின் மூலம் துப்புத் துலக்குவதில், துப்பாக்கிச் சூட்டில் இருந்து மீண்டு படுக்கையில் கிடக்கும் ஒரு காவல்துறை அதிகாரியின் இளம் மகனான கல்லூரி மாணவனின் பங்கு என்ன? அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளை காவல்துறை முறியடித்ததா?
    Show book
  • Mohini Koyil - cover

    Mohini Koyil

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    மாந்திரீக நாவல்களின் வரிசையில் கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் மற்றுமொரு படைப்பு மோகினி கோயில். மும்பை நகரத்திலிருந்து வெளிவரும் மலையாள மாத இதழான "சேல்ஸ் டாக்ஸ்" பத்திரிகையில் 27 மாதங்கள் "யக்ஷிக்காவு" என்ற பெயரில் வெளிவந்த நாவல்.
    
    பேய், பிசாசு, மோகினி என்றால் அனைவரும் பயப்படுவதுண்டு. இக்கதையில் சற்று நேர்மாறாக மோகினியான தேவசேனையின் உதவியுடன் கோவிந்தன் குட்டி என்னும் இளைஞன் எவ்வாறு நன்மை பெறுகிறான் என்பது பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் கூறப்பட்டுள்ளது. மாந்திரீக சக்தி தெய்வீக சக்திக்கு முன்னால் செயலற்று போகும் என்பதை பல திகிலூட்டும் சம்பவங்களுடன் விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது இக்கதை.
    Show book
  • Nirkaadhe Gavanikkadhe - cover

    Nirkaadhe Gavanikkadhe

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    Two rich young men are not satisfied with the luxurious life they have but want to enjoy adrenaline rush by committing some heinous crime! This is the story of the police playing hide and seek with these 2 youngsters. Listen to Nirkadhe Gavanikkadhe.
    
    இரண்டு பணக்கார இளைஞர்களுக்கு அத்தனை உல்லாசத்தையும் அனுபவித்ததும் சாகசமான குற்றங்கள் செய்யும் விபரீத எண்ணம் ஏற்படுகிறது.காவல்துறைக்கும் இவர்களுக்கும் நடுவில் நிகழும் பூனை, எலி துரத்தல்களும், மோதல்களுமே கதை.
    Show book