Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
எனக்காகவே நீ… - cover

எனக்காகவே நீ…

ரமணிசந்திரன்

Publisher: Publishdrive

  • 0
  • 0
  • 0

Summary

பூரண நிலவின் தண்ணொளியில், சிலுசிலுத்த தென்றல் காற்றினால், பரந்து விரிந்த கடல்பரப்பில் எழுந்த எண்ணிலடங்காத சின்னஞ்சிறு அலைகள் வெள்ளிப்பாளங்களாக மின்னுவதைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது திவ்யாவுக்கு.“ஆகா! என்ன அழகு!” என்று ரசனையோடு அவள் ‘இயம்ப, “ஆமாமாம்!” என்று அதை அப்படியே ஆமோதித்தான் அவள் அருகே அமர்ந்திருந்த மனோரஞ்சன்.“தனக்குத்தான் - சந்திரன் என்று வானம் பெருமைப்பட்டுக் கொண்டு இருந்திருக்கும், இல்லையா? ஆனால் கடலில் இத்தனை லட்சம்... கோடிக் கணக்காய் வெண்ணிலவுகள் மிதப்பதைப் பார்க்கும் போது... ரஞ்சன், இதைப் பார்க்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இல்லையா?” என்று கேட்டாள் அவள்.“ஆமாமாம்” நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தான் என்று அவளது பக்கவாட்டுத் தோற்றத்தில் ஓரக்கண் பார்வையைப் பதித்து ஒத்துப் பாடினான் அவன்.“இயற்கையாகப் பார்த்து, மனம் உவந்து அளிக்கும் இந்த அழகை ரசித்து அனுபவியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறவர்களை நினைத்தால் கோபம்தான் வருகிறது...”அவள் பேசுகையிலேயே, “அப்படி ரசிக்கவென்று எந்தக் கழுதையாவது வந்து நின்றால் உதைதான் கிடைக்கும்” என்று அவன் முணுமுணுத்தான்.“என்ன சொன்னீர்கள்? சரியாகக் கேட்கவில்...” என்று திரும்பிய திவ்யா, மனோரஞ்சனின் பார்வை கடலை விடுத்து அவளிடம் பதிந்திருப்பதைக் கண்டதும் கலீரென்று நகைத்து விட்டு “உதைவிழும்.” என்று சுட்டுவிரலால் ‘பத்திரம்’ காட்டினாள்“முதலில் உனக்கு உதை விழாமல் பார்த்துக் கொள். மணி என்ன தெரியுமா? பதினொன்று. இப்போதே கிளம்பினால் கூட உன் வீடு போய்ச்சேர மணி பதினொன்றரை ஆகிவிடும். இவ்... வளவு நேரம் எங்கே சுற்றினாய் என்று உன் பெரியப்பா பெல்ட்டால்... உன்னை விளாசப் போகிறார்.”“மாட்டவே மாட்டார். என் பெரியப்பா எவ்வளவு நல்லவர் தெரியுமா?” என்றாள் திவ்யா பெருமையாக.“அல்லது உன் பெரியம்மா. அவர்கள் கரண்டிக் காம்பைக் காய வைத்து சூடு இழுக்கப் போகிறார்கள், பார்.” என்று மிரட்டினான் மனோரஞ்சன்.“சீச்சீ.” என்றாள் திவ்யா. “விளையாட்டுக்குக்கூட என் பெரியப்பா, பெரியம்மா பற்றி இப்படி சொல்லாதீர்கள் ரஞ்சன். அவர்கள் இரண்டு பேருக்குமே நான் என்றால் உயிர். பிரியம் மட்டுமில்லாமல் என்னிடம் முழு நம்பிக்கையும் உண்டு. திவ்யா மனமறிந்து தப்பு செய்யமாட்டாள் என்பார்கள். பிரபாகூட எப்போதும் குறைப்படுவாள். “அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் உன்னிடம்தான் உயிர். என்னைக் கண்டாலே கரித்துக் கொட்டுகிறார்களே, மெய்யாகவே என்னைப் பெற்றார்களா அல்லது குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து வளர்க்கிறார்களா?” என்று பொருமுவாள். இதைப் பெரியப்பா, பெரியம்மாவிடமே கேட்டுவிட்டு அதற்கு வேறு வாங்கிக்கட்டிக் கொள்ளுவாள்... எனக்குக் கூடச் சில சமயங்களில் ஒருமாதிரி இருக்கும். என்னைக் ‘கண்ணா’ என்று கொஞ்சுகிறவர்கள், அவளை இந்தக் கழுதை எங்கே போயிற்று?” என்று கேட்பார்களா...“போதும் போதும்” என்று கெஞ்சாக் குறையாக திவ்யாவின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சை இடைமறித்தான் மனோரஞ்சன். “உன் பெரியப்பாவும் பெரியம்மாவும் மிகவும் நல்லவர்கள்தான், திவ்யா. ஆனால் அதற்காக அவர்களது புராணத்தை நான் எத்தனை தடவை கேட்டுக் கொண்டிருக்க முடியும் சொல்லு? சொல்ல உனக்கு அலுக்காமல் இருக்கலாம். ஆனால் கேட்கிற எனக்குக் கொஞ்சம் போ... ரடித்துப் போய்விட்டதே...” என்று வேடிக்கை போலப் பேசியவன், அவள் அதை விளையாட்டாக எண்ணவில்லை என்பதை உணர்ந்து பேச்சை மாற்றினான்
Available since: 04/03/2025.
Print length: 324 pages.

Other books that might interest you

  • கல்கி சிறு கதைகள் - வீணை பவானி - kalki short stories - Vol 6 - Tamil Short Story Collection - cover

    கல்கி சிறு கதைகள் - வீணை பவானி -...

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்பு - 6 
    1. வீணை பவானி  
    2. வைர மோதிரம்  
    3. கடிதமும் கண்ணீரும்  
    4. தூக்கு தண்டனை  
    5. என் தெய்வம்  
    6. எஜமான விசுவாசம் 
    Show book
  • கனாளன் - நம் கனவுகளை அழகுபடுத்தும் ஒரு ராஜ்ஜியத்தின் கதை - cover

    கனாளன் - நம் கனவுகளை...

    Novah Rozary

    • 0
    • 0
    • 0
    கனாளன் (Kanaalan) –எழுத்தாளர் : நோவா றொசாரி 
    முதல் அத்தியாயம்: முதற்கனா 
    நாயகன் ரமணன் ஒரு தெருவில் பயத்துடன் ஓடுகிறான், யாரோ துரத்துவது போன்ற உணர்வுடன். இந்த ஓட்டத்திற்கான காரணம், அவனது விசித்திரமான கனவில் உள்ளது. 
    கனவில், ரமணன் பலருக்கு உதவும் ஒரு அமைதியான காட்சியைக் காண்கிறான், அது திடீரென ஒரு ராஜாவுக்கும் கொடூர அரக்கனுக்கும் இடையேயான வாள் சண்டையாக மாறுகிறது. சண்டையின்போது, அரக்கனிடம் சிக்காமல் இருக்க, ராஜா தன் கழுத்திலிருந்த மின்னும் பதக்கம் ஒன்றை ரமணனை நோக்கிக் கீழே வீசுகிறார். ரமணன் அதைப் பிடிக்கும் அடுத்த கணமே, ராஜா ஆற்றில் வீழ்த்தப்படுகிறார். பதக்கத்தைத் தேட சிப்பாய்கள் வர, ரமணன் பயந்து ஓடுகிறான். எப்படி இறுதியில் தப்பித்து கொள்கிறான் என்பதே கதை.
    Show book
  • Aram - cover

    Aram

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்ட◌ாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. - ஜெயமோகன்
    Show book
  • Ratnadeviya kathe - cover

    Ratnadeviya kathe

    Krishnamurthy Hunoor

    • 0
    • 0
    • 0
    Shortstory by Krishnamurthy Hunoor
    Show book
  • Padmavathi Raniya vivha kathe - cover

    Padmavathi Raniya vivha kathe

    Krishnamurthy Hunoor

    • 0
    • 0
    • 0
    Short story by Krishnamurthy Hunoor
    Show book
  • Thirumalai Thiruppalliyelucci Amalanathipiran Kanninunsiruththampu - cover

    Thirumalai Thiruppalliyelucci...

    ...

    • 0
    • 0
    • 0
    தொண்டரடிப்பொடியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவருக்கு 'விப்ர நாராயணர்' என்பது இயற்பெயர் ஆகும். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையைத் தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டு செய்து வந்தார். அவரது படைப்புகளில் திருப்பள்ளி எழுச்சி பத்து வசனங்களைக் கொண்டதாகவும், திருமாலை நாற்பது வசனங்களைக் கொண்டதாகவும் உள்ளது. அரங்கனுடைய தொண்டர்களின் அடியாகிய திருவடியின் தூசி எனும் பொருள்பட "தொண்டரடிப்பொடி" என்றும், அரங்கனின் பக்தியில் ஆழ்ந்துபோனவரை ஆழ்வார் என்று அழைப்பதற்கிணங்க தொண்டரடிப்பொடியாழ்வார் ஆனார். 
    திருப்பாணாழ்வார் திருவரங்கத் திருவான அரங்கன் முன் சென்று அவன் வடிவழகில் மயங்கி திருமுடி முதல் திருவடி வரை பாடியவர். "என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என்று பாடிய படி தன் பூத உடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக்கலந்தார். இவர் பாடிய பத்துப்பாடல்கள் "அமலனாதிபிரான்" எனும் தலைப்போடு நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர் அரங்கன் மீது பாடிய பத்துப் பாடல்களும் அரங்கனின் திருவடியில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் அற்புதமாக காட்சிப்படுத்துகிறது. 
    மதுரகவி ஆழ்வார் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார். ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம். அதில் ஓம் என்பது முதல் பதம். நமோ என்பது மையப்
    Show book