Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
அந்த ரத்த நாட்கள் - cover

அந்த ரத்த நாட்கள்

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

‘ரூபலா...”‘பாரத்’தை தூங்கப் பண்ணிக்கொண்டிருந்த ரூபலா திரும்பினாள். விவேக் ஒரு ஆங்கில வார இதழை கையில் வைத்துக் கொண்டு சிரித்தபடி தெரிந்தான். இரவு பத்துமணி இடம் சென்னை.“என்னவாம்...?’’“ஒரு சர்தார்ஜி ஜோக் சொல்லட்டுமா...?’’“ச்சே...! அந்த மாதிரியான ஜோக்கெல்லாம் என்கிட்டே வேண்டாம்...”விவேக் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.“அய்யய்யே...! நீ நினைக்கிற மாதிரி அது செக்ஸ் ஜோக் கிடையாது.’’“பின்னே...?”“சொல்றேன் கேட்டுப்பாரு...’’“சரி சொல்லுங்க...”“ஒரு சர்தார்ஜி தவளைகளைப் பத்தி ஆராய்ச்சி பண்றதுல ஒரு பெரிய விஞ்ஞானி. அவரோட ஆராய்ச்சி திறமைக்கு சாம்பிளா ஒரு எக்ஸ்பரிமெண்ட். ஒரு தவளையை பிடிச்சு மேஜைமேல விட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னாராம். உடனே அது தாவி குதிச்சது. உடனே சர்தார்ஜி அந்த தவளையை பிடிச்சு அதனோட நாலு கால்ல ஒரு காலை வெட்டிட்டு மேஜைமேல விட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னாராம். தவளை தன்னோட மூணு காலையும் உபயோகிச்சு குதிச்சதாம். சர்தார்ஜி அந்த தவளையை மறுபடியும் மூணுகால்ல ஒரு காலை வெட்டிட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னாராம். தவளை ரெண்டு காலை உபயோகிச்சு குதிச்சது. சர்தார்ஜி விடலை. தவளையை பிடிச்சு ரெண்டு கால்ல ஒண்ணை வெட்டிட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னார். தவளை கஷ்டப்பட்டு முயற்சி பண்ணி ஒரு காலை உபயோகிச்சு ‘ஜம்ப்’ பண்ணியதாம். சர்தார்ஜி மறுபடியும் தவளையைப் பிடிச்சார். இருந்த ஒரு காலையும் வெட்டிட்டு ‘ஜம்ப்’ன்னு சொன்னார். அது குதிக்காமே அப்படியே படுத்திட்டிருந்தது. உடனே சர்தார்ஜி தன்னோட ஆராய்ச்சிக் குறிப்பில் இப்படி எழுதினாராம். தவளைக்கு அதன் நான்கு கால்களையும் வெட்டி விட்டால் காது கேட்காது...”ரூபலா வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் போதே - வாசலில் காலிங்பெல் கேட்டது.“டி... டிங்...’’விவேக் கையிலிருந்த பத்திரிகையை மேஜை மேல் வீசிவிட்டு எழுந்தான்.‘‘இந்நேரத்துக்கு யார்ன்னு தெரியலை...?”வாசல்பக்கம் போன விவேக் - போலீஸ் துறைக்கு உரிய முன் யோசனையோடு பக்கவாட்டு ஜன்னலைத் திறந்து வாசலைப் பார்த்தான்.ஒரு இளைஞன் நின்றிருந்தான். முப்பது வயது இருக்கலாம். தெரு விளக்கின் வெளிச்சம் மேலே விழுந்ததில் அவனுடைய நிறம் தெரிந்தது. தாடி வளர்க்க ஆரம்பித்திருந்தான். கண்களுக்கு கீழே மெலிதாய் கருவளையங்கள். தோளில் ஒரு ஜோல்னா பை.“யாரு...?”விவேக் கேட்க -அவன் சட்டென்று குரல் வந்த பக்கமாய் திரும்பி - க்ரில் ஜன்னலில் தெரிந்த விவேக்கைப் பார்த்துகும் பிட்டான்.“வணக்கம் ஸார்... என் பேர் சங்கரநாராயணன். உங்களைப் பார்த்து பேசறதுக்காகத்தான் வந்தேன்...’’அவனுடைய குரலும் முகபாவமும் இவன் ஆபத்தானவன் இல்லை என்பதை விவேக்கிற்கு உணர்த்த - கதவுக்கு போய் தாழ்ப்பாளை விலக்கினான்.அந்த சங்கரநாராயணன் உள்ளே வந்தான். மறுபடியும் வணக்கம் சொன்னான்ஸார்! ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி உங்கக்கிட்டே பேசணும். நீங்க வீட்ல இருப்பீங்களோ... இல்லை... வெளிநாடு ஏதாவது போயிருப்பீங்களோன்னு பயந்துட்டே வந்தேன்.”‘‘என்ன விஷயம்...?’’‘‘உட்கார்ந்து பேசணும் ஸார்... எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம்...’’விவேக் வரவேற்பறையிலிருந்த நாற்காலியைக் காட்டிவிட்டு தானும் உட்கார்ந்தான்.“ம்... சொல்லு...’’ அவன் மெல்லிய குரலில் பேச்சை ஆரம்பித்தான்.‘‘எனக்கு சொந்த ஊர் காங்கயம் ஸார். என்ஜினீயரிங் படிச்சு முடிச்சுட்டு வேலைக்காக ட்ரை பண்ணிட்டிருக்கேன்...‘‘சரி...’’‘‘ஸ... ஸார்... நான் இப்போ உங்ககிட்டே சொல்லப் போற விஷயம் என்னோட எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடியதுதான், இருந்தாலும்... அதைப் பத்தி கவலைப்படாமே உங்ககிட்டே வந்திருக்கேன்...’’‘‘நீ இன்னும் விஷயத்துக்கே வரலை...’’“வந்துட்டேன் ஸார்...” சொன்னவன் தன்னுடைய ஜோல்னாப்பைக்குள் கையை நுழைத்து ஆடியோ காஸெட் ஒன்றை எடுத்தான்.“இதை டேப் ரிக்கார்டரில் போட்டுப் பாருங்க... ஸார்...விவேக் அந்த கேஸட்டை வாங்கி - திருப்பிப் பார்த்து - அது ஒரு சாதாரண கேஸட்தான் என்று ஊர்ஜிதமானதும் - உள்ளே போய் ரிக்கார்ட் பிளேயரைக் கொண்டு வந்து - கேஸட்டை அதன் வாய்க்குள் திணித்து - ப்ளே பட்டனைத் தட்டினான்.டேப் சுழன்றது.காஸட்டினின்றும் வெளிப்பட்ட வார்த்தைகள் -விவேக்கை அதிர்ச்சியில் வீழ்த்தியது. இருதயத்துக்குள் ஒரு பூகம்பம் பதிவாயிற்று
Available since: 02/08/2024.
Print length: 65 pages.

Other books that might interest you

  • Jeiyppathu Nijam - cover

    Jeiyppathu Nijam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இலட்சியா -95 அதி நவீன ரக விமானத்தை பற்றிய சில இரகசிய குறிப்புகள் வெளிநாட்டவர்களுக்கு விற்க படுவதாக இரகசிய தகவல் டெல்லியில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி ஃபோர்ஸிடமிருந்து தகவல், சென்னையில் உள்ள விவேக்கிற்கு வர உடனே டெல்லிக்கு விரைகிறான்.
    இலட்சியா -95 பற்றிய சில இரகசிய தகவல்கள் சேட்டர்ஜி, மெஹரா மற்றும் விஷ்ணு வர்த்தன் இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரியும், இதில் இருவர் கொல்லப்படுகின்றனர். கடைசியில் தீவிர இரகசிய குழுவில் உள்ள ஒரு கருப்பாடு யார்? என்று கண்டறிந்த இரகசியங்களை எவ்வாறு மீட்கின்றனர் என்பதை அறிய கேளுங்கள் ஜெயிப்பது நிஐம்..
    Show book
  • Detective DK - Third Case: Sembaruthi Maranam (செம்பருத்தி மரணம்) - One dog saw it all - cover

    Detective DK - Third Case:...

    Sindhu

    • 0
    • 0
    • 0
    பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 
    Panakkara thozhiladhibarin marma kolai… amaidhiyaana Sembaruthi thottathula nadandha kodooram! Oru maathram saatchi – oru naai! Detective DK-oda visaranaila veli vantha adhirchi thaagavalgal unga mind-a shock pannum! Yaarum ethirpaarkkaadha thiruppam awaits… 
    A wealthy businessman is found dead in his luxury villa - inside a peaceful hibiscus garden. No signs of a forced entry. No human witnesses. Just one living soul that saw it all: a dog. As the police close the case as a suicide, Detective DK and his trusted partner Rishi are brought in by the victim’s daughter, who senses something deeper - a hidden truth. The investigation unravels shocking secrets: greed, betrayal, and a silent companion who holds the key. But can a dog’s behavior really lead to a killer? Sembaruthi Maranam is a gripping, emotionally charged mystery - the third case in the Detective DK Investigations series. You’ll never guess how it ends.
    Show book
  • Galugambada Atankadali - cover

    Galugambada Atankadali

    D V Guruprasd

    • 0
    • 0
    • 0
    'ಸಾವಿನ ಸೆರಗಿನಲ್ಲಿ' ಕೃತಿಯ ಎರಡನೆಯ ಭಾಗವೇ ಈ ಕೃತಿ, 'ಗಲ್ಲುಗಂಬದ ಆತಂಕದಲ್ಲಿ'. ಇದರ ಹೆಸರೇ ಸೂಚಿಸುವಂತೆ ಮರಣದಂಡನೆಯ ಶಿಕ್ಷೆಗೆ ಈಡಾಗಿರುವ ಕೈದಿಗಳ ಕಥೆಗಳ ಗುಚ್ಛವಿದು.
    Show book
  • Varnavin Maranam - cover

    Varnavin Maranam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar. 
    இளமாறன் தன் மனைவி செவ்வந்தியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரோ திட்டமிட்டு செய்த கொலையா? மூன்று மரணங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள். ராஜேஷ் குமாரின் "வர்ணாவின் மரணம்" நாவல் - முழு ஆடியோ புக்.
    Show book
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Show book
  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Kumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Show book