Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
காலங்களில் அவள் வசந்தம் - cover

காலங்களில் அவள் வசந்தம்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

“அப்பப்பா என்ன கூட்டம். இப்ப வியாழக்கிழமையில் பாபா கோயிலுக்கு அதிக கூட்டம் வருது. சாமியை பார்க்கவே இரண்டு மணி நேரமாயிடுச்சே. நல்லவேளை முன்னால வீடு வந்து சேர்ந்துட்டோம்.”பேசியபடி கமலம் சோபாவில் அமர,“ஆமாம்மா... இனிமே, வியாழக்கிழமை பாபா கோயிலுக்கு காலையிலேயே போய்ட்டு வந்துடலாம்.”“உனக்கு காலேஜிக்கு லேட்டாயிடுமே.”“கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினா நேரத்துக்கு வந்துடலாம். என்ன பார்த்துட்டு நிக்கற, தலைவலிக்குது, போய் சூடா ஒரு டம்ளர் காபி போட்டு எடுத்துட்டு வா. அம்மா உங்களுக்கு...”“எனக்கு வேணாம்பா. நேரம் கெட்ட நேரத்தில் காபி குடிச்சா, எனக்கு சரிவராது. நீ குடி.”கையிலிருந்த காபியை அவனிடம் கொடுத்தவள், மெளனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.“என்ன இது, இருந்த பழைய மாவை சரிகட்டி தோசை ஊத்திட்டியா... வாயிலே வைக்க முடியலை. ஏன் வந்து ஒரு இடியாப்பம் செஞ்சு, குருமா வைக்க உனக்கு வணங்க மாட்டேன்னு சொல்லிடுச்சா.”“இன்னைக்கு ஆபீசிலும் வேலை அதிகம். அதுவும் வந்ததும் அடுப்படியில் எல்லாம் அப்படியே கிடந்ததால், ஒழிச்சு போட்டு டிபன் செய்ய நேரமாயிடும்னு செய்தேன்.”“இப்ப என்ன மகாராணி வரும்போது, எல்லாத்தையும் சுத்தமா எடுத்து வைக்கணும்னு சொல்றியா. இந்த குட்டியை பார்த்துக்கிட்டு என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும் புரிஞ்சுதா. வாய்க்கு வாய் பேசாம போய் வேலையைப் பாரு.”சாப்பிட்டு விட்டு ஹாலில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவன், தனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பது போல, டி.வியில் லயித்திருந்தான்சாப்பிட கூட தோன்றாமல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.அம்மாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு, உள்ளே நுழைந்த கணவனை பார்த்தாள்.“ஏன் எப்போதும் மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்கே. ஆனா வீட்டில்தான் இப்படி, வெளியே கிளம்பிட்டா முகத்தில் சிரிப்பும், பொலிவும் தாண்டவமாடுது. போன வாரம் உன் ப்ரெண்ட் அவ பேரென்ன... மாலினி... அவகூட அப்படி சிரிச்சு பேசிக்கிட்டு நான் பைக்கில் வர்றதை கவனிக்காம கூட ரோடில் போனே. வீட்டுக்கு வந்தா முகமே மாறிடுது.”தேவையில்லாமல் தன்னை சீண்டுகிறான் என்று புரிந்து கொண்டவள்,“தலை வலிக்குது. சாப்பிட கூட பிடிக்கலை. அதான் சோர்வாக இருக்கு.”“ஊசி போன மாவை சாப்பிட்டா வயிறு கெட்டுடும்னு எங்களுக்கு கொடுத்துட்டு, சாப்பிடாம வந்துட்டியா?”இப்படிகூட ஒரு மனிதனால் பேச முடியுமா. வார்த்தைகளில் விஷத்தை தடவி... அடுத்தவர் மனம் புண்பட பேசுவதில்தான் எவ்வளவு சந்தோஷம். இரண்டு வருஷ தாம்பத்யம். கையில் குழந்தை... இன்னும் கட்டின மனைவியை புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறானே. இதற்கு மேல் பேசி விவாதத்தை வளர்க்க விரும்பாமல் படுத்துக்கொண்டால் நந்தினி.ராத்திரி எதுவும் சாப்பிடாமல் படுத்தது, வயிற்றை பிரட்ட, சமாளித்துக்கொண்டு காலை டிபன், சாப்பாடு வேலையை முடித்து ஆபீசுக்கு கிளம்ப...“நந்தினி, என் வெள்ளை ஷர்ட்டை அயர்ன் பண்ணிக் கொடு. இன்னைக்கு அதைத் தான் போடணும்.”குழந்தை சுமிக்கு பால் கொடுத்தவள்,“எனக்கு லேட்டாச்சு. அப்புறம் பஸ்ஸை மிஸ் பண்ணிடுவேன். வேறு ஏதாவது அயர்ன் பண்ணின ஷர்ட் போட்டுக்குங்க. சாயந்திரம் வந்து அயர்ன் பண்ணி வைக்கிறேன்.”“அரவிந்தா உன் இஷ்டத்துக்கு சட்டைகூட போட முடியாது போலிருக்கே. மகாராணி உத்தரவுபடி நடந்துக்க.”கோபமாக அவள் முன் வந்தான்
Available since: 02/12/2024.
Print length: 61 pages.

Other books that might interest you

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Show book
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Show book