Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
காலங்களில் அவள் வசந்தம் - cover

காலங்களில் அவள் வசந்தம்

கிரிஸ் ப்ரெண்டிஸ்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

“அப்பப்பா என்ன கூட்டம். இப்ப வியாழக்கிழமையில் பாபா கோயிலுக்கு அதிக கூட்டம் வருது. சாமியை பார்க்கவே இரண்டு மணி நேரமாயிடுச்சே. நல்லவேளை முன்னால வீடு வந்து சேர்ந்துட்டோம்.”பேசியபடி கமலம் சோபாவில் அமர,“ஆமாம்மா... இனிமே, வியாழக்கிழமை பாபா கோயிலுக்கு காலையிலேயே போய்ட்டு வந்துடலாம்.”“உனக்கு காலேஜிக்கு லேட்டாயிடுமே.”“கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினா நேரத்துக்கு வந்துடலாம். என்ன பார்த்துட்டு நிக்கற, தலைவலிக்குது, போய் சூடா ஒரு டம்ளர் காபி போட்டு எடுத்துட்டு வா. அம்மா உங்களுக்கு...”“எனக்கு வேணாம்பா. நேரம் கெட்ட நேரத்தில் காபி குடிச்சா, எனக்கு சரிவராது. நீ குடி.”கையிலிருந்த காபியை அவனிடம் கொடுத்தவள், மெளனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.“என்ன இது, இருந்த பழைய மாவை சரிகட்டி தோசை ஊத்திட்டியா... வாயிலே வைக்க முடியலை. ஏன் வந்து ஒரு இடியாப்பம் செஞ்சு, குருமா வைக்க உனக்கு வணங்க மாட்டேன்னு சொல்லிடுச்சா.”“இன்னைக்கு ஆபீசிலும் வேலை அதிகம். அதுவும் வந்ததும் அடுப்படியில் எல்லாம் அப்படியே கிடந்ததால், ஒழிச்சு போட்டு டிபன் செய்ய நேரமாயிடும்னு செய்தேன்.”“இப்ப என்ன மகாராணி வரும்போது, எல்லாத்தையும் சுத்தமா எடுத்து வைக்கணும்னு சொல்றியா. இந்த குட்டியை பார்த்துக்கிட்டு என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும் புரிஞ்சுதா. வாய்க்கு வாய் பேசாம போய் வேலையைப் பாரு.”சாப்பிட்டு விட்டு ஹாலில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவன், தனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பது போல, டி.வியில் லயித்திருந்தான்சாப்பிட கூட தோன்றாமல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.அம்மாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு, உள்ளே நுழைந்த கணவனை பார்த்தாள்.“ஏன் எப்போதும் மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்கே. ஆனா வீட்டில்தான் இப்படி, வெளியே கிளம்பிட்டா முகத்தில் சிரிப்பும், பொலிவும் தாண்டவமாடுது. போன வாரம் உன் ப்ரெண்ட் அவ பேரென்ன... மாலினி... அவகூட அப்படி சிரிச்சு பேசிக்கிட்டு நான் பைக்கில் வர்றதை கவனிக்காம கூட ரோடில் போனே. வீட்டுக்கு வந்தா முகமே மாறிடுது.”தேவையில்லாமல் தன்னை சீண்டுகிறான் என்று புரிந்து கொண்டவள்,“தலை வலிக்குது. சாப்பிட கூட பிடிக்கலை. அதான் சோர்வாக இருக்கு.”“ஊசி போன மாவை சாப்பிட்டா வயிறு கெட்டுடும்னு எங்களுக்கு கொடுத்துட்டு, சாப்பிடாம வந்துட்டியா?”இப்படிகூட ஒரு மனிதனால் பேச முடியுமா. வார்த்தைகளில் விஷத்தை தடவி... அடுத்தவர் மனம் புண்பட பேசுவதில்தான் எவ்வளவு சந்தோஷம். இரண்டு வருஷ தாம்பத்யம். கையில் குழந்தை... இன்னும் கட்டின மனைவியை புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறானே. இதற்கு மேல் பேசி விவாதத்தை வளர்க்க விரும்பாமல் படுத்துக்கொண்டால் நந்தினி.ராத்திரி எதுவும் சாப்பிடாமல் படுத்தது, வயிற்றை பிரட்ட, சமாளித்துக்கொண்டு காலை டிபன், சாப்பாடு வேலையை முடித்து ஆபீசுக்கு கிளம்ப...“நந்தினி, என் வெள்ளை ஷர்ட்டை அயர்ன் பண்ணிக் கொடு. இன்னைக்கு அதைத் தான் போடணும்.”குழந்தை சுமிக்கு பால் கொடுத்தவள்,“எனக்கு லேட்டாச்சு. அப்புறம் பஸ்ஸை மிஸ் பண்ணிடுவேன். வேறு ஏதாவது அயர்ன் பண்ணின ஷர்ட் போட்டுக்குங்க. சாயந்திரம் வந்து அயர்ன் பண்ணி வைக்கிறேன்.”“அரவிந்தா உன் இஷ்டத்துக்கு சட்டைகூட போட முடியாது போலிருக்கே. மகாராணி உத்தரவுபடி நடந்துக்க.”கோபமாக அவள் முன் வந்தான்
Available since: 02/12/2024.
Print length: 61 pages.

Other books that might interest you

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book