ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்
இந்திரா ஸ்ரீவத்ஸா
Publisher: Publishdrive
Summary
பல முக்கியமான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளனர். மாயா ஏஞ்சலோ ஒரு எழுத்தாளர். முகமது அலி ஒரு குத்துச்சண்டை வீரர். மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் ஒரு சிறந்த தலைவர்...
Publisher: Publishdrive
பல முக்கியமான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளனர். மாயா ஏஞ்சலோ ஒரு எழுத்தாளர். முகமது அலி ஒரு குத்துச்சண்டை வீரர். மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் ஒரு சிறந்த தலைவர்...
Sridhar Vembu - Saathanai - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios storeஉலக அளவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் புகழ்பெற்றவர்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் போன்றவர்கள். இந்த வரிசையில் ஓர் இந்தியர் அதுவும் தமிழர் ஒருவரும் இருக்கிறார். ஆச்சரியமாக உள்ளதா? அவர்தான் ஸ்ரீதர் வேம்பு. காவேரிக் கரையிலிருந்து கலிஃபோர்னியா வரை சென்று கலக்கிவிட்டு இன்று தாமிரபரணிக் கரையில் இருந்து அலுவலக ரீதியாக இயங்கி வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற ஸோஹோ (Zoho Corporation) எனும் நிறுவனத்தை உருவாக்கியவர் இவரே. தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்து, உலகமே வியக்கும் அளவுக்கு உயர்ந்த ஸ்ரீதர் வேம்புவின் வாழ்க்கைப் பயணம் சாதாரணமானதல்ல. இந்த நிலைக்கு அவர் வந்ததற்குப் பின்னால் உள்ள அவரது உழைப்பும் தியாகமும் பலர் அறியாதது. இந்தப் புத்தகம் அவரது வாழ்க்கையின் ஊடாகச் சென்று அவரது பயணத்தைப் பதிவு செய்கிறது. ஸ்ரீதர் வேம்புவின் கனவு, அதை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட இடர்கள், சந்தித்த சவால்கள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் உருவான சிக்கல்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள், தமிழ்நாட்டின் கிராமங்களில் அவர் உருவாக்கிய தொழில்நுட்பப் புரட்சி, இந்தியாவின் குறிப்பிடத்தக்கப் பணக்காரர்களில் ஒருவராக இருந்தும் இன்று ஒரு கிராமத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்வதின் பின்னணி என ஸ்ரீதர் வேம்புவின் வாழ்வில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளை இந்தப் புத்தகம் பதிவு செய்கிறது. ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், தொழில்நுட்பத் துறையில் சாதிக்க வேண்டுவோர்க்கு வழிகாட்டியாகவும், எதிர்காலச் சந்ததியினருக்குப் பாடமாகவும் அமையும். எழுத்தாளர் ஹரன் G.S.Sivakumar எழுதி , Sri Srinivasa வாசிப்பில் Swasam பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Audiobook by Aurality.Show book
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 48 ஆண்டுகளாகிவிட்டன. இன்று ஜனநாயகம், சர்வாதிகாரம், பாசிசம் போன்ற சொற்கள் அர்த்தம் புரியாமலேயே அன்றாடம் புழங்கும் சொற்களாகிவிட்டன. ஆனால் இம்மூன்றின் உண்மையான பரிமாணத்தையும் ஒரே சமயத்தில் மக்கள் உணர்ந்த தருணம் அது. நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன்னும் அதுபோன்ற நாள் வந்ததில்லை. அதற்குப் பின்னும் வரவில்லை. வரப்போவதுமில்லை. இந்திராகாந்தியின் எழுச்சி, வீழ்ச்சி, மீண்டும் அவரது எழுச்சி என்ற மூன்று பிரிவுகளில் நெருக்கடி நிலை அடங்குகிறது. எதனால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது, அதனை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது, நெருக்கடி நிலையின் தாக்கங்கள் என்ன, அதனால் நாட்டின் அரசியலும் மக்களின் வாழ்வும் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டன, அதன் எதிர்விளைவுகள் என்ன என இவை அனைத்தையும் விரிவான கண்ணோட்டத்தில் இப்புத்தகம் அலசுகிறது. நெருக்கடி நிலைக் காலத்தை ‘அரசுக் கொடுங்கோன்மை’ என்று விமர்சனம் செய்தவர்களும் உண்டு. ‘தறிகெட்ட சுதந்திரத்திற்குப் போடப்பட்ட கடிவாளம்’ என்று சொன்னவர்களும் உண்டு. எமர்ஜென்ஸியை முழுமையாக ஆதரிக்கவும் செய்யாமல், கண்மூடித்தனமாக எதிர்க்கவும் செய்யாமல், எந்தச் சூழ்நிலையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது, அதற்கு முன்பாக நடந்த சம்பவங்கள் யாவை, நெருக்கடி நிலையை அறிவித்தவர்களும் அதனால் பாதிக்கப்பட்டவர்களும் என்ன செய்தனர் என வரலாற்றை உள்ளது உள்ளபடி திரும்பிப் பார்க்கும் முயற்சியே இது. எழுத்தாளர் ஆர். ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.Show book
Vathaimugaamgalin Sollappadaatha Varalaaru - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store வதைமுகாம்களின் சொல்லப்படாத வரலாறு - ஹிட்லர், யூதர்கள் மற்றும் யுத்தங்கள் எல்லா வரலாறுகளும் உண்மைகளை உள்ளது உள்ளபடி சொல்லி விடுவதில்லை. வெளி உலகத்துக்கு மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு, பலம் படைத்தவனின் வசதிக்கு ஏற்ப, காலத்துக்குக் காலம் வரலாறுகள் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படித் திரிக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களை உங்கள் மனசாட்சியின் முன் கொண்டுவந்து சேர்க்கும் ஒரு முயற்சியே இந்த நூல். யூதர்களின் நீண்ட நெடிய வரலாற்றையும், ஹிட்லருக்கும் ஜெர்மானியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையேயான வெறுப்பு எங்கிருந்து தொடங்கியது என்பதையும், அதன் வரலாற்றுப் போக்குகளையும் தெளிவாகச் சொல்கிறது இந்தப் படைப்பு. வரலாற்றில் வதைமுகாம்களின் இருண்ட முகத்தை வெளிப்படுத்தும் ஆய்வுப் பார்வை மட்டுமல்ல இந்தப் புத்தகம். மறக்கக் கூடாத வரலாற்றுச் சம்பவங்களின் மூலம், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை உணர்த்தும் அறம் சார்ந்த ஒன்று. இந்த நூலின் ஆசிரியர் றின்னோஸா புவிசார் அரசியல், வரலாறு, தொழில்நுட்பம், சூழலியல் மற்றும் சமூகவியல் போன்ற வேறுபட்ட தளங்களில் பல கட்டுரைகளையும், தொடர்களையும், புத்தகங்களையும் தொடர்ந்து எழுதி வருபவர். யூதர்களின் வதைமுகாம்களை நேரில் பார்வையிட்டு, பல அரிய தகவல்களை அறிந்துகொண்டு, இந்த நூலை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றியுள்ளார். எழுத்தாளர் Rinnozah எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Audiobook by Aurality.Show book
பால காண்டம், இராமாயணத்தின் ஆரம்பப் பகுதி. ஸ்ரீ ராமர், லட்சுமணர், பாரதன் மற்றும் சத்ருக்னர் பிறப்பும் வளர்ச்சியும், அவர்களின் கல்வி, திறமை, ரிஷி விஸ்வாமித்திரரைச் சேர்ந்த பயணங்கள், சீதையை மணந்த கதை ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. இராமனின் தெய்வீக குணங்கள் வெளிப்படும் முக்கியமான காண்டம்Show book
Thirumana Sandangugal Edgar Thurston Produced by : Aurality மற்றும் சுவாசம் பதிப்பகம் Narrated by: புஷ்பலதா பார்த்திபன் தென்னிந்திய திருமணச் சடங்குகள்' என்ற இந்தப் புத்தகம், 1903ல் எழுதப்பட்டு விட்டது. தனிப் புத்தகமாகவும், அவரது சகுனங்கள், மூட நம்பிக்கைகள் பற்றிய புத்தகத்தில் ஒரு பகுதியாகவும் இந்தப் புத்தகம் இருக்கிறது. தென்னிந்தியாவின் பல்வேறு சாதிகளில் நிலவும் திருமணச் சடங்குகளை மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். புத்தகத்தைச் சாதிய ரீதியாக இல்லாமல், சடங்குகளின் வழியே புத்தகத்தை எடுத்து செல்கிறார். பல்வேறு பழக்கவழக்கங்களையும், அவை சாதிகளின் இடையே எப்படி வேறுபடுகிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறார். வரலாறு என்பது பெரும்பாலும் வென்றவர்கள் பார்வையிலும், அதிகாரத்தில் இருப்பவர்களின் நோக்கிலும் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. எனவேதான் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் புத்தகங்கள் வரலாற்றின் இன்னொரு முக்கியமான பக்கத்தைக் காட்டுகின்றது. எழுத்தாளர் Edgar Thurston (Author) எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்Show book
Emotional Intelligence released by Aurality எமோஷனல் இண்டெலிஜென்ஸ் – உணர்ச்சிகளை ஆளும் கலை ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற்று தனது லட்சியத்தை அடைய அறிவாற்றல் மட்டும் போதுமா? ஐ. க்யு. அதிகம் பெற்று, படிப்பில் தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்த பலர், தங்களது தொழில் வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி, தற்கொலை வரைக்கும் சென்றுவிடுவது ஏன்? உணர்ச்சிகளின் பின்னணி என்ன? மனிதனை ஆட்டிப்படைக்கும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நம் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவர முடியுமா? எமோஷனல் இண்டெலிஜென்ஸ் என்றால் என்ன? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் எமோஷனல் இண்டெலிஜென்ஸுக்கும் என்ன தொடர்பு? சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் எமோஷனல் இண்டெலிஜென்ஸைப் பயன்படுத்தி வெற்றி காண்பது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்தப் புத்தகம். எமோஷனல் இண்டெலிஜென்ஸ் குறித்த அனைத்தையும் எளிமையான தமிழில் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி இருக்கிறார் ஜி.எஸ்.சிவகுமார் ஜி.எஸ்.சிவகுமார் எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம், Aurality release (Tamil Audio Book by Aurality) கேட்போம்Show book