Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
மேகமாய் வந்து போகிறேன் - cover

மேகமாய் வந்து போகிறேன்

ஆர்.மகேஸ்வரி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

சாப்பிட்டு முடித்து... தயாளன் சென்னைக்குப் புறப்பட்டுப் போனதும் சுப்ரியா மனம் கலங்கினாள்.“நீ ஒழுங்காய் இருந்திருந்தால்... நானும் ஒழுங்காய் இருப்பேனே டாடி! இப்படி வீடு வீடா என்னை விட்டு... எதை மாத்தப்போறே?”இந்த சின்ன வீட்டிற்குள் எவ்வளவு நேரம் தான் இருப்பது? போரடித்தது அவளுக்கு!மூன்று பெட்ரூம், ஒரு ஹால், பூஜையறை, கிச்சன், பாத்ரூம் வகையறாவுடன் மொட்டை மாடி! அவ்வளவதான்! இந்த வீட்டின் மொத்தமும், சென்னையில் உள்ள அவள் வீட்டின் ஹாலில் அடங்கி விடும்.அவளுக்கென்று ரோமா தன் அறையை ஒதுக்கித் தந்திருந்தாள்.சுப்ரியா முகம் சுளித்தாள்.“இதுவா... இதிலேயா நான் தங்கணும்? எங்க வீட்டு பாத்ரூம் அளவுக்குதான் இருக்கு?”ரோமா சங்கடமாய் நெளிந்தாள்.“எனக்கு இது அதிகம். ஆனா, உனக்கு பத்தாது தான்!”“பக்கத்து ரூம் கொஞ்சம் பெரிசாயிருக்கே? அங்கே ஷிப்ட் பண்ணு!”“அ... அது... எங்க ஆதி அண்ணாவோடது சுப்ரியா.”“இருக்கட்டுமே... ஸோ வாட்?”“அ... அண்ணனுக்கு தான் வச்சப் பொருள் வச்ச இடத்துல இல்லைன்னா கோபம் வரும். ப்ளீஸ்... அட்ஜஸ்ட் பண்ணிக்க.”“ஏஸியெல்லாம் இல்லையா? அட சீலிங் ஃபேன் கூட இல்லாம எப்படி உயிர் வாழறே ரோமா?”அவளின் பேச்சில் தொனித்த ஏளனமும், கிண்டலும் அவர்களின் வசதியின்மையை சுட்டிக்காட்டுவதை நன்றாகவே உணர்ந்தாலும் ரோமாவிற்கு அவள் மீது கோபமே வரவில்லை.“இது உங்க ஊரு மாதிரி ஹாட் இல்லை சுப்ரியா! வெலிங்டன். ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கிற ஊரு. அதோ டேபிள் ஃபேன் இருக்கு. ஆனா, ஈவினிங்ல இந்த ஜன்னலை மூட மறந்துட்டியோ... பனிப்புகை உள்ளே நுழைஞ்சு உன்னை உறைய வச்சிடும். பி கேர்ஃபுல்!”.“ரியல்லி? ஜன்னல் வழியா பனிப்புகை உள்ளேயே வந்துடுமா? சில்லுன்னு இருக்குமா? என்னை அப்படியே... கவர் பண்ணிக்குமா? த்ரில்ங்கா இல்லே?” விழிகள் விரிய ஆர்வமாய் கேட்ட போது...ரோமாவிற்கு சிரிப்புதான் வந்தது.“ஏன் சிரிக்கிறே?”“ரொம்ப சாதாரண விஷயம் தான் இது? ஆனா அதைக் கூட தெரிஞ்சுக்காம... இத்தனை வருஷமா சென்னையிலே மாசுப்பட்ட புகையிலேயே வாழ்ந்திருக்கியே...”“‘வாட்... டு... டூ? இப்படியொரு அத்தை இருக்காங்கன்றதே எனக்கு இப்ப தானே தெரியும்?”“சென்னையை தவிர எங்கேயும் போனதில்லையா?”“பாண்டிச்சேரி, மகாபலிபுரம் தவிர, ரெண்டு முறை கனடாவுக்கும், சிங்கப்பூர், மலேஷியாவுக்கும் ஃப்ரண்ஸோட ஜாலி டூர் போயிருக்கேன். தட்ஸால்!”பேசிக்கொண்டே தன் லெதர் பேக்கிலிருந்து ஷாம்பூ, ஸ்ப்ரே, மாய்ச்ரைஸர் போன்ற பொருட்களை எடுத்து டேபிள் மீது வைத்தாள்.ரோமா பெட் கவரை மாற்றிக் கொண்டே அவளை ரசித்தாள்.மூங்கில் போன்ற தேகம். பள பள சருமம். மாசு மருவில்லாத முகம். உறுத்தாத நிறத்தில் லிப்ஸ்டிக். ஒரே சீராக வெட்டப்பட்ட தோள் தாண்டி புரண்ட கூந்தலுக்கு... அங்கங்கே விட்டு விட்டு தங்க நிறம் பூசியிருந்தாள். முழங்கால் வரை கவ்விப் பிடித்திருந்த பேண்ட்... அவளின் வழுவழுப்பபான கால்களை காட்டியது. டைட்பனியன் அவளின் அளவான அளவை சொல்லியது. மொத்தத்தில் சுப்ரியா அதிரடியான நாகரீகப் பட்டாசு.“உங்கண்ணே எங்கே?”“பெங்களூரில் வொர்க் பண்றார்!”“ஓஹோ... எங்கே... அவரோட போட்டோவையேக் காணோம்”“அதோ... ஹால்ல மாட்டியிருக்கே?”“அதுவா... ஏய்... அது பாரதியார் இல்லே?”“போச்சு... எங்கண்ணன்தான் அது! பாரதியார்னா ரொம்பப்பிடிக்கும். அதனால் அவரை மாதிரி வேஷம் போட்டு போட்டோ எடுத்துக்கிட்டாரு!”அருகில் சென்று உற்றுப் பார்த்தவளுக்கு வித்தியாசம் புரிந்தது.
Available since: 01/13/2024.
Print length: 68 pages.

Other books that might interest you

  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Show book
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Show book
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book