Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
புதிராக ஒரு பூ! - cover
LER

புதிராக ஒரு பூ!

ஆர்.சுமதி

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

யுவராணியின் கையிலிருந்த தொலைபேசி கிடுகிடு வென ஆடியது.மெல்ல நழுவியது.அவள் உடலும் மெல்ல சோபாவில் அமர்ந்தது.‘சாந்தகுமார் கொலை செய்யப்பட்டானா? கடவுளே...’ கொஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.இன்னும் காதில் அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன அந்த வாசகங்களே திரும்பத் திரும்ப ஒலித்தன.கைகால்கள் நடுநடுங்க என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறினாள்.நம்ப முடியாத அந்தச் செய்தி அவளைத் தலைகீழாகப் புரட்டிப்போட, சாந்தகுமாரின் முகத்தை உடனே பார்த்து விடத் துடித்தது இதயம்.அவசரமாக வாசலுக்கு ஓடினாள்.போர்டிகோவில் நின்றிருந்த காரை எடுத்துக் கொண்டு அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்திற்கு விரைந்தாள். கடற்கரையை ஒட்டிய ஆள் நடமாட்டமில்லாத பகுதி அது. சவுக்குக் காட்டின் தொடக்கத்தில் அந்த விடிந்தும் விடியாத பொழுதிலும் சிறு கூட்டம் இருந்தது. போலீஸ் ஜீப் தெரிந்தது.சாலையை ஓட்டிப் பிரிந்த மணற் பாதையில் தெரிந்தது சாந்தகுமாரின் கார்.தன் காரை நிறுத்தி இறங்கிய யுவராணியை நோக்கி வந்தார் இன்ஸ்பெக்டர் சத்யம்.எதையோ பேச வாயெடுத்தவர், எதுவுமே பேசாமல் சாந்தகுமாரின் காரைக் காட்டினார்.யுவராணி காருக்கருகே ஓடினாள்.பின் இருக்கையில் பிணமாகக் கிடந்தான் சாந்தகுமார்பார்த்ததுமே அலறினாள் யுவராணி. வாலிலேயே அடித்துக் கொண்டு அழுதாள்.கூட்டம் வேடிக்கை பார்த்தது.ஃபோட்டோகிராபரும் கைரேகை நிபுணரும் அவர்களுடைய பணியைத் தொடங்க, இன்ஸ்பெக்டர் சத்யம் போஸ்ட்மார்ட்டத்திற்கு பாடியைக் கொண்டு போக உத்தரவிட்டார்.அழுது கொண்டிருந்த யுவராணியை நெருங்கினார்.‘மேடம்... உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கணும். நீங்க உங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டா...”“கேளுங்க சார்!” கண்ணீரை துடைத்துக் கொண்டு அவரை ஏறிட்டாள்.“உங்க கணவரைக் கயிறால கழுத்தை நெரிச்சுக் கொலை செய்து அவரோட கார்லயே கொண்டு வந்து இங்க போட்டுட்டுப் போயிருக்காங்க. கொலை செய்தவனோ... இல்லை, அவனோட ஆளோதான் காரை ஒட்டிக்கிட்டு வந்திருக்கானுங்க. உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா?”யுவராணி உதடு பிதுக்கினாள்.“தெரியலை சார். யார் இப்படிப் பண்ணினாங்கன்னு எனக்குத் தெரியலை.”“உங்க கணவர் ஒரு தொழிலதிபர். தொழில் முறையில போட்டியாளர்கள் இருக்க வாய்ப்பிருக்கு. அப்படி யாராவது...”“தெரியலை சார். நான் அவரோட கம்பெனி விஷயத்துல எதிலேயும் ஈடுபடறதில்லை. கம்பெனி விவகாரங்களையும் அவர் இதுவரை வீட்ல பேசினதில்லை. அவர் பேசாதத்துக்குக் காரணம் நான் எப்பவுமே கம்பெனி விஷயங்களை இன்ட்ரஸ்ட்டா கேட்கறதில்லை. அதனால எனக்கு அவரோட தொழில் ரீதியான எந்தப் பிரச்னையும் தெரியாது.”“ஐ...ஸீ... நேத்து அவர் எப்போ வீட்டைவிட்டுக் கிளம் பினார்?”“வழக்கம் போல ஒன்பது மணிக்கு.”“கம்பெனிக்குத்தானே போனார்.”“ஆமா!”“வேற எங்காவது போறதா சொன்னாரா?”“வந்து... ஆமா சார். மதியம் வீட்டுக்குச் சாப்பிட வர மாட்டேன்னு சொன்னார். யாரோ சாப்பிடக் கூப்பிட்டிருக்கறதா சொன்னார். யாருன்னு கேட்டப்ப அவரும் ஒரு தொழிலதிபர் தான்னு சொன்னார்.”“பேர் சொன்னாரா?”“நான் கேட்டிருந்தா சொல்லியிருப்பார். நான் கேட்கலை.”“அதுக்குப் பிறகு அவர் வீட்டுக்கு வரவே இல்லையா?”“ வரலை. ஒரு போன் கூட அவர்கிட்டேயிருந்து வரலை கம்பெனி விஷயமா சில நாள் ராத்திரி வர மாட்டார். அது மாதிரி வரலைன்னு நினைச்சேன். கடைசியில... இப்படி...” அழத் தொடங்கினாள்.போட்டோகிராபர், கைரேகை நிபுணர்களின் வேலை முடிந்ததும், போஸ்ட்மார்ட்டத்திற்குத் தயாரானான் சாந்தகுமார்
Disponível desde: 14/02/2024.
Comprimento de impressão: 58 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver livro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver livro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro