Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
நிலவுக்கும் நிறமுண்டு! - cover

நிலவுக்கும் நிறமுண்டு!

ஆர்.சுமதி

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

அம்மாவின் முகம் கண்டு மகனும் மகளும் துணுக்குற்றனர்.“அம்மா, ஏன் ஒரு மாதிரியாயிருக்கே?”மகளின் கேள்விக்கு கிருஷ்ணவேணி எதுவும் சொல்லவில்லை.ஐயரிடம் அர்ச்சனைப் பொருட்களைக் கொடுத்து அர்ச்சனை செய்யச் சொன்னாள்அர்ச்சனையை முடித்துக்கொண்டு வெளியே வந்த கிருஷ்ணவேணி நவநீதனிடம், “நீ காருக்குப் போ, நாங்க பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வர்றோம்” என்றாள்.இப்படி நேரத்தைக் கடத்துவது நவநீதனுக்கு எரிச்சலாக வந்தது.அவனுக்கு உடனடியாக கோகிலாவைப் பார்த்துவிட வேண்டும் என துடிப்பு உண்டானது.கோவில், அர்ச்சனை... இப்பொழுது பிரகாரம் சுற்றல் என அம்மா நேரத்தைக் கடத்துவது பிடிக்கவில்லையென்றாலும் எதுவும் சொல்லமுடியாமல் காருக்கு வந்தான்.கிருஷ்ணவேணியும், சாந்தியும் கோவிலைச் சுற்றினர்.‘சாந்தி உன்கிட்ட ஒரு விஷம் சொல்லணும்’ அம்மா அக்கம் பக்கம் யாரும் இல்லாவிட்டாலும் கிசுகிசுப்பாகப் பேசினாள்.“என்னம்மா?”“ரொம்ப அதிர்ச்சியாயிருக்குடி!”“என்ன அதிர்ச்சி?”“நாம பார்க்கப்போற பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாம்டி.”“அம்மா, நீ என்ன சொல்றே?” பிரகாரத்திலிருந்த பத்ரகாளியின் சிலையின் முக உணர்வுகளைப் பிரதிபலித்தாள் சாந்தி.“அம்மா, அந்தப் பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தா அவங்க ஏன் நம்மை பெண் பார்க்கக் கூப்பிடறாங்க? பொண்ணுக்கு ரெண்டாங்கல்யாணம் பண்றவங்க பொண்ணு விதவை, டைவேர்ஸி, அப்படின்னு விவரத்தை பதிவு பண்ணியிருப்பாங்களே. அந்த பொண்ணைப் பத்தின விவரத்துல அதெல்லாம் ஒண்ணுமில்லையே?”“வேணுமின்னே மறைச்சிருப்பாங்களோ?”“எனக்கு அப்படித் தோணலை. அம்மா, கோகிலான்னு ஊர்ல அவ மட்டும்தான் இருக்காளா? இது கிராமம். ஒரே பேர்ல ரெண்ட மூணு பொண்ணுங்க இருக்கலாம். மனசைப் போட்டு குழப்பிக்காம வாம்மா.”அம்மாவை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்தாள்.காரில் - சாய்ந்தபடி நவநீதன் மெய்மறந்து கோகிலாவின் புகைப்படத்தை மொபைலில் பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த சாந்தி திடுக்கிட்டாள்.‘அம்மா ஏதோ புதுக்கதை சொல்கிறாள். இவனோ கிடைக்கிற கேப்பிலெல்லாம் அந்த கோகிலாவோட புகைப்படத்தை பார்த்துப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்டிருக்கான்.’அவர்கள் வந்ததைக்கூட உணராமல் நின்று கொண்டிருந்த தம்பிக்காரனிடம் கிட்டத்தட்ட கடுப்படித்தாள் சாந்தி.“போதும் ஜொள்ளுவிட்டது. வண்டியை எடு” என்றாள்.“வந்துட்டீங்களா?” என்றவாறே காரில் அமர்ந்து இயக்கத் தொடங்கினான்.பத்து நிமிடங்களுக்குப் பிறகு கார் கோகிலாவின் வீட்டெதிரே நின்றது.புதிதாக கட்டப்பட்ட வீடு, பார்க்க பளிச்சென இருந்தது.எந்தவித மலர்ச்சியையும் கொள்ள முடியாமல் கிருஷ்ணவேணியின் உணர்வுகள் மாறியிருந்தன
Verfügbar seit: 14.02.2024.
Drucklänge: 77 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Zum Buch
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Zum Buch
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Zum Buch
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Zum Buch
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch