Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
மறவாதே மனமே! - cover

மறவாதே மனமே!

ஆர்.சுமதி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

பார்வதியும், அம்சா மாமியும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.“பார்வதி... என்னடி இது, உன் புள்ளையாண்டான் ஒரு குட்டியோடு வர்றான். என்ன அசிங்கம்!”பார்வதிக்கும் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது போல் இருந்தது. ஆனால், மாமி எதிரே மானம் போகாமல் பார்த்துக் கொள்ள அவள் தவித்தாள்.“என்ன மாமி... அசிங்கம் அது இதுன்னுகிட்டு! தன்கூட வேலை பார்க்கிற பொண்ணா இருக்கலாம். இப்ப ஆம்பளையும் பொம்பளையும் சகஜமா பழகுதுங்களே?”“அதுக்கு இப்படி ஒட்டி உரசிக்கிட்டா போவாங்க? அந்தப் பொண்ணு உன் பையன் இடுப்பை என்னமா உடும்புப் பிடியா புடிச்சுக்கிட்டு வண்டியில் உட்கார்ந்திருந்தா... அருமை பெருமையா ஒண்ணு பெத்து அதையும் இப்படி விட்டுட்டியேடி! அவள் என்ன சாதியோ... குலமோ? கடவுளே...”பார்வதியால் எதுவும் பேச முடியவில்லை. அவளுக்கு அடிவயிறு கலங்கியது.“இந்தக் காலத்துல நடையா நடந்து நாம தேடி கட்டி வச்சதுங்களே உள்ளே வந்த ரெண்டு நாளில் நம்மை எந்த ஊருன்னு கேட்குதுங்க. இப்படி தானாக வர்றதுங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். கணவனை கைக்குள் போட்டுக்கிட்டு நம்மை ஒருவழி பண்ணிடும். ஆரம்பத்திலேயே நாம எச்சரிக்கையா இருக்கிறது நல்லது.”“என்ன மாமி நீங்க? என்னமோ கல்யாணமே நடந்துட்ட மாதிரி பேசுறீங்க? நான் நடக்க விட்டுடுவேனா? சாதி, மதம், ஜாதகம் இதெல்லாம் பார்த்துதான் என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணுவேன். நான் பார்க்கிற பொண்ணுதான் என் வீட்டுக்கு மருமகளாக வரணும்.”“அதை, உன் புள்ளையாண்டான் கேட்கணுமே!”“கேட்காம எங்க போவான்? அவன் எனக்குப் பயந்தவன்.”“காதல் வந்துட்டா, இந்தக் காலத்துல பயமாவது... கத்திரிக்காயாவது? இதோ பாரு... வீட்டுக்குப் போனதும் தடாலடியா அவனைப் பிடிச்சு கத்தாதே. மெதுவா கல்யாண பேச்சை எடு. அவனாக சொல்லட்டும். அப்புறம் ஒரு பிடி பிடி” மாமி திட்டம் போட்டுக் கொடுத்தாள்.இருவரும் தங்கள் வீட்டுக்கு வந்தனர். தனது அம்சா மாமி, பார்வதியின் பக்கத்து வீட்டுக்காரி.பார்வதி, வீட்டுக்குள் நுழையும் போது, முற்றத்தைப் பார்த்தாள். கேசவனின் “பைக்” இல்லை.‘அவன் எங்கே போனான்? அவளை எங்கே இறக்கி விட்டான்?’உள்ளே வந்தாள்.திண்ணையில் அமர்ந்திருந்தார், கணவர் முருகேசன். அவர் கையில் செய்தித்தாள்.“என்னங்க... உங்க அருமை பையன் வந்தானா?” கேட்டவாறு, அருகில் அமர்ந்தாள்.“வந்தான்... யாரோ நண்பனைப் பார்த்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு, உள்ளேகூட வராம அப்படியே போயிட்டான்.”“இன்னைக்கு என்ன காரியம் நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா?”“என்ன நடந்தது? நீ கோவிலுக்கு போயிட்டு வர்றே. அவ்வளவுதானே?”“அதுமட்டுமில்லை” என்று இழுத்தவள், வழியில் தான் கண்ட காட்சியைச் சொன்னாள்.“கொடுத்து வச்சவன். அந்தக் காலத்துல எதிரே வர்ற பொண்ணை நிமிர்ந்து பார்க்கவே எனக்கு தொடை நடுங்கும்.”“என்ன... கிண்டலா?”“கிண்டல் இல்லை. இப்போ என்ன பண்ணுறது? அவன் இஷ்டப்பட்ட பொண்ணையே கட்டிவச்சுட்டா போச்சு.”“போதும்... நீங்க ஒருத்தரே போதும். இந்தக் குடும்பம் உருப்பட்ட மாதிரிதான்.கணவனோடு அவள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கேசவன், வண்டியில் வந்து இறங்கினான். உற்சாகமாக அவன் பெற்றோரை நோக்கி வரவும், ஆத்திரத்தில் கொதித்தாள், அம்மா.அவன், அதை சட்டை செய்யவில்லை.“அம்மா! பசிக்குது” என்றான்.“இப்போ என்னால் டிபனெல்லாம் பண்ண முடியாது. காப்பி வேணா போட்டுத் தர்றேன்.”“காப்பி வேண்டாம்! வர்ற வழியில என் சகாவோடு காப்பி குடிச்சுட்டேன்.”‘ஆம்பளை சகாவா? பொம்பளை சகாவா?’ அவசரமாகக் கேட்பதற்கு அம்மாவுக்கு நாக்கு துடித்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள்.“அவன்தான் பசிக்குதுங்கிறானே... ஏதாவது பண்ணிக் கொடேன்” என்றபடி முருகேசன் உள்ளே வந்தார்.பார்வதி கோபமாக சமையலறைக்குள் நுழைந்தாள். எரிச்சலோடு, பாத்திரங்களை போட்டு உருட்டினாள்.“அம்மாவுக்கு என்னாச்சு? கோபமாக இருக்கிற மாதிரி தெரியுது?” அப்பாவைப் பார்த்து கேட்டபடியே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான், கேசவன்.“கொஞ்ச நேரத்துல தெரியும்... நீயே பாரு” என்றபடி அவரும் தொலைக்காட்சியில் ஆழ்ந்தார்.சில நிமிடங்களில் சூடாக ரவா உப்புமாவுடன் வந்தாள், பார்வதி. ‘டங்’கென மகன் எதிரே வைத்தாள். அவன் சாப்பிடத் தொடங்க, அம்மா இங்கும் அங்கும் உலவினாள்.‘முதலில் கல்யாண பேசசை எடு’ என அம்சா மாமி சொன்னது மறந்து போனது.அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தவளைப் போல் இருந்துவிட்டு திடீரென கத்தத் தொடங்கினாள்.“ஏன்டா... உன் இடுப்பைப் புடிச்சுக்கிட்டு வண்டியில் ஒருத்தி வந்தாளே... அவ யாருடா?”அதிரடியாக அம்மா இப்படிக் கேட்பாள் என்பதை எதிர்பார்க்காத கேசவன், ஒரு கணம் ஆடித்தான் போனான்
Available since: 02/14/2024.
Print length: 84 pages.

Other books that might interest you

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Show book
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Show book
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Show book