Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
கண்ணன் வரும் நேரமிது - cover

கண்ணன் வரும் நேரமிது

ஆர்.சுமதி

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

புருஷன் இருக்கறவரைதான் நமக்கு மதிப்பு மரியாதை. அப்பறம் ஒண்ணும் கிடையாது.’சுசீலாவைப் பார்த்தபடியே லட்டு பிடிக்கத்துவங்கிய பிரபாவதிக்கு சற்று முன் செண்பகம் சொன்ன இந்த வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.‘புருஷன் இருக்கறவரைதான் மதிப்பும், மரியாதையும் கிடைக்குமாம். புருஷன் இருந்து இவளுக்கென்ன கிடைத்தது? கடைசியில் ஹோமில் இருக்க வேண்டிய நிலமை.’‘அதுக்கென்ன பண்றது? இவளை யாரு ஹோம்ல இருக்கச் சொன்னா? புருஷனும் பொண்ணுங்களும் பேரும் புகழுமாயிருக்காங்க. பணத்துலயே புரள்றாங்க. இவ நினைச்சா மகாராணி மாதிரி வாழலாம். திமிர் வேற என்ன? வரட்டு கௌரவம். தானே தன்னை வருத்திக்கறா. இவளுக்கென்ன ஹோம்ல வந்து கெடக்கணும்னு தலையெழுத்தா? காசுதான் வாழ்க்கை என நினைப்பவர்கள் அவளைப்பற்றி பேசும் பேச்சு இது.’‘வாழ்க்கைன்னா விட்டுக் கொடுத்துத்தான் போகணும்!வாழ்க்கையைப் பற்றிய தத்துவங்களை பேசுவதற்காகவே அவதாரம் எடுத்த அரிஸ்டாட்டில்கள் அவளுக்கு தரும் அறிவுரை இது!’இத்தனைக்கும் வயது சுசீலாவிற்கு ஐம்பதுதான். அதற்குள்ளேயே வாழ்க்கையை வெறுத்துவிட்டாள்.‘யாருக்காக ஓடி ஓடி உழைக்கணும்? உழைச்சு உழைச்சு என்னாகப் போகுது? நம்ம உழைப்பு மத்தவங்களோட முன்னேற்றத்துக்கு உதவுறவரைதான் நம்ம உழைப்புக்கு மதிப்பு. அதுக்கு பிறகு நம்ம உழைப்பு அவங்களுக்கு கால் தூசு!’இதுதான் சுசீலா தன் வாழ்க்கையிலிருந்து கத்துக்கிட்ட பாசம்தன் உழைப்பு பிறருக்கு கால்தூசியான போது அவள் உழைப்பதை நிறுத்தி விட்டாள்.வேலையை ராஜினாமா செய்துவிட்டாள். எடுத்துக்கொண்டிருந்த டியூஷனையெல்லாம் மூடினாள். கையிலிருக்கும் பணமே காலம் முழுவதும் என் ஒருத்திக்கு போதும் என இந்த ஹோமில் வந்து சேர்ந்து விட்டாள்.முதியோர் இல்லத்தில் வந்து சேருமளவிற்கு அவள் ஒன்றும் வயதானவளில்லை.ஐம்பதை நெருங்குகிறாள். அவ்வளவுதான். தனியாக வாழப் பிடிக்கவில்லை. இங்கு வந்துவிட்டாள்.இங்கு வந்துவிட்டாலே தவிர யாருடனும் நெருங்கிப் பழகமாட்டாள். மனவேதனையை யாரிடமும் பகிரமாட்டாள்.மனம் விட்டு சிரிக்கமாட்டாள்.அவள் கதையை அவள் பகிர வேண்டிய அவசியமே இல்லை. ஊரே அறிந்த ஒன்று.சுவாரசியமாக பேசும் ஒன்று.‘சுசீலா இந்த நீயூஸை படியேன். உன் புருஷனுக்கும் புதுசா நடிக்க வந்த கேரள நடிகைக்கும் கிசுகிசுன்னு போட்டிருக்கு. இந்த நடிகைகளுக்கு விவஸ்தையே இல்லையா? அழகாயிருக்காளுங்க வயசும் திறமையும் இருக்கு. அப்பன் வயசுலயிருக்கற நடிகர்களை எதுக்கு சுத்தறாளுங்க...’அந்த இல்லத்தில் அடிக்கடி சுவாரசியத்தோடு பேசப்படும் விஷயம், கவர்ச்சிகரமான விஷயம்.‘அடடா... உன் பொண்ணு நிக்கற கோலத்தைப்பாரு.உவ்வே. அது டிரஸ்ஸும் மேக்கப்பும்!’அட்டைப்படத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி நிற்கும் அவளுடைய பெண்ணின் புகைப்படம் வந்திருக்கும் பத்திரிகையை அனைவரும் முகச் சுளிப்புடன் பார்க்கும் போது எதுவுமே தன்னை பாதிக்காததைப் போல் மாத நாவலில் மூழ்கியிருப்பாள் சுசீலா
Available since: 02/14/2024.
Print length: 93 pages.

Other books that might interest you

  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Show book
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book