¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
வளர்ப்பு - cover

வளர்ப்பு

தேவிபாலா

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

கிட்டத்தட்ட 2 வயது நெருங்குவதற்குள் குறும்பும் வன்முறையும் உச்ச கட்டத்துக்கு வந்து விட்டது!வீட்டில் சரமாரியாக பொருட்கள் உடைந்தது! பூஜை அறை சாமி படங்களையும் விட்டு வைக்கவில்லை.சேதாரம் அதிகமானது!சாக்கடையில் கைவிடுவது! சுவரை சுரண்டுவது, மண் தின்னுவது என சகல சேட்டைகளும்!ஒழுங்காக உடைகளை அணியமாட்டான்!பிறந்த மேனியாக அவன் நிற்பதை ரசித்து சிரிப்பார்கள்.ஒரு வாட்ஸ் அப் வீடியோவில் ஆண் குழந்தையின் பிறப்பு உறுப்பை நாய் கவ்வியதை படுபயங்கரமாக வெளியிட்டிருக்க, ரூபா அதை செல்வத்திடம் காட்டினாள்.“விட்ரு! அது தெருவுல உள்ள பிச்சைக்காரக் குழந்தை! நம்ம ஆதியோட ஏன் கம்பேர் பண்ற?”“இல்லைப்பா! தொற்று நோய் எதுக்கும் ஆளாகக் கூடாதில்லையா?”கேட்கவில்லை!ரூபாவின் பெற்றோரும், தம்பியும் உள்ளூர்தான்.அவர்களும் இவனது அடிக்குத் தப்பவில்லை.ரூபா வீட்டுக்கு வந்த சமயம், அப்பா கேட்டே விட்டார்.“என்ன ரூபா? இப்பிடி வளர்க்கிறாங்க? தர்ஷினி கவனிக்க வேண்டாமா?”அவ எந்த ஒரு பொறுப்பையும் சுமக்கமாட்டா! நான் பேசிப் பாத்துட்டேன்! பேரனைச் சொன்னா, அவங்களுக்குப் புடிக்காது! சாரதி அண்ணனோட குடும்பம் முதல் பிறந்த நாளுக்கு வந்துட்டு, வேதனையோட திரும்பினாங்க!”“அடடா! குழந்தை பிறந்து 2 வருஷமாச்சு! இவ எதுக்கு பிறந்த வீட்லயே இருக்கா?”“அம்மா! எங்கிட்ட பேசற மாதிரி அவங்ககிட்டப் பேசாதே! உறவே கெட்டுப் போயிடும்!”“நீ மாப்ளைகிட்டப் பேசு!”“உபயோகமில்லைம்மா! அவர் எதிலும் தலையிடமாட்டார்! வெளில அடி பட்டா சரியாகும்! என் குடும்பமாச்சே! அது கூடாதுனு நான் பாக்கறேன். கேக்கறதில்லை! நீங்க யாரும் பேசிடாதீங்க!”அடுத்த வாரமே, உறவுக்காரர்கள் வீட்டில் குழந்தையின் பேர் சூட்டு விழாவுக்கு போகும்படி இருந்தது!குழந்தை பிறந்த 27-வது நாள் அவர் பெயரிட அத்தனை பேரும் போயிருந்தார்கள்.அது பொம்மை போலிருக்க, ஆதி நெருங்கி, அதைத் தொட்டுப் பார்த்து படக்கென கிள்ளி விடஅது வீரிட்டு அழ,அதன் கைகளில் ஆதியின் நகம்பட்டு ரத்தத் துளிகள்.“என்ன விசாலம்? உன் பேரனைக் கவனிக்கமாட்டியா? பிஞ்சுக் குழந்தையைக் கிள்ளிட்டான்!”“தர்ஷினி! பெத்துட்டாப் போதாது! அதும்மேல கண் வச்சு கவனிக்கணும்!”குடும்பம் கொதித்து அம்மா, மகளை விளாசத் தொடங்க, பதிலே பேச முடியவில்லை.ஒரு மாதிரி ரசாபாசம் ஆகிவிட்டது!வாசுதேவனுக்கு லீவு இல்லை என்பதால், வர முடியவில்லை.மாலை வீடு திரும்பி விட்டார்கள்.“ஏண்டா ராஜா, அந்த மாதிரி செஞ்சே? அது குட்டிப் பாப்பா இல்லையா! செய்யக்கூடாது!”குரலில் கனம் ஏற்றி விசாலம் சொல்ல,பாட்டியை அடித்தான். கொலைப் பார்வை பார்த்தான்.“அம்மா! அவனைத் திட்டாதே! நீ சொன்னா, அவனால தாங்கிக்க முடியாது!”ரூபாவுக்கு பொறுக்க முடியவில்லை.“தப்பு தர்ஷினி! இப்பக்கூட அத்தை கண்டிக்கலைனா, அது சரியில்லை. நீயும் அத்தையும் அங்கே வாங்கின பேச்சு போதாதா? இந்த அவமானம் உங்களுக்குத் தேவையா?”“அண்ணி! இதுல என்ன அவமானம்! அவங்க பேசினா, நாங்க கரைஞ்சா போயிடுவோம்! அதுக்காக பச்சப் புள்ளையை அடிக்கச் சொல்றீங்களா?”“இல்லை தர்ஷினி! கண்டிக்கலைனா தப்பாயிடும்! நாளைக்கு இவனைக் கூட்டிட்டு அந்த வீட்டுக்குப் போக முடியுமா?”“வேண்டாம்! ஆதியைப் புடிக்காதவங்க எனக்கு வேண்டாம்!”“இப்பிடி எல்லாரையும் உதற முடியுமா தர்ஷினி!”விசாலம் கடுப்பாகி விட்டாள்.“ரூபா! அவ, ஆதிக்கு அம்மா! அவன்தான் அவளுக்கு முதல்ல உசத்தி. அவனை யாரு வேண்டாம்னு சொன்னாலும், அவ உதறுவா! அதுதான் நியாயம்!”“அத்தே! அது பிஞ்சுக் குழந்தை! இவனுக்கும் விவரம் தெரியாது! படாத இடத்துல பட்டு விபரீதமாயிருந்தா, நாம என்ன செய்ய முடியும் அத்தே?”“எதுக்கு ஓவரா கற்பனை பண்ற? கொஞ்ச நாளா குழந்தை மேல வெளி ஆட்களை விட நீதான் அதிகமா புகார் படிக்கற!”“அம்மா! 2 வருஷங்கள் கடந்தும் தனக்கு வரலைனு அண்ணிக்கு ஆதங்கம்! அதான் என் பிள்ளையைக் கழுவி ஊத்தறாங்க!
Disponible desde: 16/01/2024.
Longitud de impresión: 86 páginas.

Otros libros que te pueden interesar

  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver libro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver libro
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Ver libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver libro