¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
துரோகம் புதிது! - cover

துரோகம் புதிது!

தேவிபாலா

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

“நம்ம ஜேம்ஸைப் பத்தி நீ என்ன நினைக்கறே மேரி?”
 
“யாரு? உங்க தங்கச்சி மகன் தானே?”
 
“ம்!”
 
“அவனை விட ஒரு நல்ல பையன் உண்டா?”
 
“அவன் நல்லவன்தான். ஆனா மூணாவது தங்கச்சியைக் கூட இப்பத்தான் கட்டிக் குடுத்தான். ஏகப்பட்ட கடன் இருக்கே அவனுக்கு!”
 
“அவனுக்குக் கடன் இருந்தா, உங்களை அது எப்படி பாதிக்கும்?”
 
“நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரியலையா?”
 
“புரியுதுங்க. நம்ம ஸ்டெல்லாவை ஜேம்ஸுக்குக் கட்டிக் குடுக்கலாம்னு சொல்ல வர்றீங்க!”
 
“ஆமாம்.”
 
“ரொம்ப நல்ல தீர்மானம். கடன் சுமையும், குடும்ப பாரமும் உள்ள இடத்துல வாழ்க்கைப்படட்டும். அப்பத்தான் அவளுக்கு பொறுப்பு வரும்”
 
“குழந்தை கஷ்டப் படுவாளோ?”
 
“படட்டும். நீங்க செல்லம் குடுத்து அவளைக் கெடுத்தது போதும். உருப்படியா இன்னிக்குக் காலைலதான். கண்டிச்சீங்க அவளை முதன் முதலா!”
 
“ஏதும் ஏடாகூடமா ஆகக் கூடாதுன்னு பயந்துதான் இந்தக் கல்யாண யோசனை!”
 
“உங்க தங்கச்சிகிட்ட பேச வேண்டாமா? ஜேம்ஸ் சம்மதிக்க வேண்டாமா?”
 
அழைப்பு மணி ஒலித்தது.
 
திறந்தார் ராபர்ட்.
 
ஜேம்ஸ் வாசலில் நின்றான்.
 
“ஆயுசு நூறு! உன்னைப் பற்றித்தான் நானும் உங்கத்தையும் பேசிட்டு இருக்கம்!”
 
“வா தம்பி!”
 
“இந்தாங்க மாமா ஸ்வீட்!”
 
“என்ன விசேஷம் ஜேம்ஸ்?”
 
“எனக்கு ஆபீஸ்ல ப்ரமோஷன் வந்திருக்கு. அதான் அம்மா ஸ்வீட் வாங்கிட்டுப் போகச் சொன்னாங்க!”
 
“அவளும் வந்திருக்கலாமே!”
 
“வழக்கமான ரத்த அழுத்தம். என் கடன் சுமையெல்லாம் நீங்கி, நான் தெளியற வரைக்கும் அம்மாவோட நோய் தீராது!”
 
“உன் கடனைத் தீர்க்க நான் ஒரு வழி சொல்லப் போறேன் ஜேம்ஸ்!”
 
“என்ன மாமா அது?”
 
“என்னங்க நீங்க? உங்க தங்கச்சி கிட்ட பேச வேண்டிய விஷயம் இது!”
 
“சரிதான்! சம்மதம் சொல்ல வேண்டியது இவன்தானே?”
 
“என்ன மாமா பேசறீங்க ரெண்டு பேரும்?”
 
“சம்பாதிக்கற பெண் ஒருத்தி உனக்கு மனைவியா வந்தா, கஷ்டம் தீரும் இல்லையா?”
 
“அம்மாவும் இதைச் சொல்லத் தொடங்கிட்டாங்க மாமா. தரகர் வீட்டுக்கு வரத் தொடங்கிட்டார்!”
 
“அப்படியா?”
 
“அம்மா போற வேகத்தைப் பார்த்தா, ஒரு மாசத்துக்குள்ள நிச்சயம் பண்ணிடுவாங்கனு தோணுது!”
 
“பார்த்தியா மேரி? சரியான நேரத்துல பேசத் தொடங்கிட்டம் ரெண்டு பேரும். நீ இப்பவே புறப்படு ஜேம்ஸ்!”
 
“எங்கே மாமா?”
 
“உங்க வீட்டுக்குத் தான்!”
 
“எதுக்கு?”
 
“மத்தவங்க முந்திக்கறதுக்கு முன்னால, நான் அப்ளிகேஷன் போட்ரலாம்னு பாக்கறேன்!”
 
“புரியலை!”
 
“கையில ஸ்டெல்லாவை வச்சிட்டு, வெளிப் பெண்களுக்கு உங்கம்மா ஏன் அலையணும்?”
 
“மாமா!”
 
“உனக்கு ஸ்டெல்லாவைக் கட்டிக்க இஷ்டமா ஜேம்ஸ்?”
 
“உடனே எப்படி மாமா பதில் சொல்ல முடியும்?”
 
“ஏன்? எம் பொண்ணு அழகா இல்லையா? கை நிறைய சம்பாதிக்கலையா? உன்னோட குழந்தைக் காலம் தொட்டு பழகின பெண். என்ன யோசனை ஜேம்ஸ்?”
 
“அம்மாவைக் கலக்காம யாருக்கும், எந்த பதிலும் நான் சொல்றதில்லை!”
 
“சரி வா! இப்பவே புறப்படலாம்!”
 
“நீங்க நாளைக்கு வாங்களேன் மாமா. இது தொடர்பா நானும், அம்மாவும் இன்னிக்கு பேசிர்றம்!”
 
“குட்! அதுவும் நல்லதுதான். உங்கம்மா என்ன சொல்லப் போறா? மனப்பூர்வமா சம்மதிப்பா. எனக்குத் தெரியாதா என் தங்கையை?”
 
“நான் வர்றேன் மாமா. அத்தே நான் வர்றேன்!”
 
வீடு வரும்வரை ஒரு மாதிரி குழப்பத்தில் இருந்தான் ஜேம்ஸ். வீட்டுக்குள் நுழைந்தான்.
Disponible desde: 03/02/2024.
Longitud de impresión: 109 páginas.

Otros libros que te pueden interesar

  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver libro
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Ver libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro