¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
தாலேலோ! - cover

தாலேலோ!

தேவிபாலா

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

ரேவதி பன்னிரண்டாவது வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறியிருந்தாள்.அவளை என்ஜினீயரிங் படிக்க வைக்க அம்மாவுக்கு ஆசை. அதை வெளிப்படுத்தினாள்.“சான்ஸே இல்லை! எடுத்த எடுப்புல ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் கட்ட வேண்டியிருக்கும். பணத்துக்கு எங்கே போறது?”“கொஞ்சம் கஷ்டப்பட்டு படிக்க வச்சிட்டா, எல்லாருக்கும் நல்லதுதானே பவித்ரா?”“யாருக்கு நல்லது? கட்டிக் குடுத்த பொண்ணுகிட்ட சம்பளத்தைக் கேட்டு வாங்க முடியுமா? நாம செலவழிச்சிட்டு, யாரோ அனுபவிக்கணுமா?”“அதுக்காக புள்ளைங்களை விட்ர முடியுமா?”“நீங்க பெத்த புள்ளை ரேவதி! நீங்க சேர்த்து வச்சிருக்கணும். பொண்ணைப் பெத்துட்டா ஆச்சா? எங்கப்பாவுக்கு நாங்க ரெண்டு பேர். படிக்க வச்சு, கட்டிக்குடுத்து எல்லா செலவையும் அவர்தான் செஞ்சார். யாரு உதவினாங்க?”“சரிம்மா! இங்கே அப்பா உயிரோட இல்லை. அண்ணன்தானே அவளை கரை சேர்க்கணும்?”“நான் மறுக்கலை. பி.காம்ல சேர்க்கலாம். அதுக்கே ஆயிரக்கணக்கா ஆகுது இப்ப! அந்தப் படிப்புக்கு என்ன கிடைக்குதோ, அது போதும்! புரியுதா?”வசந்த் மறுக்கவேயில்லை.ரேவதியை ஒரு பெண்கள் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்த்தார்கள்.அந்த மூன்று வருடங்கள் ரேவதி பட்டபாடு!மூன்றே உடைகள். மாறி மாறி அதைப் போட்டுக் கொண்டு கல்லூரிக்குப் போக வேண்டும். சகலத்திலும் கட்டுப்பாடு. பீஸ் கட்டுவதை சொல்லிக் காட்டி காட்டி அம்மா, மகள் இருவரையும் பவித்ரா சித்ரவதை செய்தாள்.ஒருமுறை, வசந்தே தாள முடியாமல் பவித்ராவை கேட்டுவிட, பவித்ரா பத்ரகாளியானாள்.அன்று அவள் போட்ட ஆட்டத்தில் தெருவே கூடி விட்டது.‘என்னை மாமியார் கொடுமை படுத்துகிறாள்’ என அக்கம் பக்கத்திடம் பேசி, கெரஸினை தலையில் ஊற்றிக் கொண்டு கேவலமான ஒரு நாடகத்தை அவள் அரங்கேற்ற-வசந்த் நடுங்கிப் போனான்.அம்மாவுக்கு மயக்கமே வந்து விட்டது.மான - ரோஷத்துக்குப் பயந்த குடும்பம் அது! அதிர்ந்து பேசிக்கூடப் பழக்கமில்லை.அதன் பிறகு அம்மா - மகள் இருவரும் வாய் திறப்பதில்லை.நொறுங்கிப் போனார்கள்.வசந்த் வாய் இருந்தும், ஊமையாகி விட்டான்.ரேவதி படிப்புக்காக, சகல கொடுமைகளையும் தாங்கிக் கொண்டாள்.கல்லூரி வளாகத்தில் ஒரு சில நிறுவனங்கள் நேர்முகம் நடத்த, பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் ரேவதிக்கு வேலை கிடைத்து விட்டது.உற்சாகப் பந்தாக ஓடி வந்தாள். பவித்ரா முகத்தில் மட்டும் சிரிப்பு இல்லை.அன்று இரவு அம்மா ரேவதியை அணைத்துக் கொண்டாள்.“வர்ற சம்பளத்தை சேர்த்து வச்சு, உன் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கணும்மா!”“கோட்டை கட்டாதேம்மா. இப்பத்தான் எனக்கு வேலை கிடைச்சிருக்கு. இப்பவும் அண்ணிதான் குடும்பத் தலைவி. என்ன திட்டம் போட்டிருக்காங்கனு யாருக்குத் தெரியும்?“என்னடீ பேசற? உன் சம்பளத்துக்கு பட்ஜெட் போட இவ யாரு?”“அப்படி சொல்லாதேம்மா! நீயும் தப்பா பேசற! இத்தனை நாள் சண்டை போட்டாலும், நான் பட்டதாரி ஆகறதை அண்ணி தடுக்கலை! அதுக்காக நன்றி சொல்லணும். அவசரப்படாதே! விட்டுப்பிடி!”மறுநாள் காலை எழுந்ததும்-“ரேவதி! இங்கே வா!”“என்னண்ணி?”“ஆபீஸ் போக நல்ல ட்ரஸ் வேணும். இன்னிக்கு சாயங்காலம் உன்னைக் கூட்டிட்டுப் போய் வாங்கித் தர்றேன்.”குரலில் கனிவு! அம்மா, வசந்த் இருவருக்கும் ஆச்சர்யம்.சொன்னபடியே மாலை ரேவதியை அழைத்துப் போய், உடைகள், செருப்பு, ஹேண்ட் பேக், மேக்கப் சாதனங்கள் என எட்டாயிரம் ரூபாய்க்கு கார்ட் போட்டு வாங்கினாள்.ரேவதி மிரண்டு போனாள்.வீட்டுக்கு வந்து அம்மாவிடம் காட்டி சந்தோஷப்பட்டாள்.“உங்கிட்ட பணம் இருக்குடி! இனிமே உன்னைத் தாங்குவா! புரியுதா?”“சரிம்மா! தப்பான கண்ணோட்டத்துலயே பாக்காதே! பாசத்தை நீ குடுத்தாத்தானே உனக்கும் அது கிடைக்கும்? நாம மாற வேண்டாம். அனுசரிச்சே போவோம்.”ஒருமாத காலம் ஓடி விட்டது.பவித்ரா, ரேவதியிடம் மட்டும் பழைய கடுகடுப்பு இல்லாமல் பாசத்துடன் இருந்தாள்.அம்மாவிடம் அதே சிடுசிடுப்புதான்.முதல் சம்பளம் வாங்கிக் கொண்டு ரேவதி வந்தாள். பூஜை அறையில் வைத்துக் கும்பிட்டு, அம்மாவிடம் தந்தாள்
Disponible desde: 16/01/2024.
Longitud de impresión: 72 páginas.

Otros libros que te pueden interesar

  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver libro