¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
பட்டு மாமி! - cover

பட்டு மாமி!

தேவிபாலா

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

ஆவி பறக்கும் காபியுடன் கூடத்துக்கு வந்தாள் பட்டு! ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார் ரமணி!“இந்தாங்கோ!”அதை வாங்கிக் கொண்டார் ரமணி. அவளை ஏற இறங்கப் பார்த்தார்.“ஏன் அப்படி பார்க்கறேள்?”“காலங்காத்தாலே குளிச்சு லட்சணமா நெத்தி நிறைய குங்குமத்தோட வர்ற உன் மூஞ்சில முழிச்சாத்தான்மா பொழுதே சரியா விடியறது நேக்கு!”பட்டு சின்னதாகச் சிரித்தாள்.“நீ காப்பி சாப்பிட்டியோ?”“இல்லை!”“ஏன்?”“தினமும் காப்பி சாப்பிட்டா, ஒருநாள் அது இல்லைனா கஷ்டமா இருக்கும். எப்பவும் எல்லாமே கிடைக்கும்னு என்ன நிச்சயம்? நான் எதுக்கும் அடிமையானதில்லை!”அவர் ஆச்சர்யமாகப் பார்த்தார்.“என்ன டிபன் பண்ணட்டும்?”“நீ எது பண்ணினாலும் நன்னா இருக்கும். உன் இஷ்டம் போல செய்!”“மாமி எப்ப வருவா?“யாருக்குத் தெரியும்? எனக்கு சமைச்சுப் போட நீ இருக்கே! மற்ற வேலைகளை கவனிக்கவும் ஆள் இருக்கு. அவ தேச சஞ்சாரி. ஊரைச் சுத்திண்டு இருப்பா!”பட்டு மாமி உள்ளே வந்தாள்.ஆடிட்டர் ரமணிக்கு ரொம்ப கடமைப்பட்டவள். கடந்த நாலைந்து வருடங்களாக இந்த வீட்டில்தான் சமையல் வேலை!குருக்கள்மாமி மூலம் அறிமுகமாகி, அந்தப் பழக்கம் தொடர்ந்து, இன்று நெருங்கி விட்டாள்.ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருந்த ஆடிட்டர் ரமணி சம்பாதித்து குவித்துக் கொண்டிருந்தார்.ஒரே மகன்...அயல் நாட்டில் வைத்துப் படிக்க வைக்க ஆசைப் பட்டார். அவன் படிப்பு முடிந்த கையோடு, ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணியைக் காதலித்து மனைவியாக்கிக் கொள்ள, அதை ஒப்புக்கொள்ள முடியாத இவர், மகனுடன் உறவை முறித்துக் கொண்டார். மனைவி சாரதா என்ன சொல்லியும் எடுபடவில்லை. மகன் மும்பையில்தான் இருக்கிறான். சாரதா கோயில் குளம், தன் உறவுக்காரர்களின் கல்யாணம் என்று எதையாவது சொல்லிக் கொண்டு வருடத்தில் எட்டு மாதங்கள் வீட்டில் இருக்க மாட்டாள். ரமணி கண்டு கொள்ளவில்லை. தன் தொழிலில் மும்முரமாக இருந்ததால் அவரால் எதைப் பற்றியும் கவலைப்பட முடியவில்லை. வீட்டிலேயே அலுவலகம். காலை முதல் இரவு வரை க்ளையண்ட்டுகள். பிஸியான ஆடிட்டர். பட்டு மாமி வந்து சேர்ந்த ஒரு வருடத்தில் ஊர் மக்கள் சும்மா இருக்காமல், கொஞ்சம் சீண்டிவிடப் பார்த்தார்கள்-அடிக்கடி சாரதா வெளியூர் போய் விடுவதால் ஆடிட்டர் ரமணி பட்டுமாமியை வைத்திருக்கிறார் என்று. முதலில் குருக்கள் மாமிதான் இதை பட்டுவின் காதுக்குக் கொண்டு வந்தாள்.“பட்டு! நான் சொல்றேன்னு கோச்சுக்க மாட்டியே?”“சொன்னாத்தானே தெரியும்!”“நீ அந்த ஆடிட்டர் ரமணியாத்துக்கு வேலைக்குப் போறதை நிறுத்திடேன்!”“எதுக்கு?“நீயும் வயசான கிழவி இல்லை. இன்னிக்கெல்லாம் போனா, நாற்பது கூட ஆகலை நோக்கு. பெண் குழந்தை வேற இருக்கு.”“நேராச் சொல்லுங்கோ!”“கூசறது நேக்கு!”பட்டு வாசல் திண்ணையில்தான் உட்கார்ந்திருந்தாள். சற்று தள்ளி நாயரின் சாயாக் கடையில் நாலைந்து பேர்... ஆட்டோக்காரர் உண்ணியின் அம்மா... எதிரே சவுண்டி மடத்தில் சின்னதான ஒரு கூட்டம்... பட்டு சட்டென குரலை உயர்த்திவிட்டாள்.“எதுக்கு ஆடிட்டர் ரமணியாத்துக்கு சமையல் வேலைக்குப் போறதை நிறுத்தணும்?”“பட்டு, மொள்ளடி! எதுக்கு இப்ப நீ குரலை உசத்தறாய்?”“நாலு பேர் தெரிஞ்சுக்கட்டுமே மாமி! தனித்தனியா எல்லாரும் என்னைப் பத்திப் பேசத்தான் போறா. என்ன சொல்றா எல்லாரும்? ரமணி என்னை வச்சிண்டு இருக்கிறார்னுதானே! ஆமாம்... ரமணியோட ஆசைநாயகிதான் நான். போதுமா? வேறென்ன தெரியணும் இந்த கோயில்குண்டு ஜனங்களுக்கு?”“அய்யோ பட்டு... ஒரு பொம்மனாட்டி நட்ட நடு கிராமத்துல நின்னுண்டு பேசற பேச்சாடி இது?”“ஒரு பொம்மனாட்டி பத்தி ஒளிஞ்சு ஒளிஞ்சு எல்லாரும் பேசலாம். அதுல தப்பில்லை! ஆனா அவ பகிரங்மாக பதில் சொல்லக்கூடாது! அப்படித்தானே!”குருக்கள் மாமி வெல வெலத்துப் போனாள்.“த பாருங்கோ மாமி! இந்த என்னோட பதில் எல்லோருக்கும்தான். நான் உழைக்கிறேன். நாலு காசு சம்பாதிக்கிறேன். என் குழந்தைகளுக்கு சாதம் போடறேன். நான் கஷ்டப்பட்டப்ப யாரும் ஏன்னு கேக்கலை. போராடினது நான்தான். அதனால யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் நேக்கில்லை! எந்த நாய்க்காவது தைரியம் இருந்தா என் எதிர்ல வந்து நின்னு பேசட்டும்!”நின்றவர்கள் அத்தனை பேரும் சட்சட்டென காணாமல் போனார்கள்
Disponible desde: 16/01/2024.
Longitud de impresión: 220 páginas.

Otros libros que te pueden interesar

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver libro
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver libro