Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
போர்க்களப் பூக்கள் - cover
LER

போர்க்களப் பூக்கள்

தேவிபாலா

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

இரவு பத்து மணிக்குத்தான் வீடு திரும்பினாள் பிரியா.‘தாமதமாகும்’ என்று போன் மூலம் அம்மாவுக்கு தகவல் சொல்லி இருந்தாள்.ஆனாலும், அம்மாவிடம் கலக்கம் இருந்தது. வாசலைப் பார்த்தபடி உட்கார்ந்துவிட்டாள்.கம்பெனி கார் அவளைப் பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்தது.முகம் கழுவி, சாப்பிட உட்கார இரவு பத்தே முக்கால் ஆகிவிட்டது.“ஏன்ம்மா இத்தனை தாமதம்?”“வேற ஒருத்தர் ஆபீசுக்கு வர முடியாத சூழ்நிலை... அந்த வேலையை எங்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க. நிறைய தேங்கி நிக்குது... முடிச்சாகணும்.”“தினமும் ‘லேட்டாகுமா பிரியா?”“கொஞ்ச நாளைக்கும்மா! சரி பண்ணிட்டா பிரச்சினை இல்லை. சனி, ஞாயிறுகூட ‘ஓவர்டைம்’ வேலை பார்க்க வேண்டியது வரலாம்.”“இந்த ஞாயிற்றுக்கிழமையா?”“ஏன்... ஏதாவது வேலை இருக்கா?”அக்கா வாணி வெளியே வந்தாள்.“தரகர் ஒரு ஜாதகம் குடுத்தார் பிரியா. அது பிரமாதமா பொருந்தி இருக்கு. ஞாயிறு காலையில் பெண் பார்க்க வராலாமானு கேட்டிருக்காங்க... அம்மா ‘சரி’ன்னு சொல்லிட்டாங்க.”பிரியா படக்கென திரும்பினாள்என்னைக் கேக்காம எதுக்கு நீயே ஒத்துக்கற?”“என்னடி... ஞாயிற்றுக்கிழமை உனக்கு ‘லீவு’தானே? அதான் வரச் சொன்னேன்.”“ஞாயிறு ஒரு பக்கம் இருக்கட்டும். இப்ப எனக்குக் கல்யாண முயற்சி எதுக்கு?”“என்னடீ இப்படி கேக்கற? உனக்கு வயசு இருபத்தி ஆறும்மா! இனி தாமதிக்கக்கூடாது.”“நம்ம குடும்பப் பிரச்சினைகளை வச்சுகிட்டு, கல்யாணத்தைப் பத்திப் பேசலாமா?”வாணி முன்னால் வந்தாள்.“பிரியா! நீ என்னைத்தானே சொல்றே?”“அக்கா...”“எனக்கே அந்தக் கலக்கம் இருக்கு. ஒரு வாழாவெட்டி அக்கா- வீட்ல வந்து இருக்கும்போது, தங்கச்சியோட கல்யாணம் கேள்விக்குறிதான்.”“அய்யோ... அக்கா! நான் அந்த அர்த்தத்துல சொல்லலை...”“நீ சொல்லாம இருக்கலாம் பிரியா! ஆனா, நிஜம் அதுதானே? நமக்கு அப்பா உயிரோட இல்லை. அம்மா விதவை. நான் வாழாவெட்டி. இந்தக் குடும்பமே ஒரு கேள்விக்குறி. உன் கழுத்துல நல்லபடியா தாலி ஏறணுமேன்னு எனக்கே பயமா இருக்கு.”“நிறுத்துடி! நாம ஒழுக்கமா வாழறோம். உங்க அப்பா மாரடைப்புல இறந்து நாலு வருஷங்களாச்சு... அவர் தாராளமா சேர்த்து வச்சிட்டுத்தான் போயிருக்கார். பிரியா படிச்சு முடிச்சு வேலைக்கும் வந்தாச்சு. நீயும் ஒரு ‘ஸ்கூல்’ல டீச்சரா வேலை பார்க்கறே! நாம யாரையும் சார்ந்து, யார்கிட்டேயும் யாசகம் கேட்டு நிக்கலையே? ஆண்கள் இல்லாத குடும்பம். அது ஒரு தப்பா?”அம்மா லட்சுமி பொங்கி வெடித்துவிட்டாள்.மூத்தவள் வாணி வந்து அம்மாவின் தோளை அழுத்திப் பிடித்தாள்.“எதுக்காக நீ இப்படி பதற்றப்படுறே?”பதற்றம் இல்லைம்மா! உங்க அப்பாவுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்ல. நல்லா உழைச்சார். பணம் சேர்த்து வச்சார். வாணியை கல்யாணமும் செஞ்சு கொடுத்தார்.”“சரிம்மா. என் வாழ்க்கை சரியா அமையாத அதிர்ச்சிதானே அப்பாவோட மாரடைப்புக்குக் காரணம்?”“அது விதிடி!”“இல்லைம்மா... ‘ஒரு குடிகாரனுக்கு என் மகளை கட்டி வச்சிட்டேனே’ன்னு அப்பா புலம்பாத நாள் ஏது? அவர்கூட நாலஞ்சு வருஷங்கள் நான் போராடி, அவரைத் திருத்தப்பட்ட பாடு கொஞ்சமா? அந்த முயற்சியில தோத்துட்டேன். அங்கே என்னை விட்டுவைக்க மனமில்லாம, அப்பா கூட்டிட்டு வந்துட்டார். விவாகரத்தும் வாங்கியாச்சு! நல்ல காலம்... ஒரு குழந்தை பிறக்கலை. நான் பொழச்சேன். பாவம் அப்பா... உருகி உருகித்தானே உயிரைவிட்டார்?”அம்மா அழுதாள்.கை கழுவிவிட்டு எழுந்து வந்தாள் பிரியா
Disponível desde: 16/01/2024.
Comprimento de impressão: 98 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver livro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver livro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver livro