Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
பாப விமோசனம் - cover
LER

பாப விமோசனம்

தேவிபாலா

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

பேருந்தை விட்டு இறங்கினாள் வாணி! சாலையைக் கடந்தாள்.சற்றே அமைதியான சூழலில் இருக்கும் ஊட்டியிலிருந்து ஆரவாரமாக மாறுபட்டிருந்தது சென்னை!அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன் நின்றாள்இவள் வர விரும்பிய ஆபீஸ் ஐந்தாவது மாடியில்!லிஃப்ட்டுக்குள் நுழைந்து, ஐந்தாவது மாடியில் வெளிப்பட்டடள்.அது இசைத்துட்டு விற்கும் நிறுவனம் சமீப காலத்தில் காஸெட், ஸீடீ என தன் தொழிலுக்கு நாகரீக மெருகு சேர்த்துக் கொண்டுவிட்டது! உலக அரங்கில் நிற்குமளவுக்கு சர்வதேச சந்தையில் இடம் பிடித்த நிறுவனம்.அந்தரங்கச் செயலாளர் பதவி…! சம்பளம் ஆரம்பத்தில் ஏழாயிரம்! ஒரு வருட பயிற்சி காலம். வேலை ஊர்ஜிதமானால் பத்து ரூபாய்க்குமேல சம்பளம்.! மற்ற வசதிகளும் உண்டு.நேர்முகத்துக்கு அழைப்பு வரும் என்று வாணி நினைக்கவே இல்லை!விஸ்தாரமான, ஏஸி செய்யப்பட்ட ஹாலில், ஏராளமான அலங்காரத்துடன் ஏழெட்டு பெண்கள்!இவளை ஒரு மாதிரி ‘நல்ல தங்காளைப்’ பார்ப்பதைப்போல பார்த்தார்கள்.புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்தியிருந்தாள் வாணி! பத்தரை மணிக்குள் அந்த ஹாலில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டம்!“எத்தனை வேகன்ஸி?” ஒருத்தி ப்யூனைக் கேட்டாள்.“ஒரு இடம்தான்மா!”அந்தப் பெண் நம்பிக்கை இழந்தாள்.பதினொரு மணிக்கு எம்.டி. வந்து விட்டதாக ஒரு பரபரப்பு தென்பட்டது!ஒவ்வொருத்தியாக அழைக்கப்பட்டனர்.ஐந்தாவதாக,“வாணி!”வாணி எழுந்தாள். மெல்ல நடந்தாள்.“மணிமேகலை போறா பாரு!” பின்னாலிருந்து குரல் துரத்தியது!கதவைத் தள்ளித் திறந்தாள்.“யெஸ் கம் இன்!”நிமிர்ந்தாள். தூக்கி வாரிப் போட்டது!‘ரயிலில் பார்த்த அவன்!’‘பால் கொண்டு வந்த அவன்!’‘பரிவோடு பேச நினைத்து, முகம் வாடி, சொல்லாமல் போன அவன்!’அவனும் இவளை எதிர்பார்க்கவில்லை என்பதை அதிர்ந்த முகம் சொன்னது!“ஒக்காருங்க!”லேசான நடுக்கத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள் வாணி!‘கண்டிப்பாக எனக்கு இந்த வேலை கிடைக்காது!’‘இவனை நான் அலட்சியப் படுத்தியிருக்கிறேன். மறக்க மாட்டான் நிச்சயமாக’குனிந்த தலையோடு அமர்ந்திருக்கும் அவளையே ஓரிரு நொடி பார்த்தான்.சட்டென எழுந்தான்
Disponível desde: 03/02/2024.
Comprimento de impressão: 68 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Silapathikaram Full Story – Tamil Audiobook - cover

    Silapathikaram Full Story –...

    Ilango Adigal

    • 0
    • 0
    • 0
    சங்ககாலத்தின் சிறந்த காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள் எழுதியது. தமிழின் பெருமையை உலகறியச் செய்த இந்த காவியம், கண்ணகியின் பக்தி, பொறுமை, நீதி, மற்றும் வீரத்தை வெளிப்படுத்துகிறது. 
    இந்த ஆடியோபுக்கில், 
    சிலப்பதிகாரம் முழுக் கதை தமிழில் உரையாடல் 
    மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் ஆன்மீக ஆர்வலர்களுக்கு எளிய புரிதல் 
    இலக்கியத்தை காதோரம் கேட்கும் வசதி 
    தினசரி கேட்க சிறந்த வழிகாட்டி 
    சிலப்பதிகாரம் நம்பிக்கையும் நீதியும் எப்போதும் வெற்றி பெறும் என்பதை உணர்த்தும் மகத்தான காவியம்.
    Ver livro
  • குயில்பாட்டு - cover

    குயில்பாட்டு

    Bharathiyaar

    • 0
    • 0
    • 0
    ரமணியின் குரலில் பாரதியாரின் குயில் பாட்டு... புதுவை நகரின் மேற்கில் ஒரு மாஞ்சோலை. அங்கு ஒரு நாளில் விந்தைக் குயிலொன்று பாடியது. "காதல் காதல் காதல்  காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்" இன்ப வெறியும் துயரும் கலந்த குரலில் குயில் பாடியதைக் கவிஞன் கேட்டான். குயிலே! உன் துயரம் யாது என்று அதனிடம் வினவினான். "நான் மனிதர்களின் மொழியெல்லாம் அறியும் பேறு பெற்றேன்; பாட்டில் நெஞ்சைப் பறி கொடுத்தேன்; இப்போது காதலை வேண்டிக் கரைகின்றேன்" என்று கூறியது. கவிஞனுக்குக் குயிலின் மீது அடங்காக் காதல். மற்ற பறவைகளெல்லாம் சோலைக்கு வந்துவிட்டன. குயில் கவிஞரை நான்காம் நாள் அவ்விடத்திற்கு வந்து விடக்கூறி மறைந்து விடுகிறது. கவிஞனின் காதல் மனம் உறங்கவில்லை; காதலியைப் பிரிந்த துயர் வருத்த மறுநாளே சோலைக்குச் செல்கின்றான். அங்குக் குயில் ஒரு குரங்கோடு காதல்மொழி பேசிக் கொண்டிருந்தது. நீசக் கருங்குயில் அதே பாட்டைப் பாடிக் குரங்கின் அழகைப் பாராட்டிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளைக் குரங்கின மீது வீச, குரங்கு தாவி ஒளிந்தது. குயிலும் பிற பறவைகளும் மறைந்தன. இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் இருந்து மூன்றாம் நாள் காலையில் கவிஞன் சோலைக்குச் சென்றான். அப்போது குயில் கிழக்காளை மாடு ஒன்றோடு காதல் மொழி பேசிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளை உருவிக் காளையின் மீது வீச, காளை ஓடிவிடக் குயிலும் மற்ற பறவைகளும் மறைந்தன. நான்காம் நாள் கவிஞன், சோலையிலே குயிலைச் சந்தித்து அதன் பொய்மையை எடுத்துரைக்கின்றான். குயில் தன் முற்பிறவிக் கதையைக் கூறுகின்றது. கவிஞன் குயிலின் பழம்பிறப்பையும் மாடன் குரங்கனின் மாயச் செயல்களையும் உணர்ந்து தெளிகிறான். குயிலை முத்தமிடுகிறான். குயில் மறைந்து அங்கே கொள்ளை வனப்புடை
    Ver livro
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Ver livro
  • நித்திலவல்லி - Nithilavalli Vol 1 - cover

    நித்திலவல்லி - Nithilavalli Vol 1

    Na Parthasarathy

    • 0
    • 0
    • 0
    தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும் . இந்த ஆராய்ச்சிக்குப் பல பழைய, புதிய நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக் குறிப்புகளைச் சேகரிக்க நேர்ந்தது. 
    கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது. (டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டிய வரலாறு - பக்கங்கள் - 33, 34, 35, 36, 37) இது தொடர்பான வேள்விக் குடிச் செப்பேட்டுப் பகுதி வருமாறு:- 
    "களபரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடல் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலகவீற்றிருந்து 
    தமிழ் இலக்கிய வரலாறு - கே.எஸ்.எஸ். பிள்ளை 
     பாண்டியன் கடுங்கோனின் பெயர்க் காரணம் பற்றி இக்கதையில் வரும் நயமான கற்பனை இணைப்பைப் பல தமிழாசிரியர் நண்பர்கள் பாராட்டினார்கள். இந்தக் கதையில் வரும் மதுராபதி வித்தகர் பாத்திரப் படைப்பை வாசகர்கள் பலர் அவ்வப்போது வியந்து எழுதினார்கள். வேறு சில வாசகர்கள் செல்வப் பூங்கோதை தான் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றார்கள். 
    ஆனால் எழுதியவனுடைய நோக்கத்தில் எல்லார் மேலும் சமமான அக்கறையுமே காட்டப்பட்டுள்ளன என்பதை மட்டும் இங்கு அடக்கமாகத் தெரிவித்த
    Ver livro
  • Naanu Badava Naane Sukhi - cover

    Naanu Badava Naane Sukhi

    Jogi

    • 0
    • 0
    • 0
    ನನ್ನ ಅಮ್ಮ ನನ್ನಲ್ಲಿ ಹೇಗೆ ನೆಲೆಸಿದ್ದಾರೆ ಅಂತ ನೋಡುವ ಪ್ರಯತ್ನವಾಗಿ ಈ ಪುಸ್ತಕ ಹೊರಬರುತ್ತಿದೆ. ಪ್ರತಿಯೊಬ್ಬರಲ್ಲೂ ಅಮ್ಮ ಅವ್ಯಕ್ತ ಪೋಷಕಾಂಶವಾಗಿ ಜೀವಂತವಾಗಿರುತ್ತಾಳೆ. ಅಮ್ಮನ ನೆನಪಿನಿಂದ ಪಾರಾಗುವುದಕ್ಕೆ ನಮಗೆ ಸಾಧ್ಯವೇ ಆಗುವುದಿಲ್ಲ. ಪಾರಾಗುವ ಉದ್ದೇಶವೂ ನಮಗಿರುವುದಿಲ್ಲ. ಅಮ್ಮ ಕಲಿಸಿದ ಎಷ್ಟೋ ಸಂಗತಿಗಳು ನಮ್ಮನ್ನು ಕೊನೆ ತನಕವೂ ಕೈ ಹಿಡಿಯುತ್ತವೆ ಅನ್ನುವುದನ್ನು ನಾನು ಕಂಡಿದ್ದೇನೆ. ಬಾಲ್ಯದಲ್ಲಿ ಅಮ್ಮ ಹೇಳಿದಾಗ ರೋಧಿಸಿದಂಥ ಎಷ್ಟೋ ಸಂಗತಿಗಳನ್ನು ನಾನೇ ಈಗ ಹೇಳುತ್ತಿರುವುದು ಕೂಡ ನನ್ನನ್ನು ಅಚ್ಚರಿಗೊಳಿಸಿದೆ.
    
    - ಜೋಗಿ
    Ver livro
  • பல்வகைப்பாடல்கள் - cover

    பல்வகைப்பாடல்கள்

    Bharathiyaar

    • 0
    • 0
    • 0
    ரமணி ஒலி நூலுக்காக பல்வகைப் பாடல்கள் என்ற தலைப்பில் அமைந்த 11 பாடல்களில் ரமணி இவ்வொலி நூலாக்கியிருக்கிறார். 
    பாரதி பல்வகைப்பாடல்களில் நீதி என்ற தலைப்பின் கீழ் புதிய ஆத்தி சூடி அமைந்திருக்கிறது. விழுமியங்களும் பண்புகளுமே இந்தப் பாடலின் தலையாய பேசு பொருட்களாகின்றன. ஓடி விளையாடு பாப்பா என்ற பாப்பாப் பாடல் பாடாத தமிழ் நாவேது! முரசு என்ற பாடல் விழுமியங்களின் வெற்றியைப் பறை சாற்றுகிறது. வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் என்ற வரிகள் இப்பாடலில்தான் அமைகின்றன. சமுகம் என்ற தலைப்பின் கீழ் புதுமைப் பெண், பெண்மை வாழ்க, பெண்கள் விடுதலைக் கும்மி, பெண் விடுதலை ஆகிய பாடல்களின் தாக்கம் நூறாண்டுகள் கடந்தும் தமிழ் நாட்டில் போற்றப்படுகின்றது. தொழில், மறவன் பாட்டு ஆகிய இரண்டு பாடல்கள் உழைப்பின் மேன்மையை வலியுறுத்துகின்றன. தாகூரின் ஒரு பாடலின் மொழிபெயர்ப்பாக நாட்டுக் கல்வி என்ற பாடல் அமைகிறது. புதிய கோணங்கி இனிவரும் காலம் இனிய காலம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
    Ver livro