Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
நீதான் என் காதலி - cover

நீதான் என் காதலி

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

தந்தி வந்திருந்தது. 
 
வட இந்தியாவில் இருக்கும் அக்காவிடமிருந்து. 
 
உடனே புறப்பட்டு வரும்படி. அவளுக்கு ஃபிராக்சர் ஆகிவிட்டதால், உதவி தேவை என்று தந்தி. 
 
அப்பா, அம்மா பதறிவிட்டார்கள். 
 
இருவரும் அவசரமாகப் போய் லீவு போட்டார்கள். 
 
பணம் எடுத்து வந்தார்கள். 
 
பரபரப்பாக பேக் செய்தார்கள். 
 
“அம்மா! நீ வீட்டை பார்த்துக்கோ. செலவுக்கு இந்தா ஆயிரம் ரூபாயை வச்சுகோ. போபால் போகணும். குழந்தை எந்த நிலைமைல இருக்காளோ... நாங்க ரெண்டு பேரும் போய்த் திரும்ப பத்து நாளாகும் நிச்சயமா!” 
 
“சரிப்பா” 
 
“கேஸ் வரும். பால் கார்ட் வாங்கலை! ஞாபகம் வச்சுக்கோ. காய்கறி வாங்கிக்கோ.”
 
“அதான் வினய் இருக்கானே!” 
 
“கிழிச்சான்! நாங்களும் இல்லை. இன்னும் நல்லா அவுத்து விட்ட கழுதையா ஊரைச்சுத்துவான். நீ கொஞ்சம் கண்டிச்சு வைம்மா. காசைக் கண்ல காட்டாதே! புரியுதா?” 
 
அம்மாவுக்கே பிடிக்கலை. 
 
“சரி புறப்படுங்க நேரமாச்சு!” 
 
“அம்மா! நான் ஸ்டேஷன் வரைக்கும் வரட்டுமா?” 
 
“எதுக்கு! எங்களுக்குப் போகத் தெரியாதா? வாயை மூடிட்டு வீட்ல இரு!”
 
இருவரும் பாட்டியிடம் சொல்லிக்கொண்டு போய் விட்டார்கள். 
 
வினய் கூடத்தில் படுத்து விட்டான். 
 
வெறுப்பாக இருந்தது. 
 
'பணத்தைக் கண்ணில் காட்ட மாட்டார்கள்!’
 
நண்பர்கள் மத்தியில் வினய் அவமானப்படாத நாள் இல்லை!' 
 
மற்றவர்கள் வாங்கி தரும் டீ, டிபன் ஏற்றுக் கொள்ள பிடிக்காது. மறுக்கவம் முடியாது!' 
 
பதிலுக்கு ஒரு நாள்கூடச் செய்ய முடியாது. 
 
“பீஸை இவனிடம் தரமாட்டார்கள். அப்பா வந்து கட்டுவார். பஸ் பாஸ்! சகலத்துக்கும் வசதி! ஆனால் சில்லறை மட்டும் தேறாது. 
 
“பாட்டி! நான் சாயங்காலம் வெளியே போகணும்!” 
 
“எங்கப்பா?” 
 
“விக்ரம் அக்காவோட கல்யாண ரிசப்ஷன்!” 
 
“என்ன வாங்கிட்டு போக போறே!”
 
“எதுவுமில்லை!” 
 
“வெறும் கையோடவா ரிசப்ஷன் போறே!” 
 
“ஆமாம் பாட்டி. எங்கிட்டப் பணம் இல்லையே! என்னை அப்பா, அம்மா நம்பறதில்லையே! அக்கானா பதறி ஓடறாங்க. என்னை மட்டும் ஏன் பாட்டி வெறுக்கறாங்க? நான் என்ன பாவம் செஞ்சேன்?”
 
பாட்டிக்கு வேதனையாக இருந்தது. 
 
“நீ ஒரு பாவமும் செய்யலை கண்ணா! உன் மேல அவங்க ரெண்டு பேருக்கும் பாசமில்லைனு நினைச்சியா? உனக்குப் புரிஞ்சுகற பக்குவம் வரலை! நீ பெரிய மனுஷனா வரணும்னு அவங்க ஆசைப்படறாங்க ராஜா!” 
 
“ஆரம்ப ஆசைகளைப் பொசுக்கிட்டு, அப்புறம் அணைச்சுக்கறதால யாருக்கும் லாபம் பாட்டி?” 
 
“இந்தா! ஒரு கவர்ல இந்த அம்பது ரூபாயை போட்டு கல்யாணத்துல குடு!  உன் செலவுக்கு இந்த அம்பதை வச்சுக்கோ!” 
 
“பாட்டீ!” 
 
“நான் கணக்கு சொல்லிக்கறேன். போ கண்ணா!” 
 
“பாட்டி! நீ மட்டும் இல்லைன்னா, இந்த வீட்டுக்கு வரவே எனக்கு புடிக்காது பாட்டி!” 
 
“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது!” 
 
மாலை ஐந்தரை மணிக்குக் குளித்தான். 
 
“பாட்டி எனக்கு தலை துவட்டி விடேன்!”
 
“இரு வர்றேன்!” 
 
பாட்டி உள்ளே வந்தாள். 
 
“ச்சீ படவா! உடம்புல ஒட்டுத் துணி இல்லாமலா நிக்கறே?” 
 
“நீதானே பாட்டி! தப்பென்ன?” 
 
“பாட்டியானாலும் நான் பொம்பளை! உனக்குப் பதினேழு வயசு முடிஞ்சாச்சு! நீ குழந்தையில்லை!” 
 
“உனக்கு நான் குழந்தைதான் பாட்டி!” 
 
“சரி ஒக்காரு பனைமரம் மாதிரி வளர்ந்தாச்சு. இப்பவும் பாட்டிகிட்ட கொஞ்சிறியா?”
 
பத்தே நிமிடங்களில் ட்ரஸ் மாற்றிக் கொண்டான்.
 
தலைவாரி பவுடர் போட்டு வெளியே வந்தான். 
 
“பாட்டி! நான் சரியா இருக்கேனா?” 
 
“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. ஜாக்கிரதையா போயிட்டு வா! ஊரைச்சுத்தாதே! சீக்கிரம் வந்து சேரு!” 
 
“சரி பாட்டி!” 
 
வெளியே வந்து பஸ் பிடித்தான். கூட்டம் அவ்வளவாக இல்லை.
 
அரைமணி நேரப் பயணம். 
 
நகரின் மையத்தில் இருந்தது அந்த மண்டபம். எதிரே பஸ் இறங்கினான்.
 
போக்குவரத்து உச்சத்தில் இருந்து
Available since: 02/03/2024.
Print length: 46 pages.

Other books that might interest you

  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Show book
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Show book