¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
மயான மலர்கள் - cover

மயான மலர்கள்

தேவிபாலா

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

கண்ணாடி முன்னால் நின்று கேசத்தை பதினெட்டாவது முறையாக வாரினான் யாதவ்.மறுபடியும் கொஞ்சம் கோல்ட் க்ரீம், ரோஸ் பவுடர், யார்ட்லி சென்ட் என்று மானாவாரியாக பூசிக் கொண்டான்.ஷிபான் புடவையைக் கிழித்து தைத்தது போல பளபளப்பாக ஒரு சட்டை, ஜீன்ஸ் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ.“மறுபடியும் தலைவாரல் முடியலையா? வாரி வாரியே வழுக்கையா ஆகப்போற. எங்கே புறப்பாடு?”“நாலு மணிக்கு எத்திராஜ் வாசல்ல இருக்கணும். ஷர்மிளா காத்துட்டு இருப்பா - நேரா காஞ்சில போய் டிபனை முடிச்சிட்டு, ஒரு ரவுண்ட் சுத்திட்டு ஷர்மியை வீட்ல ட்ராப் பண்ணிட்டு நான் இங்கே வந்திருவேன்!”“இதுக்குத்தான் மாசாமாசம் ஊர்லேருந்து உனக்கு ட்ராஃப்ட் வருதாக்கும்? ‘என் பிள்ளை மெட்ராஸ்ல பெரிய படிப்பு படிக்கிறான். நாலு வருஷத்துல என்ஜினியராகி ஊரையே விலைக்கு வாங்குவான்’னு ஏதோ ஒரு கிராமத்துல உன்னைப் பெத்தவங்க பகல் கனவு காணுறவாங்க!”“இடியட்! உன் சொற்பொழிவை, மேடை போட்டு நடத்து. கொஞ்சம் சில்லறையாவது தேறும்.”“யாதவ்! உன் போக்கு சரியில்லை. அப்புறமா உன் இஷ்டம் - நல்ல ஒரு ஸ்நேகிதனுக்கு சொல்ல வேண்டிய கடமை உண்டு. சொல்லிட்டேன்.”“போடா... சொல்லிருவேன் ஏதாவது! ஆமா, நல்ல ‘யாஷிகா’ ஒண்ணு கிடைக்குமா?”“எதுக்கு?”“ஷர்மியை போட்டோ எடுக்க. ‘பலான’ போஸ்கள் தர்றனு ஒத்துக்கிட்டா நேத்து!” கண்ணடித்தான்.ராஜா முகத்தைச் சுளிக்க “வரட்டுமா சின்மயானந்தா!” விசிலடித்தபடி வெளியே வரும் யாதவ், போன மாதம் இருபத்தியொரு வயதை முடித்தான்.அவன் தகப்பனார், திருநெல்வேலி பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு, கரன்ஸிகளை அறுவடை செய்து கொண்டிருப்பவர். அந்த கிராமத்தையே தன் பிள்ளை ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். மோசமான அந்த ஆசை, பல ஆயிரங்களை லஞ்சமாகக் கொடுத்து, இன்ஜினியரிங் கல்லூரியில் சேர வைத்தது. அவனுக்காக தங்குவதற்கு ரூம் ஏற்பாடு செய்து, இன்னும் எத்தனையோ...யாதவ் கல்லூரிக்கு, அவ்வப்போது போரடிக்கும் போது போவான்.ராஜா அவன் ரூம் மேட்... க்ளாஸ் மேட். அவன் எத்தனையோ சொல்லியும், யாதவ் திருந்துவதாக இல்லை.‘கிராமத்துக்கு எழுதிவிட வேண்டும். இவன் தகப்பனாருக்கு நிஜத்தைத் தெரிவிப்பது என் கடமை’ என்று தீர்மானித்து விட்டான்.யாதவ்,வெளியே வந்து தன் புல்லட்டை விடுவித்தான். சரேலென அம்புபோல விடுபட்டு, சாலையின் திருப்பத்தில் நாலைந்து பாதசாரிகள், ஒரு மொபைல் லாண்டரி, குளிர் பானம் கொண்டு வரும் ட்ரை சைக்கிள் எல்லாம் அலறி விலக,பாந்தியன் சாலையில் நுழைந்து, சடுதியில் கமாண்டர் - இன் - சீஃப் ரோட்டைத் தொட்டுத் திரும்பி-எத்திராஜ் வாசலுக்கு வரும்போது ஏற்கனவே கல்லூரியின் நேரம் முடிந்து, மாணவிகளின் கூட்டம் ஓயத் தொடங்கியிருந்தது.புல்லட்டை நிதானப்படுத்தி, கண்களை அலையவிட்டான். அப்போதுதான் வந்து கொண்டிருந்தாள் ஷர்மிளா. இளம் நீலநிற சூரிதார் அணிந்து, உதிரியான கேசம் புசுபுசுவென்று முதுகு கடந்து படர -சன்னமாகச் சிரித்துவிட்டு, காஞ்சியின் வாசலைப் பார்க்க நடந்தாள்.யாதவ் சட்டென கியர் மாற்றி, சரேலென காஞ்சிக்குள் நுழைந்தான். ஸ்டாண்ட் போட்டு, பூட்டி, ஹெல் மெட் விலக்கி, மறுபடியும் தலைவாரிக் கொண்டான்.ஷர்மிளா நெருங்கி விட்டாள்
Disponible desde: 16/01/2024.
Longitud de impresión: 69 páginas.

Otros libros que te pueden interesar

  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver libro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro