Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
மந்திரப் புன்னகை - cover
LER

மந்திரப் புன்னகை

தேவிபாலா

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

காலையில் - முதலில் ஜோதி எழுந்து விட்டாள்! ரங்கநாயகி அதற்கு முன்பே எழுந்து அவளுக்கு உதவிகள் செய்தாள்!ஜோதி குளித்து விட்டு வருவதற்குள் ரங்கநாயகி காபியுடன் தயாராக நின்றாள்.“அய்யோ! என்ன ஆன்ட்டி நீங்க? பெரியவங்க!”“தப்பே இல்லை! எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி நீ! காலைல என்ன சாப்பிடுவே?”“எனக்கு இதுதான் வேணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை ஆன்ட்டி.”“உன் அப்பா, அம்மா எங்கே இருக்காங்க?”“ரெண்டு பேருமே இல்லை ஆன்ட்டி. எனக்கு பதினொரு வயசா இருக்கும் போது, ஒரு விபத்துல போயிட்டாங்க! அப்புறமா சித்தப்பா ஆதரவுல வளர்ந்து பி.டெக். முடிச்சு, வெளிநாட்டுக்குப் போனேன்! இப்ப ஆராய்ச்சிக்காக இங்கே வந்திருக்கேன்! ஆறுமாசம்! அது முடிஞ்சதும் திரும்பப் போயிடுவேன்! அங்கே இருந்தப்ப பாபு நண்பரானார்! பாபு எனக்கு செஞ்ச உதவிகள் கொஞ்சமில்லை! உங்க மகனைப் போல ஒருத்தரைப் பார்க்க முடியாது!”“நீ என்ன ஜாதி?”“பெண் ஜாதிம்மா!” சொல்லிக் கொண்டே பாபு வந்தான்!“யாருக்கு பெஞ்சாதி?” -- அங்கு வந்த நடராஜன் ஜோக்கடிக்க, ரங்கநாயகி கடுப்பானாள்.“ஜோதி! நீ டிபன் சாப்பிட வா! வெளில போகணுமில்லையா?”“அம்மா! நான்தான் ஜோதியைக் கூட்டிட்டுப் போகணும்! எனக்கும் டிபன் எடுத்துவை! குளிச்சிட்டு வந்துர்றேன்! ஜோதி! அதுக்குள்ள என் ரூம்ல போய், சிஸ்டத்துல கொஞ்சம் மெயில் செக் பண்ணிடேன்!“சரி பாபு! ஆன்ட்டி! பாபுவோட ரூம் எது?”“நீ வா ஜோதி! நானே காட்டறேன்!” - அவனே அழைத்துப் போக,கோகிலா அம்மாவிடம் வந்தாள்!“என்னம்மா! வீட்டுக்கு வந்து நம்மகிட்டயெல்லாம் ஒக்காந்து பேசக்கூட அவனுக்கு நேரமில்லை! அவளையே கட்டிட்டு அழறானே..! இது சரியாப்படுதா ஒனக்கு?”“பிடிக்கலைதான்! உடனே பேசினா, பிரச்னை வரும்!”“ஏம்மா! வேற, ஏதாவது இருக்குமா?”“பிச்சிடுவேன்! அனாதைப் பொண்ணு! யாருமில்லை! எந்த ஜாதினு தெரியாது! குலம்,கோத்ரம், தெரியாது! பெத்தவங்களை வாரிக் குடுத்தவ! என் மருமகளாக முடியுமா! விட்ருவாளா இந்த ரங்கநாயகி?”நடராஜன் உள்ளே வந்தார்!“அப்படி அவன் சொன்னானா? எதுக்கு தேவையில்லாம அவன்தலையை உருட்டறீங்க?”“இல்லைப்பா! பாபு ஒருத்தன் மட்டும்தான் அவளுக்கு நெருக்கம்னு ஆகுது!”முகுந்தன் உள்ளே வந்தார்!“அக்கா! நான் புறப்படறேன்!”“என்னடா தம்பி? டிபன் சாப்பிட்டுப் போ!”“இல்லைக்கா. வேலை நிறைய இருக்கு!”“தம்பி! இங்கே வா! உன் முகமே சரியா இல்லை!”“எப்படீக்கா இருக்கும்? முகம் மட்டுமில்லை... என் மனசும் சரியா இல்லை! இனிமே எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கக் கூடாது! நான் புறப்படறேன்!”நில்லுடா! என்ன பேசற நீ? இவ யாரோ! உன் பொண்ணு பூமிகாதான் என் மருமகள்! அதைக் கடவுள் வந்தாலும் மாற்ற முடியாது! புரியுதா?”முகுந்தன் புறப்பட்டுப் போய்விட,குளித்து விட்டு பாபு வந்தான்!“மாமா எங்கே?”“போயாச்சு!”“ஏன் எங்கிட்ட சொல்லாமப் போனார்! அவங்க எல்லாருக்கும் நிறைய வாங்கிட்டு வந்திருக்கேன்! பூமிகாவுக்கு ஒரு புது ஐ- பாட் வாங்கிட்டு வந்திருக்கேன்!”“சரி விட்ரா! மாமா வீட்டுக்குப் போய் இன்னிக்கு சாயங்காலம் குடுத்துட்டு வந்திடலாம்.”ஜோதி வெளியே வந்தாள்!“மெயில் பாத்துட்டேன் பாபு!”“சரி! சாப்பிட்டு நாம கிளம்பலாம்! அப்பா! கார் இருக்கில்லையா?”“இருக்குப்பா!”இருவரும் சாப்பிட்டார்கள்! புறப்பட்டு விட்டார்கள்
Disponível desde: 16/01/2024.
Comprimento de impressão: 77 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver livro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver livro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver livro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro