Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
மாலை சூடும் ம(ர)ண நாள் - cover

மாலை சூடும் ம(ர)ண நாள்

தேவிபாலா

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

“யார் கிட்ட கேட்கப் போற தம்பி?” சட்டையை மாட்டிக் கொண்டிருந்த நிர்மலைப் பார்த்துக் கேட்டாள் அம்மா. 
 
“டவுன்ல நம்ம பகவன்தாஸ் இருக்காரே...”
 
“பான் ப்ரோக்கர், பகவான்தாஸ் தானே அண்ணா?”
 
“ஆமாம். அவர்கிட்ட கேட்டுப் பாக்கலாம்னு நினைக்கிறேன்!” 
 
“தம்பீ... யோசிச்சுத்தான் பேசுறியா? நூத்துக்கு பத்து ரூபா வட்டி கேக்கற கிராதகனாச்சே அவன். இருபதாயிரம் வாங்கினா மாசம் ரெண்டாயிரம் வட்டி கட்டிணுமே. உனக்கு சம்பளம் ஆயிரம் கூட வராது. அதுல பிடிப்பெல்லாம் போக கைக்கு, நானூறு வந்தா அதிகம். இதுல வாடகை கொடுப்பமா, வயித்துக்கு பாப்பமானு உருகிட்டு இருக்கேன் நான். ரெண்டாயிரம் வட்டி எப்படி தம்பீ கட்டுவ?” 
 
“எல்லாத்தையும் இப்பவே யோசனை பண்ணினா, அடுத்த வாரம் சுமி கழுத்துல தாலி ஏறாது. தயவு செஞ்சு என்னைப் போக விடும்மா” எரிச்சலோடு சொல்லிவிட்டு, வெளியே இறங்கி, சைக்கிள் ஸ்டாண்டை விடுவித்தான். தாவி உட்கார்ந்து நிதானமாக பெடலை மிதிக்கத் தொடங்கினான். 
 
மிதிக்க, மிதிக்க இன்னும் யார், இன்னும் யார் என்ற யோசனை வந்தது. 
 
அவசரமாகக் கலைத்தான். 
 
சாலையைப் பார்த்து கவனமாக ஓட்டத் தொடங்கினான். 
 
பகவன்தாஸ் கடையை நெருங்கியதும், ஏற்கனவே ஒரு கூட்டம் காத்திருக்க- 
 
ஒரு ஓரமாகக் காத்திருந்தான்.
 
இருபது நிமிடம் முடிந்து, கூட்டம் ஓய்ந்ததும், மெல்ல உள்ளே நுழைந்தான். 
 
“வா நிர்மல் பையா! தங்காச்சிக்கு கண்ணாலம்னு ஊரே பேசிக்குது. நமக்கெல்லாம் பத்திரிகை வைக்க மாட்டானா?” 
 
அந்தக் கவலையிலும் பகவன்தாஸைப் பார்த்ததும் சிரிப்பு பொங்கி வந்தது. தினமும் ஒரு மணிநேரம் ஒதுக்கி, ‘மரியாதையாக தமிழில் பேசுவது எப்படி?' என்று இவனுக்குக் கற்றுத் தர வேண்டும். 
 
“பத்திரிகை வைக்கலாம் சேட்டு. அதுக்கு நீயும் மனசு வக்கணுமே!” 
 
“நம்பள் என்னாத்துக்கு மனசை வைக்கிறான் பையா?”
 
“நிம்பள் பணம் தர்றான் சேட்ஜி!” 
 
“பத்து ரூபா வட்டி தர்றானா நிர்மல் பையன்?” 
 
நிர்மல் சட்டென மௌமாகிப் போனான். 
 
“என்ன பையா பேசறானில்லை?” 
 
குரலைத் தழைத்துக் கொண்டு, பகவன்தாஸைப் பார்த்தான் நிர்மல். “சேட்ஜி, நான் சொல்றதை நீ கொஞ்சம் கேப்பியா?” 
 
“என்ன நிர்மல் பையா?” 
 
“ஆயிரம் ரூபா கூட சம்பளம் வராத நான், ஊர் முழுக்க கடன் வாங்கியாச்சு சேட்டு. இந்த நிலைல இருபதாயிரம் தொகைக்கு, ரெண்டாயிரம் வட்டி எப்படி தர முடியும்? என்னை உன் தம்பியா நினைச்சு, குறைஞ்ச வட்டிக்கு தா சேட்டு இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா, என் தங்கச்சி  வாழ்க்கையே பாழாப் போயிரும் சேட்டு” தன்னையும் மீறி அழுதுவிட்டான் நிர்மல். 
 
சேட்டு மெளனாக இருந்தான். 
 
“அரே நிர்மல் பையா நம்மளக்கு பாவமாத்தான் இருக்கறான். நம்பள் இரக்கம் காட்டினா... பிழைக்கறானில்லை. ஸாரி பையா. உனக்காக ஒம்போது ரூபாயா வேணும்னா குறைச்சுக்கலாம்!” 
 
நிர்மல் எழுந்தான். 
 
சோர்ந்து போய் வெளியே வந்தான். 
 
சைக்கிளில் ஏறி, பெடலை மிதிக்கத் தொடங்கியதும், காரியரை யாரோ இழுத்த தினுசில் சைக்கிள் நகர மறுத்தது. 
 
இறங்கி, திரும்பினான். 
 
பின்னால் நின்ற அந்த மனிதன் சிரித்தான். சிரிப்புகூட முழுவதும் வெளித் தெரியாமல் அந்த பிரெஞ்சு தாடியும், புஷ்டியான – உதடுகளைத் தின்ற-மீசையும் அழுத்திக் கொள்ள, ரோமங்களின் சின்ன சலனத்தில் அது சிரிப்பு என்று தெரிந்தது.
 
“யார் நீங்க?” சற்று எரிச்சலோடு கேட்டான் நிர்மல். ஆறடி உயரத்தை அனாயாசமாக அடைந்திருந்த அவன், நல்ல தேகக் கட்டும், அத்லெட் உடம்புமாக, பார்வைக்கு ஒரு மாஜிக் நிபுணனைப் போலிருந்தான். கண்ணாடிக்குப் பின்னால் தெரிந்த கண்களில் ஒரு அலட்சியம் இருந்தது. 
 
“அதை இங்கே வச்சுப் பேச வேண்டாமே!” 
 
“எங்கேயும் வச்சுப் பேச வேண்டாம். நீங்க யார்னு தெரியாம நான் நகர முடியாது இங்கிருந்து!” 
 
“உன் தங்கை கல்யாணத்துக்கு வேண்டிய பணத்தை வட்டியில்லாம தர வந்திருக்கேன். இப்ப வர்றியா? என் வீட்ல போய் பேசுவோம்!” 
 
தேடி வந்த அதிர்ஷ்டமா? 
 
மறுபேச்சே இல்லாமல், நிர்மல் அவனைத் தொடர்ந்து சைக்கிளைத் தள்ளிக்  கொண்டு நடந்தான். தெருமுனை திரும்பியதும், அந்த நீளமான அயல்நாட்டு  கார், எவர்சில்வர் கலரில் பளபளத்தது. வெய்யில் அதன் உடம்பில் பட்டுப் பிரதிபலிக்க- 
 
“சைக்கிளைப் பூட்டிட்டு, கார் ஏறு?”
 
நிர்மல் சற்று தயங்கி, சைக்கிளை அந்த மெடிகல் ஷாப் பக்கம் பூட்டி நிறுத்தினான்.
Available since: 02/03/2024.
Print length: 46 pages.

Other books that might interest you

  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Show book
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Show book
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Show book
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Show book
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Show book
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Show book