Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
கண்துடைப்பு - cover
LER

கண்துடைப்பு

தேவிபாலா

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

அஞ்சலி கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.செக்ஷன் ஆபீசர் வந்தார். பார்த்தார்.“அஞ்சலி! இன்னிக்கு அதிக நேரம் இருந்து பண்ணிடுங்க! நாளைக்குக் காலைல ஏழு மணிக்கே வந்துடுங்க! நாளைக்கும் முழு நாள் வேலை செஞ்சாத்தான் இது முடியும்! நாளைக்கு டெஸ்பாட்ச் பண்ணியாகணும்!”“சரிங்க சார்!”போன் அடித்தது! அஞ்சலி எடுத்தாள்! முருகன்தான்!“உன் ‘கால்’ பார்த்தேன். கூப்பிட்டியா அஞ்சலி!”“ஆமாங்க! ஒன்பது மணிவரைக்கும் ஆபீஸ்ல வேலை இருக்கு!”“நான் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்! கவலைப்படாதே! ஏதாவது சாப்பிடும்மா! ஒடம்பு கெட்ரப் போகுது!”“சரிங்க!”வைத்து விட்டு வேலையைத் தொடர,“அம்மா!”அஞ்சலி நிமிர்ந்தாள். அப்பா வீட்டு பழைய டிரைவர்!“அடடா! வாங்க சின்னசாமி! என்ன இவ்ளோ தூரம்?”“வெளில கார்ல பெரியம்மா இருக்காங்க! உங்களைப் பாக்க வந்திருக்காங்க!”“அம்மாவா? என்னைப் பாக்கவா?”அஞ்சலிக்கு குபீரென முகம் மலர்ந்தது.தற்காலிகமாக கம்ப்யூட்டரை நிறுத்தி விட்டு, வேகமாக வெளியே வந்தாள். கார் கம்பெனிக்குள் நின்றது!அஞ்சலி ஓடி வந்தாள்!அம்மா பின்கதவைத் திறந்தாள்!“அம்மா!”“உள்ளே வந்துடு அஞ்சலி!”அஞ்சலி காருக்குள் நுழைந்தாள்!“என்னம்மா?”“நீ எப்படீடா இருக்கே? இளைச்சு, கறுத்துப் போயிட்டியேம்மா?”“இல்லைம்மா! நான் நல்லாத்தான் இருக்கேன். நம்ம வீட்ல இருந்த மாதிரிதான் இருக்கேன். பணக்கார ரத்னவேலு மனைவிதான் இளைச்சிருக்கே!”அம்மா பேசவில்லை.“சொல்லும்மா! நாளை மறுநாள் உன் வீட்ல நடக்கப் போற உன் மகள் ஸ்நேகா நிச்சயதார்த்தத்துக்கு எல்லாரும் வந்து சேர்ந்தாச்சா?”“அஞ்சலி?”“என்னம்மா... ஊருக்கே தெரிஞ்சிருக்கு! மீடியா கவரேஜ் கூட இருக்கு! எனக்கு மட்டும் தெரியாதா?”அம்மா அஞ்சலியை ஆழமாகப் பார்த்தாள்!“அஞ்சலி! உன் தங்கச்சி நிச்சயத்துக்கு நீயும் வரணும்மா! உன்னை அழைக்கத்தான் வந்தேன்.”“அப்பா - ஸாரி - உன் புருஷனுக்கு சொல்லிட்டு வந்தியா? இல்லை, சொல்லாம திருட்டத்தனமா வந்தியா?”“அவர் சம்மதத்தோடதான் வந்தேன்மா!”“வீட்டுக்கு வந்து கூப்பிட்டா, என் புருஷனையும் கூப்பிடணும். அதை நீங்க யாரும் விரும்பலை. அதனால இங்கே வந்துட்டியாக்கும்?”“அஞ்சலி!”“ஸாரிம்மா! நான் வரப்போறதில்லை! முதலாவதா, ஆபீஸ்ல எனக்கு லீவு இல்லை. அடுத்தபடியா, அவர் வேண்டாம் - நான் மட்டும் போதும்னு நினைக்கறவங்க வீட்டுக்கு நான் வர விரும்பலை! ஸ்நேகாவுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடும்மா!”“ஏம்மா எங்கிட்ட கோவப்படற? நீ எப்பவும் வேணும்னு நினைக்கற இந்தம்மாவை நீயும் புண்படுத்தினா எப்படி அஞ்சலி?”கல்யாணி அழுதாள்!“உன்னை நான் புண்படுத்தலைமா! நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை அவமானப்படுத்தறது உனக்குப் புரியலையா?”“அஞ்சலி! என்னைப் பேச விடு! முருகனைக் கூப்பிட எனக்கு விருப்பம்தான். எப்ப உன் புருஷன் ஆயாச்சோ, அப்பவே முருகனை என் மாப்ளையா நான் அங்கீகரிச்சிட்டேன். ஆனா நான் கூப்பிட்டு, அந்த வீட்டு விழாவுக்கு முருகன் வந்தா என்ன நடக்கும்னு உனக்குத் தெரியாதா அஞ்சலி?”“தெரியும்! அவரை உன் புருஷன் உட்பட எல்லாரும் அவமானப்படுத்துவாங்க!”“அது உன் கண் முன்னால நடக்கணுமா?”“அம்மா! அவமானம் அவருக்கு மட்டுமில்லை! நான் தனியா வந்தாலும், எனக்கும் அது நிகழும்! என்னையும் கேவலப்படுத்தாம விடுவாங்களா! சொல்லு!”கல்யாணி பேசவில்லை
Disponível desde: 13/01/2024.
Comprimento de impressão: 79 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Ver livro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver livro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver livro