Unisciti a noi in un viaggio nel mondo dei libri!
Aggiungi questo libro allo scaffale
Grey
Scrivi un nuovo commento Default profile 50px
Grey
Iscriviti per leggere l'intero libro o leggi le prime pagine gratuitamente!
All characters reduced
கேட்டேன் தந்தாய்! - cover

கேட்டேன் தந்தாய்!

தேவிபாலா

Casa editrice: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinossi

அந்த மேன்ஷன் மொட்டை மாடியில் நண்பர்களுடன் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்தான் சேது. லேசாக இருட்டும் நேரம்.உதட்டில் சிகரெட் தொங்கிக் கொண்டிருந்தது.“சேது! வீக் எண்ட்ல எங்கியாவது போகலாமா?”“இந்த வாரம் முடியாதுடா ரமேஷ்!”“ஏன்?”“நான் பெண் பார்க்கப் போறேன்!”“அடி சக்கை! கல்யாணமா? சொல்லவே இல்லையே!”“இருடா! பொண்ணைப் பாக்கவே இப்பத்தான் போறேன். இதுக்கு அப்புறமா நிறைய இருக்கே!”“டேய்..! ஜாலியா இருக்கே! கல்யாணம் செஞ்சுகிட்டா, சுதந்திரம் பறிபோகும்!”“இதப்பாருடா! இந்த சேதுவோட சுதந்திரத்தை யாரும் பறிக்கமுடியாது! புரியுதா?”“இப்படி சொன்னவனெல்லாம் பொண்டாட்டி புடவையோட சேர்ந்து மொட்டை மாடில காயறானுங்க!”“நம்ம சேது அப்படி இல்லைடா! யாருக்கும் அடங்கமாட்டான்!”சேது எழுந்தான். மெல்ல நடந்து கைப்பிடிச்சுவரின் விளிம்புக்கு வந்தான்.“யாரும், யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை! புரியுதா? குடும்பம்னு வந்துட்டா, நாம பாரமா இருக்கக்கூடாது மத்தவங்களுக்கு. நம்மை நம்பியிருக்கற குடும்பம் நல்ல விதமா வாழணும். அவ்வளவுதான்அதுக்காக சுதந்திரத்தை இழந்து குடும்பத்துல நல்ல பேர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை! நான் மாட்டேன்!”மற்ற இருவரும் சிரித்தார்கள்.“இந்த வரன் இல்லைன்னாலும் உனக்கொரு கல்யாணம் நடந்துதானே தீரணும்!”“நடக்கும்! சரி போகலாமா?”புறப்பட்டார்கள்.சேது பைக்கை உதைத்து வேகம் பிடித்தான்.நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டது. லேசான மழைத்தூறல்கள் இருந்தது. போக்குவரத்து உச்சத்தில் இருந்தது.சேது வேகத்தைக் கூட்டினான்.வீடு வந்து சேர்வதற்குள் நனைந்துவிட்டான். மழை வலுத்துவிட்டது. வண்டியை ஷெட்டில் போட்டுவிட்டு, ஈரம் சொட்ட உள்ளே வந்தான். அண்ணி எதிர்பட்டாள்.“அடடா! இப்படி நனஞ்சுபோய் வந்து நிக்கறியே சேது. உடனே ட்ரஸ் மாத்து!”சேது உடைகளை கழட்டிப்போட்டு, உடம்பை துவட்டிக்கொண்டு, லுங்கி, டீ - ஷர்ட்டுக்குள் புகுந்து கொண்டான்.“இப்படி வந்து உட்காரு சேது! தலைல ஈரம் இருந்தா, ஜலதோஷம் புடிக்கும்!”அண்ணி டவல் எடுத்து வந்து அவனுக்கு தலை துவட்டத் தொடங்கினாள்.அண்ணன் உள்ளே நுழைந்தார்.“ம்... குழந்தைக்கு தலை துவட்டி விடறியா?”“ஆமாம். அவன் அரை குறையா துவட்டினா, ஈரம் போகாது!அண்ணி! பயங்கரமா பசிக்குது!”“இன்னிக்கு ஹாஃபா? ஃபுல்லா?”“போங்க அண்ணி!”“சேது! போதும். தண்ணி போடறதை நீ நிறுத்திட்டா நல்லது”“அண்ணி! அதிகமா சாப்பிடலை. எனக்கு கன்ட்ரோல் உண்டுண்னு உங்களுக்குத் தெரியாதா? எதிலயும் நான் எல்லை மீறிமாட்டேன் அண்ணி.”“சரி சரி! சாப்பிட வா!”மூவரும் வந்து உட்கார்ந்தார்கள்.ஹாட்பாக்கில் ரொட்டியும், சூடான சப்ஜியும் தயாராக இருந்தது.சேது ருசித்து சாப்பிட்டான்.“அண்ணி! சமையல்ல உங்களை அடிச்சுக்க யாராலயும் முடியாது!”“அதான் உங்கண்ணனுக்கு எட்டு கிலோ ஓவர் வெயிட். குறைக்கணும்!”“விடிகாலை எழுப்பி ஓடவிடுங்க!”“அடேய் தம்பிப் பையா! உன்னைவிட பன்ணிரடு வயசு மூத்தவன் நான். இப்ப எனக்கு நாற்பத்தி ஒண்ணு!”“லக்கி நம்பர். அண்ணி! நாற்பதுல நாய் குணம்னு சொல்லுவாங்களே! இருக்க இவருக்கு?”“சேது! அது எப்பவுமே உங்கண்ணுக்கு உள்ள குணம்தானே? நாற்பது வரைக்கும் காத்திருக்கணுமா என்ன?”சேது வாய்விட்டுச் சிரித்தான்
Disponibile da: 13/01/2024.
Lunghezza di stampa: 77 pagine.

Altri libri che potrebbero interessarti

  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Mostra libro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Mostra libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Mostra libro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Mostra libro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Mostra libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Mostra libro