¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
எப்பவும் உன் நிழலில்! - cover

எப்பவும் உன் நிழலில்!

தேவிபாலா

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

புஷ்பா உள்ளே நுழைந்தாள். 
 
அப்பா ஈஸிசேரில் சாய்ந்திருந்தார். அம்மா காலடியில் உட்கார்ந்திருந்தாள். 
 
“என்னப்பா பிரச்னை?” 
 
“நீ ட்ரஸ்லை மாத்திட்டு வாம்மா!” 
 
புஷ்பா போய் உடைகளை மாற்றி, ஒரு நைட்டியை அணிந்து கொண்டு  வந்தாள். 
 
அப்பா எதிரே உட்கார்ந்தாள். 
 
“என்னப்பா?” 
 
“கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருக்கும் போது, இப்படி ஒரு சேதி வந்திருக்கேம்மா!” 
 
“என்ன சேதி?” 
 
“மாப்ளையை வேலையை விட்டு சஸ்பண்ட் பண்ணியிருக்காங்களாம்!”
 
“என்னது சஸ்பென்ஷனா? எதுக்குப்பா?” 
 
“அவர் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் கையாடியிருக்கார்னு நிர்வாகம் சந்தேகப்படுதாம். அந்தப் பணத்தைக் கட்ட நாளு நாள் அவகாசம் தந்திருக்காம். கட்டினாலும், வேலைக்கு இனி உத்தரவாதம் இல்லையாம்!” 
 
புஷ்பா மெளனமாக இருந்தாள். 
 
“எங்க ஆபிஸ்ல வேலை பாக்கற தசரதனோட தம்பி, நம்ம மாப்ளை ஆபிஸ்லதானே வேலை பாக்கறான். அவன் மூலமா வந்த தகவல் இது!” 
 
“இப்ப என்னங்க செய்ய முடியும்?” 
 
“அதான் எனக்கும் புரியலை! கல்யாணத்தை நிறுத்த முடியுமா?”
 
“எதுக்குப்பா நிறுத்தணும்?” 
 
“என்னம்மா சொல்ற நீ? பணம் கையாடல்ங்கறது எத்தனைக் கேவலமான விஷயம். அதன் காரணமா உத்யோகம் பறிக்கப்படறது அதைவிட அசிங்கம்! அப்படிப்பட்ட ஒருத்தரா உனக்குப் புருஷனா வரணும்?” 
 
“இருங்கப்பா! உங்க நபர் மூலம் வந்த தகவல் இது. இல்லையா?”
 
“தகவல் பொய் இல்லைம்மா! அப்பட்டமான நிஜம்!” 
 
“சரிப்பா! இருக்கட்டும். அவர் அஞ்சு இலக்க சம்பளம் வாங்கறார். வசதியாவும் இருக்காங்க. ரெண்டு பொண்ணுகளுக்கும் கல்யாணம் ஆயாச்சு! வீட்ல எல்லாம் இருக்கு. என்னப்பா குறை? அவரா பணத்துக்கு ஆசைப்பட்டு... நம்ப முடியலைப்பா!” 
 
“ஆசை இல்லைனு சொல்லாதே புஷ்பா! நம்மகிட்ட புடுங்கித் திங்கறாங்களே!” இது அம்மா! 
 
“சரிம்மா! நேத்திக்கு சஸ்பெண்ட் பண்ணியாச்சு! நமக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டாமா?” 
 
“என்னப்பா பேசறீங்க? இது கேவலமான விஷயமில்லையா? இதை நமக்குத் தெரிவிக்க முடியுமா?” 
 
“புஷ்பா! நாளைக்கு நீதான் அவர் கூட வாழப் போறவள்! உனக்கு எல்லாம் தெரிஞ்சாகணும்!. நம்மகிட்ட இதை அவங்க மறைச்சிட்டுக் கல்யாணத்தை நடத்தினா, அதைவிட அயோக்கியத்தனம் வேற இல்லை!” 
 
புஷ்பா யோசிக்கத் தொடங்கினாள். 
 
'அப்பா சொல்வதும் சரிதான்!' 
 
'எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கடமை இல்லையா?' 
 
நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். 
 
“என்னப்பா செய்யப் போறம்?'' 
 
“நேரா நான் சஞ்சய் வீட்டுக்குப் போறேன்! இதைப்பற்றிப் பேசறேன். இது நிஜமா இருந்தா, இந்தக் கல்யாணம் நடக்காது!” 
 
“என்னங்க! இத்தனை ஏற்பாடுகளையும் செஞ்சிட்டு... கல்யாணம் நின்னா, அது நல்லாருக்குமா?” 
 
“சரிம்மா! இதை இப்பப் பார்த்துட்டு, நாளைக்கு இந்தக் குழந்தையோட வாழ்க்கை பாழானா?” 
 
“நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் நின்னாலும் பாழாகும்!” 
 
“நீ இருடி! அவசரப்படக் கூடாது!” 
 
“அப்பா டயம் இருக்கு! பதட்டம் வேண்டாம். நீங்க அவங்க வீட்டுக்குப் போயிட்டு வந்திருங்க!” 
 
“ஆமாம்மா! நான் புறப்படறேன்!” 
 
அப்பா சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வர, வாசலில் அந்த  சின்ன மாருதி வந்து நின்றது. 
 
அதிலிருந்து இறங்கியது சஞ்சய்! 
 
மூன்று பேரும் ஆச்சர்யப் பட்டார்கள். 
 
அவனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கலை! சஞ்சய் தயக்கத்துடன்  காலை வைத்தான் வாசல்படியில். 
 
“நான் உள்ளே வரலாமா?” 
 
“வாங்க!” அப்பா வரவேற்றார்.” 
 
“உக்காருங்க ஸார்!” 
 
அவன் உட்கார்ந்தான். 
 
“புஷ்பா! காபி கொண்டு வாம்மா!” 
 
“வேண்டாம். இப்ப எதுவும் வேண்டாம். நான் அவசரமாப் பேசணும்!” 
 
அம்மா புஷ்பாவைப் பார்த்தாள். 
 
“சொல்லுங்க மிஸ்டர் சஞ்சய்!” 
 
“எனக்கிப்ப தற்காலிகமா வேலை இல்லை! நான் நீக்கப்பட்டிருக்கேன்!”
 
“எதுக்கு?' 
 
“ஒரு லட்ச ரூபாய் பணத்தை நான் கையாடல் பண்ணிட்டேன்னு குற்றச்சாட்டு!” 
 
“அப்படியா?” 
 
“ஆனா நான் அதைச் செய்யலை! பேங்க்லேருந்து சம்பள நாள்ள பல லட்சங்கள் கொண்டு வந்தது நான்தான். எப்பவும் கொண்டு வர்றதும் நான்தான்! தகுந்த செக்யூரிட்டியோட போயிட்டு, திருப்பி வருவோம்! இந்த முறையும் அப்படித்தான் வந்தேன். ஆனா ஒரு லட்ச ரூபாய் மிஸ்ஸிங்! எப்படீனே தெரியலை! பேங்க்ல கட்டுகளை எண்ணித்தான் வாங்கி பெட்டியில வச்சேன்! எப்படிப் போச்சுனு தெரியலை! என்னை நீங்க நம்பணும். சத்தியமா நான் அதைக் களவாடலை!” 
 
அவன் குரல் உடைந்திருந்தது. 
Disponible desde: 03/02/2024.
Longitud de impresión: 58 páginas.

Otros libros que te pueden interesar

  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver libro
  • நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் - Nenjam Unnai Kenjum - cover

    நெஞ்சம் உன்னைக் கெஞ்சும் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. "எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. 
     விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், "அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. 
     இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... 
     மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்.
    Ver libro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver libro
  • Idamum Valamum Alaivuru Sirusudar - இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் - cover

    Idamum Valamum Alaivuru...

    B.R. Mahadevan

    • 0
    • 0
    • 0
    Auto fiction Novel: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store தீவிரமான கருத்துகளும் சுயமான சிந்தனையும் கொண்ட இளைஞன் தனது கனவுலகைத் தேடி மேற்கொள்ளும் அலைச்சலே இந்த நாவல். மதத் தத்துவங்கள் அவனைத் துரத்துகின்றன. அரசியல் கொள்கைகள் அவனைக் குழப்புகின்றன. மாயமான் வேட்டையில் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இதுவே நம் பாதை என்று அவன் ஒரு முடிவுக்கு வரும்போது காத்திருக்கிறது இன்னொரு மாயமான். எல்லாவற்றையும் கேள்விகளால் எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் பேரலைச்சலை ரத்தமும் சதையுமாக, கொஞ்சம் புனைவுடன் நிறைய உண்மைகளுடன் எழுதி இருக்கிறார் B.R.மகாதேவன். அரசியல் என்ற பெயரிலும், ஆன்மிகம் என்ற பெயரிலும், மதம் என்ற பெயரிலும் இந்தச் சமூகம் தனக்குக் கற்பிக்கும் அனைத்தையும் கேள்விகளால் அடித்து நொறுக்கி தன் அடுத்த பயணத்துக்குக் காத்திருக்கும் இந்த இளைஞன், நிச்சயம் உங்களை அசைத்துப் பார்ப்பான். எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
    Ver libro
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Ver libro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver libro