Begleiten Sie uns auf eine literarische Weltreise!
Buch zum Bücherregal hinzufügen
Grey
Einen neuen Kommentar schreiben Default profile 50px
Grey
Jetzt das ganze Buch im Abo oder die ersten Seiten gratis lesen!
All characters reduced
எப்பவும் உன் நிழலில்! - cover

எப்பவும் உன் நிழலில்!

தேவிபாலா

Verlag: Pocket Books

  • 0
  • 0
  • 0

Beschreibung

புஷ்பா உள்ளே நுழைந்தாள். 
 
அப்பா ஈஸிசேரில் சாய்ந்திருந்தார். அம்மா காலடியில் உட்கார்ந்திருந்தாள். 
 
“என்னப்பா பிரச்னை?” 
 
“நீ ட்ரஸ்லை மாத்திட்டு வாம்மா!” 
 
புஷ்பா போய் உடைகளை மாற்றி, ஒரு நைட்டியை அணிந்து கொண்டு  வந்தாள். 
 
அப்பா எதிரே உட்கார்ந்தாள். 
 
“என்னப்பா?” 
 
“கல்யாணத்துக்கு ஒரு வாரமே இருக்கும் போது, இப்படி ஒரு சேதி வந்திருக்கேம்மா!” 
 
“என்ன சேதி?” 
 
“மாப்ளையை வேலையை விட்டு சஸ்பண்ட் பண்ணியிருக்காங்களாம்!”
 
“என்னது சஸ்பென்ஷனா? எதுக்குப்பா?” 
 
“அவர் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் கையாடியிருக்கார்னு நிர்வாகம் சந்தேகப்படுதாம். அந்தப் பணத்தைக் கட்ட நாளு நாள் அவகாசம் தந்திருக்காம். கட்டினாலும், வேலைக்கு இனி உத்தரவாதம் இல்லையாம்!” 
 
புஷ்பா மெளனமாக இருந்தாள். 
 
“எங்க ஆபிஸ்ல வேலை பாக்கற தசரதனோட தம்பி, நம்ம மாப்ளை ஆபிஸ்லதானே வேலை பாக்கறான். அவன் மூலமா வந்த தகவல் இது!” 
 
“இப்ப என்னங்க செய்ய முடியும்?” 
 
“அதான் எனக்கும் புரியலை! கல்யாணத்தை நிறுத்த முடியுமா?”
 
“எதுக்குப்பா நிறுத்தணும்?” 
 
“என்னம்மா சொல்ற நீ? பணம் கையாடல்ங்கறது எத்தனைக் கேவலமான விஷயம். அதன் காரணமா உத்யோகம் பறிக்கப்படறது அதைவிட அசிங்கம்! அப்படிப்பட்ட ஒருத்தரா உனக்குப் புருஷனா வரணும்?” 
 
“இருங்கப்பா! உங்க நபர் மூலம் வந்த தகவல் இது. இல்லையா?”
 
“தகவல் பொய் இல்லைம்மா! அப்பட்டமான நிஜம்!” 
 
“சரிப்பா! இருக்கட்டும். அவர் அஞ்சு இலக்க சம்பளம் வாங்கறார். வசதியாவும் இருக்காங்க. ரெண்டு பொண்ணுகளுக்கும் கல்யாணம் ஆயாச்சு! வீட்ல எல்லாம் இருக்கு. என்னப்பா குறை? அவரா பணத்துக்கு ஆசைப்பட்டு... நம்ப முடியலைப்பா!” 
 
“ஆசை இல்லைனு சொல்லாதே புஷ்பா! நம்மகிட்ட புடுங்கித் திங்கறாங்களே!” இது அம்மா! 
 
“சரிம்மா! நேத்திக்கு சஸ்பெண்ட் பண்ணியாச்சு! நமக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டாமா?” 
 
“என்னப்பா பேசறீங்க? இது கேவலமான விஷயமில்லையா? இதை நமக்குத் தெரிவிக்க முடியுமா?” 
 
“புஷ்பா! நாளைக்கு நீதான் அவர் கூட வாழப் போறவள்! உனக்கு எல்லாம் தெரிஞ்சாகணும்!. நம்மகிட்ட இதை அவங்க மறைச்சிட்டுக் கல்யாணத்தை நடத்தினா, அதைவிட அயோக்கியத்தனம் வேற இல்லை!” 
 
புஷ்பா யோசிக்கத் தொடங்கினாள். 
 
'அப்பா சொல்வதும் சரிதான்!' 
 
'எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கடமை இல்லையா?' 
 
நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். 
 
“என்னப்பா செய்யப் போறம்?'' 
 
“நேரா நான் சஞ்சய் வீட்டுக்குப் போறேன்! இதைப்பற்றிப் பேசறேன். இது நிஜமா இருந்தா, இந்தக் கல்யாணம் நடக்காது!” 
 
“என்னங்க! இத்தனை ஏற்பாடுகளையும் செஞ்சிட்டு... கல்யாணம் நின்னா, அது நல்லாருக்குமா?” 
 
“சரிம்மா! இதை இப்பப் பார்த்துட்டு, நாளைக்கு இந்தக் குழந்தையோட வாழ்க்கை பாழானா?” 
 
“நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் நின்னாலும் பாழாகும்!” 
 
“நீ இருடி! அவசரப்படக் கூடாது!” 
 
“அப்பா டயம் இருக்கு! பதட்டம் வேண்டாம். நீங்க அவங்க வீட்டுக்குப் போயிட்டு வந்திருங்க!” 
 
“ஆமாம்மா! நான் புறப்படறேன்!” 
 
அப்பா சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வர, வாசலில் அந்த  சின்ன மாருதி வந்து நின்றது. 
 
அதிலிருந்து இறங்கியது சஞ்சய்! 
 
மூன்று பேரும் ஆச்சர்யப் பட்டார்கள். 
 
அவனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கலை! சஞ்சய் தயக்கத்துடன்  காலை வைத்தான் வாசல்படியில். 
 
“நான் உள்ளே வரலாமா?” 
 
“வாங்க!” அப்பா வரவேற்றார்.” 
 
“உக்காருங்க ஸார்!” 
 
அவன் உட்கார்ந்தான். 
 
“புஷ்பா! காபி கொண்டு வாம்மா!” 
 
“வேண்டாம். இப்ப எதுவும் வேண்டாம். நான் அவசரமாப் பேசணும்!” 
 
அம்மா புஷ்பாவைப் பார்த்தாள். 
 
“சொல்லுங்க மிஸ்டர் சஞ்சய்!” 
 
“எனக்கிப்ப தற்காலிகமா வேலை இல்லை! நான் நீக்கப்பட்டிருக்கேன்!”
 
“எதுக்கு?' 
 
“ஒரு லட்ச ரூபாய் பணத்தை நான் கையாடல் பண்ணிட்டேன்னு குற்றச்சாட்டு!” 
 
“அப்படியா?” 
 
“ஆனா நான் அதைச் செய்யலை! பேங்க்லேருந்து சம்பள நாள்ள பல லட்சங்கள் கொண்டு வந்தது நான்தான். எப்பவும் கொண்டு வர்றதும் நான்தான்! தகுந்த செக்யூரிட்டியோட போயிட்டு, திருப்பி வருவோம்! இந்த முறையும் அப்படித்தான் வந்தேன். ஆனா ஒரு லட்ச ரூபாய் மிஸ்ஸிங்! எப்படீனே தெரியலை! பேங்க்ல கட்டுகளை எண்ணித்தான் வாங்கி பெட்டியில வச்சேன்! எப்படிப் போச்சுனு தெரியலை! என்னை நீங்க நம்பணும். சத்தியமா நான் அதைக் களவாடலை!” 
 
அவன் குரல் உடைந்திருந்தது. 
Verfügbar seit: 03.02.2024.
Drucklänge: 58 Seiten.

Weitere Bücher, die Sie mögen werden

  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Zum Buch
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Zum Buch
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Zum Buch
  • வாழ்வின் முதல் காதலா! நீதானா - Vaalvin Muthal Kadhalaa Neethaanaa - cover

    வாழ்வின் முதல் காதலா! நீதானா -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    “வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... 
    நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், 
    செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், 
    “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... 
    ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. 
    நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். 
    செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். 
    ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... 
    அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, 
    “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது.
    Zum Buch
  • Maharadhan - மகாரதன் - cover

    Maharadhan - மகாரதன்

    Siraa

    • 0
    • 0
    • 0
    மகாரதன் வரலாற்று நாவல் என்றாலே ஏதாவது ஒரு மன்னனின் வீர சாகசங்களையோ அல்லது அவன் காலத்தில் நடந்த நிகழ்வுகளையோ முன்னிலைப்படுத்திப் படைப்பதே வழக்கம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டு, ஒரு போர் என்றால் அதற்கு முன் மன்னர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள், எப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொண்டிருப்பார்கள் என்று இந்த நாவல் நமக்கு அறிமுகம் செய்கிறது. பல்லவ மன்னர்களில் ஆகச் சிறந்த மன்னனாகவும் அதி சிறந்த வீரனாகவும் விளங்கிய இரண்டாம் நந்திவர்மன் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு, சில கல்வெட்டுத் தரவுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மையமாக வைத்து, அந்தக் காலத்து நிகழ்வுகளை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது இந்தப் புதினம். கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, கிடைக்கப் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்து, அதில் கற்பனையைப் புகுத்தி நாவலாகப் படைப்பது மிகப்பெரிய சவால். அதனைத் திறம்படச் செய்திருக்கிறார் எழுத்தாளர் சிரா. எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மகாரதன் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்  
    an Aurality Production
    Zum Buch
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Zum Buch