Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
ஏன் - cover
LER

ஏன்

தேவிபாலா

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

மௌலி, கௌரி இருவரும் குடும்ப ஜோசியர் வீட்டில் இருந்தார்கள்!“சொல்லுங்க!”“நவீன், ரம்யா ரெண்டு பேர் ஜாதகங்களும் கொண்டு வந்திருக்கேன்! பாத்துட்டு யாருக்கு, எப்ப நடக்கும்னு சொல்லுங்களேன்!”“அதுக்கென்ன! குடுங்க!”அவர் வாங்கி வெகுநேரம் பார்த்தார்!“உங்க பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருக்கு!”“அய்யோ!”“ஏன் பதட்டப்படறீங்க? அதுல தப்பே இல்லைம்மா! அதுக்குப் பொருத்தமான ஜாதகம் பார்த்துக் குடுத்துட்டா ஒரு பிரச்னையும் வராது!பொண்ணுக்கு குருபலம் வர இன்னும் ஒரு வருஷம் ஆகும்! அதனால கல்யாண முயற்சிகளை இப்ப எடுக்காதீங்க! எடுத்தாலும் நடக்காது! பையனுக்கு குருபலம் வந்தாச்சு! அதிகபட்சம் மூணு மாசத்துக்குள்ளே நடந்துடும்!”“அப்படியா?”“தப்பில்லையே! அவனுக்கும் 28 வயசாயிடுச்சில்லை? நடத்திடுங்க! இனி ஏன் தாமதிக்கறீங்க?”“நல்லது ஜோசியரே! பொருத்தமான ஜாதகத்தை நீங்களே எடுத்துக்குடுங்க!”“என்ன மாதிரி பொண்ணை நீங்க எதிர்பார்க்கறீங்கனு சொல்லிடுங்க. வெறும் ஜாதகம் மட்டும் போதாது. நம்ம எதிர்பார்ப்புகளும், ஜாதகமும் ரெண்டுமே பொருந்தி வந்துட்டா, எல்லாம் நல்லபடியா இருக்கும்!இவன் பி.டெக் முடிச்சு, ஒரு வருஷம் காத்திருந்து வேலை கிடைச்சது! அஞ்சு வருஷமா வேலைக்குப் போறான். சம்பளம் நாப்பதுரூபாய் வாங்கறான். அழகன்! புத்திசாலி!”“தெரியுமே!”“அதே ரகப் படிப்பு - சம்பளம், தகுதிகள் எல்லாம் உள்ள பொண்ணு வேணும்னு எதிர்பார்க்கறான். கண்டிப்பா வேலைக்குப் போற பொண்ணா இருக்கணும்...”“பாத்துடலாமே!”“குடும்பமும், நல்லா இருக்கணும். ஐடில இருக்கற பொண்ணுங்க அடங்கறதில்லைனு ஒரு புகார் வருது!”“அப்படி இல்லீங்க! நல்லது, கெட்டது எல்லாத்லேயும் இருக்கு! அதைப் பொருட்படுத்த முடியுமா? நாம வாழற வாழ்க்கைல தான் இருக்கு!”“சரி! சீக்கிரம் பாருங்க!”இருவரும் புறப்பட்டு வீட்டுக்கு வந்தார்கள்.ரம்யா ஏழு மணிக்கு வந்தாள்! நவீன் வர மணி பத்தாகி விட்டது!சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்த அப்பா விவரங்களைச் சொன்னார்!“அப்பா! நாப்பது ரூபாய்ல பிடித்தம், இன்ஷ்யூரன்ஸ் எல்லாம் போக முப்பதுதான் கைக்கு வருது! அதுல கார் டியூ எட்டு ரூபாய் போகுது! கைல இருபத்தி ரெண்டுதான்! என் செலவுக்கு வச்சிட்டு பதினைஞ்சு குடுத்தேன்! இப்ப அதுக்கும் வழியில்லை!”“இதெல்லம் எனக்குத் தெரியாதா தம்பி?”“இல்லைப்பா! பெண் வீட்டார், எனக்குப் பெரிய சம்பளம்னு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோட வரப் போறாங்க!”“அப்படியெல்லாம் நடக்காதுப்பா!”“பண விவகாரத்துல தப்பு வந்துடக்கூடாது!”அப்பா சந்திர மௌலிக்கு மறுபடியும் கவலை வந்தது
Disponível desde: 13/01/2024.
Comprimento de impressão: 73 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Ver livro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver livro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • முற்றும் முதல் நீ எனக்கு - Mutrum Muthal Nee Enakku - cover

    முற்றும் முதல் நீ எனக்கு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    வாழ்க்கையில் யாருடைய துணையும் இன்றி தன் லட்சியங்களை அடையத் துடிக்கும் நம் நாயகன் கதிர்முகிலனுக்கு தன் மனம் கவர்ந்த பெண் மயூரியால் தடைபடும் தன் இலட்சியத்தை, ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அதீத காதலால் எவ்வாறு முறியடித்தனர் என்பதை அறிய என்னோடு பயணியுங்கள் 'முற்றும் முதல் நீ எனக்கு'   
    Ver livro
  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro