Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
சக்கரம் - cover
LER

சக்கரம்

தேவிபாலா

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

சரியாக ஆறுமணிக்கு கதிரின் பைக் வந்து பங்களா வாசலில் நின்றது! சொப்னாவும் அதிலிருந்து இறங்குவதை அப்பா தன் அறையிலிருந்தே பார்த்தார்.எல்லா பக்கமும் வீட்டுக்குள் அவர் காமிரா பொருத்தியிருப்பதால் எந்த ஒரு நடவடிக்கையும் அவர் கண்களிலிருந்து தப்பிக்க முடியாது!இருவரும் உள்ளே நடந்து வந்தார்கள்.அவனது நடை, தோற்றம், கம்பீரம் - சகலத்தையும் தனசேகர் கணக்கெடுத்து விட்டார்.அவர்கள் ஹாலில் உட்கார்ந்த சில நொடிகளில் அம்மா மஞ்சுளா வந்து சொல்ல, மெதுவாக எழுந்து வந்தார்!கதிர் எழுந்து நின்று வணங்கினான்!பதிலுக்கு வணக்கம் சொல்லாமல், தலையை மட்டும் அசைத்தார். எதிரே உட்கார்ந்தார்.“சொப்னா எல்லாம் சொன்னா! உன்னைப் பற்றி நானும் விசாரிச்சேன். உள்ளே வா! உன்கிட்ட மட்டும் நான் கொஞ்சம் பேசணும்!”எழுந்து நடக்க, கதிர் பின்தொடர்ந்தான்.அவரது அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள்.“ஒக்காரு!”“இருக்கட்டும்!”“சொப்னா கோடீஸ்வரன் மகள்! அவ உன் வீட்ல வந்து வாழ முடியாது!“அப்படியா?”ஒரு பெட்டியை எடுத்து மேஜை மேல் வைத்தார்.“இதுல அஞ்சு லட்ச ரூபாய் இருக்கு. உங்க கேன்டீனை பெரிய ஹோட்டலா மாத்துங்க! பிழைச்சுப் போங்க! என் மகளை நீ விட்டுத்தர உனக்கு நான் தர்ற விலை!”கதிர் சிரித்தான்.“ஏன் சிரிக்கற?”“என்னை நீங்க புரிஞ்சுக்கலை! சொப்னா உங்க மகள். இப்ப அவ உங்க சொத்து! அதை நான் விட்டுத் தர்றதுக்கு விலையா? அபத்தமா இருக்கு. நான் என்கிட்ட வச்சுக்கிட்டாத்தான் விட்டுத்தர விலை தரணும். பணமெல்லாம் வேண்டாம். ‘இந்தப் பையன் உனக்கு வேண்டாம்’னு சொல்லி சொப்னாவை தடுத்து நிறுத்திடுங்க! இதுக்குப் போய் ஏன் அஞ்சு லட்சம் செலவு?”அவர் மிரண்டு போனார்.“அவ கேக்க மாட்டாளே! சொப்னா பிடிவாதக்காரி. கதிர்தான் வேணும்னு சொல்லுவா!”“அதுக்கு நான் என்ன சார் செய்ய முடியும்?”“நீ அவளை விட்டு விலகணும். அவ மனசுல கசப்பை உண்டாக்கணும்!”“எதுக்கு?”“எனக்கு நீ மாப்பிள்ளையாக முடியாது!”“அதுக்காகப் பொய்சொல்றதோ, சொப்னா கிட்ட நாடகமாடறதோ எனக்குப் பிடிக்காத விஷயம்!”அவர் அவனயே கூர்ந்து பார்த்தார்.“நீ பொய் சொல்லமாட்டே! பணத்துக்கும் விலை போக மாட்டே இல்லையா?”“ஆமாம்அருகில் வந்து தோளில் கை போட்டார்.“வெரிகுட்! நீதான் எனக்கு மாப்பிள்ளை!”“சார்!”“என் மகளை சந்தோஷமா உனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்! ஆனா நீ என் வீட்டோட வந்துடணும். பொறுப்புகளை ஏத்துக்கணும். உன் அப்பா, அக்கா வாழ எல்லா வசதிகளையும் நான் செஞ்சு தர்றேன்!”கதிர் எழுந்து விட்டான்.“ஸாரிங்க! அதுக்கு வாய்ப்பே இல்லை.”“என்ன பேசற? என் மகள் உன் வீட்ல வந்து வாழணுமா?”“அதுதான் முறை!”“இது நடக்குமா?”“சொப்னாவை நான் கட்டாயப்படுத்தலை. அவ விரும்பினா இதுக்கு சம்மதிக்கட்டும். கோடீஸ்வரர் தனசேகரோட மாப்பிள்ளையா நான் ஆயிட்டாலும், அன்பும் ஆதரவும் மட்டும்தான் எனக்கு வேணும். வேற எதையும் நான் எதிர்பாக்கலை. உங்க மகளையும் கேட்டு கலந்து முடிவெடுங்க! தேவைப்பட்டா மேற்கொண்டு பேசலாம்!”வணங்கினான்.கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்
Disponível desde: 13/01/2024.
Comprimento de impressão: 63 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver livro
  • Kaadhugal - cover

    Kaadhugal

    M V Venkatram

    • 0
    • 0
    • 0
    இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை.
    Ver livro
  • உடன்பிறப்பு - Udanpirappu-Sirukathai - cover

    உடன்பிறப்பு -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    உடன்பிறப்பு
    Ver livro
  • நாணலே நங்கையானால் - Naanale Nangaiyaanaal? - cover

    நாணலே நங்கையானால் - Naanale...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். 
    Ver livro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • இளநெஞ்சே வா - Ilanenjee vaa (Romantic Thriller) - cover

    இளநெஞ்சே வா - Ilanenjee vaa...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். "அவளை வெளிய கூட்டி வா...", என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... 
    பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். 
    அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. "நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?" என்றான். 
    மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 
    "அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move" என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... 
    ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... 
    பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். 
    அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. "இறங்கி வா..." என்றான். 
    மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்.
    Ver livro