Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
உன் வானம் நான்… - cover
LER

உன் வானம் நான்…

தோழர் கா.கருமலையப்பன்

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

காரை விட்டு இறங்கினார் மகாதேவன். கடற்கரை செல்லும் வழியெங்கும் கடைகள். கூட்டங்கள். டிரைவரை அழைத்தார். 
 
“மணி!”
 
 “ஸார்!” என்றவாறு இறங்கி ஓடிவந்தான் மணிகண்டன். 
 
 “இன்னிக்கு எதுவும் விசேஷ நாளா? இவ்ளோ கூட்டமா இருக்கே?” 
 
“ஸார்! இன்னிக்கு பௌர்ணமி ஸார். கடல் அலைகளையும் நிலவையும் பார்க்க ரொம்ப அருமையா இருக்கும். அதான் இவ்வளவு கூட்டம்!” 
 
“அப்போ கடற்கரையிலும் ரொம்ப கூட்டமா இருக்குமோ?” 
 
“இருக்கும் ஸார். எதுக்கும் கொஞ்சம் நகர்ந்து போய் நடமாட்டம் கம்மியா இருக்கிற பக்கம் போனா நல்லது.” 
 
“சரி, நான் பார்த்துக்கிறேன். நீ காரை ஓரமா நிறுத்திட்டு காபி எதுவும் சாப்பிடுறதா இருந்தா சாப்பிடு. நான் போயிட்டு வர்றேன்.”  
 
“நானும் வரவா ஸார்?” எனக் கேட்டான் பவ்யமாய். 
 
“இல்லை வேண்டாம். நான் கொஞ்ச நேரம் தனிமையா இருக்கணும். எம்மக நடந்த இடத்தில் கொஞ்ச நேரம் உட்காரணும். என்னைத் தேடாதே. பசிச்சா சாப்பிட்டு வெயிட் பண்ணு... சரியா? '' 
 
 “சரிங்க ஸார்!” என்றவாறு பின்பக்கம் கதவைத் திறந்தான். 
 
குனிந்து அந்தப் பொருளை எடுத்துக் கொண்டார் மகாதேவன். உடலும் உள்ளமும் பதறியது. கைகள் நடுங்க அதைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார். பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்த பொருளைப் பார்த்ததும் உலர்ந்திருந்த கண்கள் மீண்டும் ஊற்றெடுத்தது. நடப்பதற்கு சற்றுத் தடுமாறினார். 
 
மணிகண்டன் குரல் கொடுத்தான். “ஸார்!”
 
“ம்...!” 
 
“வந்து... சத்யா சார் உங்களைத் தனியா விடக்கூடாதுன்னு சொன்னாங்க. எப்பவும் என்னையும் கூடப் போன்னு சொன்னாங்க!” என்றான் தயங்கி. 
 
வருத்தமாய்ப் புன்னகைத்தார் மகாதேவன். “எம்மேல உள்ள அக்கறையில் அப்படிச் சொல்லியிருப்பான். நீ என்னைப் பற்றிக் கவலைப்படாதே. ஆமா! வழக்கமா நிலா இங்கே வரும்போதெல்லாம் எங்கே சுற்றிப் பார்ப்பாள்? எந்த இடம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்?” 
 
“ஸார்! அம்மா எப்போ வந்தாலும் அதோ தெரியுதே அந்த பில்டிங்லதான் மணிக்கணக்கா நிற்பாங்க!” எனக் காட்டிய திசையைப் பார்த்து வியந்தார். அது ஒரு வெற்றுக் கட்டிடம். கோவிலோ சிலைகளோ கடைகளோ இல்லாத  இடம். 
 
“இதுவா? இங்கே நின்று என்ன செய்வாள்?” என்றார் வியப்பாய். 
 
“ஸார்! இங்கேதான் மூணு கடலும் ஒண்ணாச் சேருதாம். அதுக்கு அடையாளமாத்தான் இந்த பில்டிங்க கட்டி வெச்சிருக்காங்களாம். இங்கே நின்னு கடலை அமைதியா ரசிக்கத்தான் நிலாம்மா பிரியப்படுவாங்க.” 
 
மீண்டும் மனம் கனத்தது. நிலா எப்போதும் இப்படித்தான். அவள் ஒரு தனிமை விரும்பி. கூட்டமாய் இருக்கும் தியேட்டர்களுக்கு போக விரும்ப மாட்டாள். கேசட்டை வாங்கித் தன் அறையில் அமர்ந்து தனியாக படம் பார்ப்பாள். செவ்வாய், வெள்ளி அன்று கோவிலுக்குப் போகாமல் புதன்கிழமை மட்டுமே போவாள். 
 
கேட்டால், அன்னிக்குத் தாம்ப்பா கோவில்ல கூட்டமே இருக்காது. சாமியை நின்று நிதானமாய்ப் பார்க்கலாம் என்பாள். கல்யாண வீடு, விருந்து, விசேஷம் எங்கு என்று நடந்தாலும் வர மறுத்துவிடுவாள். அன்றே அதை மாற்றியிருக்க வேண்டும். 
 
தன் மகள் அமைதியே உருவானவள். அமைதியை விரும்புகிறாள் எனக் கவனியாமல் விட்டதால்தான் என் மகள் அமைதியாகி விட்டாளோ? 
 
அப்போதே நாலு இடத்திற்கு அழைத்துச் சென்று அனைவரிடமும் பழக வைத்திருக்க வேண்டும். அப்படிப் பழகியிருந்தால் துணிச்சலும் தைரியமும் இயல்பாகவே வந்திருக்கலாம். 
 
பெற்றவனிடமே பேசத் துணிவில்லாமல் என் மகள் என்னைத் தவிக்கவிட்டு போயிருக்க மாட்டாள். எல்லாம் என்னால்தானே! செல்லமாய் வளர்த்த நான் அவளைத் தைரியமாய் வளர்க்கவில்லையே! 
 
“ஸார்!” மணிகண்டன் குரல் கொடுக்க, திடுக்கிட்டு நிமிர்ந்தார். 
Disponível desde: 03/02/2024.
Comprimento de impressão: 264 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Meendum Jeeno - cover

    Meendum Jeeno

    Sujatha

    • 0
    • 0
    • 0
    முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்க, இயந்திர நாயான ஜீனோ, நிலாவுக்கு உதவ தன் ஒட்டு மொத்தத் தந்திரங்களையும் மூளையையும் பிரயோகிக்கிறது. ஜீனோவுக்கும் எதிரிகளுக்கும் இடையில் நடக்கும் போரின் முடிவு என்ன என்பதுதான் இந்த நாவல்.
    Ver livro
  • மகரந்தம் தாங்கும் மலரவள் - Magarantham Thangum Malaraval (Tamil Edition) - cover

    மகரந்தம் தாங்கும் மலரவள் -...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. 
    காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்!   
     
    Ver livro
  • நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam Maravaatha Nenjamadi - cover

    நேசம் மறவாத நெஞ்சமடி - Nesam...

    Kamali Maduraiveeran

    • 0
    • 0
    • 0
    "அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது..." என்று வாய்க்குள் முணுமுணுத்தாள்.  
    மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 
     "அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ..." என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. 
    அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. 
    மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். 
    வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா.  
    மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. 
    ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... 
    “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... 
    என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்.
    Ver livro
  • En Iniya Iyandhira - cover

    En Iniya Iyandhira

    Sujatha

    • 0
    • 0
    • 0
    சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022-ல் நடப்பதான இந்தக் கதையில் 'ஜீனோ' என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் 'ஜீவா' என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
    Ver livro
  • Choza Sooriyan - சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - cover

    Choza Sooriyan - சோழன் தலைகொண்ட...

    Siraa

    • 0
    • 0
    • 0
    Description 
    சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production
    Ver livro
  • Kaalachakram - cover

    Kaalachakram

    Kalachakram Narasimha

    • 0
    • 0
    • 0
    "காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்."
    Ver livro