Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
நான் எனது அம்மாவை நேசிக்கிறேன்I Love My Mom - cover
LER

நான் எனது அம்மாவை நேசிக்கிறேன்I Love My Mom

Shelley Admont, KidKiddos Books

Editora: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Sinopse

எந்த வயதினராக இருந்தாலும் எல்லோரும் தங்கள் அம்மாவை நேசிக்கிறார்கள். இந்த பெட்டைம் கதையில், குட்டி முயல் ஜிம்மி மற்றும் அவனது மூத்த சகோதரர்கள் அவர்களுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக சரியான பரிசைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைக் காட்ட விரும்புகிறார்கள்.அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த என்ன ஆக்கப்பூர்வமான தீர்வினைக் கண்டுபிடித்தார்கள்? இந்த விளக்கப்படங்களை உள்ளடக்கிய குழந்தைகள் புத்தகத்தில் நீங்கள் அதனை அறிவீர்கள்.இந்த குழந்தைகளுக்கான புத்தகம் உறக்க நேர சிறுகதைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். இந்தக் கதை உறங்கும் நேரத்தில் உங்கள் குழந்தைகளுக்குப் படிக்க ஏற்றதாகவும், முழுக் குடும்பத்துக்கும் ரசிக்கக் கூடியதாகவும் இருக்கும்!
Disponível desde: 24/05/2024.
Comprimento de impressão: 34 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Valmiki Ramayanam Part 4 - Kishkintha Kandam - cover

    Valmiki Ramayanam Part 4 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    கிஷ்கிந்தா காண்டத்தில் ராமர் அனுமனையும் சுக்ரீவனையும் சந்திப்பது, சுக்ரீவனுடன் நட்பு கொள்வது, வாலி-சுக்ரீவன் கதை, ராமர் வாலியைக் கொன்று, சுக்ரீவனை வானர அரசனாக்குவது, சுக்ரீவன் தன் வானரர்களை சீதையைத் தேடும் பணியில் அனுப்புவது, அங்கதன் தலைமையில் தெற்கே செல்லும் வானரர் படை, கழுகு சம்பாதியின் மூலம் சீதை இலங்கையில் இருப்பதை அறிவது, ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பறந்து செல்லத் தயாராவது – ஆகியவை இடம் பெறுகின்றன.
    Ver livro
  • Avvaiyar Moothurai - Tamil Audio Book - மூதுரை - ஔவையார் - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Moothurai - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    மூதுரை – ஒளவையார்: தமிழ் இலக்கியத்தின் பொற்கால படைப்புகளில் ஒன்றான மூதுரை,  ஒளவையார் அவர்களால் இயற்றப்பட்டது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்வியல் நெறிகளை எளிமையான மற்றும் இனிமையான சொற்களில் போதிக்கும் இந்த நூல், ஒழுக்கம், நற்பண்புகள், கல்வி, மரியாதை போன்றவற்றை கற்றுத்தரும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. பள்ளிக் கல்வியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மூதுரை, தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறப்புமிக்க நூலாகும். மூதுரை தமிழ் கலாசாரத்தையும், நல்லொழுக்கப் பாதையையும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரிய பொக்கிஷமாகும்.
    Ver livro
  • Karippu Manigal - cover

    Karippu Manigal

    Rajam Krishnan

    • 0
    • 0
    • 0
    தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்
    Ver livro
  • Valmiki Ramayanam Part 2 - Ayodhya Kandam - cover

    Valmiki Ramayanam Part 2 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    அயோத்தியா காண்டத்தில், ராமனின் சிறந்த குணங்களால் நாட்டுமக்கள் அவரை நேசித்தது, ராமனுக்கு முடிசூட்ட தசரதர் தீர்மானித்தல், மந்தரையின் துர்போதனையால் கைகேயி தசரதமிடமிருந்து பிடிவாதமாய் வரம் கேட்டு வாங்கியது, அதனால் தசரைப் பீடித்த சோகம், கைகேயி பெற்ற வரப்படி ராமர் காட்டுக்குப் புறப்படத் தயாராவது, அவருடனேயே சீதையும் லக்ஷ்மணனும் வனம் செல்வது, ராமரைப் பிரிய இயலாமல்  அயோத்தி மக்கள்  தொடர்ந்து அவர் கூடவே வருவது, ராமர் வேடுவ அரசன் குஹனை சந்திப்பது, பரத்வாஜ முனிவர் வழி காட்டியபடி, சித்ரகூடத்தில் சென்று வாசம் செய்வது, அயோத்தியில் ராமரின் பிரிவு தாங்காமல் மன்னர் தசரதர் மரணமடைவது,  பரதன் அயோத்திக்கு  வந்து, சேதி கேட்டுத் தன் தாயைக் கோபிப்பது, பரதன் ராமரைக் கூட்டி வரப் பெரும் படையுடன் காட்டுக்குச் செல்வது, ராமரை நாடு திரும்பச் சொல்லி வற்புறுத்துவது, அது நடக்காததால் ராமரது பாதுகளைப் பெற்று பரதன் நாடு திரும்பிவந்து பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் செய்து ராமரது பிரதி நிதியாய் நாட்டை ஆள்வது – ஆகியவை இடம்பெறுகின்றன.
    Ver livro
  • Panchatantra Stories - cover

    Panchatantra Stories

    Thilagam, Deepika Arun, Bavya

    • 0
    • 0
    • 0
    பழைய பஞ்சதந்திரக் கதைகளை நீங்க கேட்டிருப்பீங்க—அதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி, சண்டை போட்டு, சில சமயம் கொடுமையா நடந்துக்கற கதைகள் தான் நிறைய இருக்கும், இல்லையா? 
    சிட்டுக்குருவி போட்காஸ்ட் ல குழந்தைகளுக்கான பஞ்சதந்திரக் கதைகள் தொடர்ல, பழைய கதைகளை கொஞ்சம் மாத்தி, கருணையும் நல்ல மனசும் பிரச்சனைகளை தீர்க்கும்ங்கிற முடிவோட உங்களுக்கு சொல்றோம். இதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் கொல்லாம, ஏமாத்தாம, புத்திசாலித்தனமா யோசிச்சு, உணர்ச்சிகளை சரியா புரிஞ்சுகிட்டு ஒத்துமையா வாழ கத்துக்கறாங்க. இந்தக் கதைகள் உங்களை சிந்திக்க வைக்கும், யோசிக்க வைக்கும், முக்கியமா, உங்கள சுத்தி இருக்குறவங்களோட சிரிச்சிகிட்டு கிரிச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ உதவி பண்ணும்னு நம்பறோம்! கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!
    Ver livro
  • Valmiki Ramayanam Part 7 - Uttara Kandam - cover

    Valmiki Ramayanam Part 7 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    ராமரைச் சந்தித்து வாழ்த்த வந்த அகஸ்திய முனிவர் ராமருக்கு ராவணனின் முழு சரித்திரத்தை சொல்ல ஆரம்பிப்பது, ராவணனின் முன்னோர்கள் பற்றிய கதைகள், ராவணனும் அவன் சகோதரர்களும் பற்றிய கதைகள், ராவணன் போர் வெறியுடன் பல உலகங்களுக்கும் திக் விஜயம் செய்து பலரையும் வெல்வது, ராவணனின் அகங்காரத்தை சிவபெருமான் அடக்குவது, ராவணன் குபேரனின் மகனிடமிருந்து சாபம் பெறுவது, ராவணன் வாலியிடமும், கார்த்த வீரியார்ஜுனனிடமும் அவமானப் பட்டு, சமாதானமாய்ப் போனது, ராவணன் மகன் இந்திரஜித்தின் அபார ஆற்றல் ஆகியவை முனிவரால் சொல்லப் படுகின்றன. 
     தொடர்ந்து , அயோத்தி மக்கள் சீதையைப் பற்றி அவதூராய்ப் பேசியதை அறிந்த ராமர் அவளை வனவாசம் செய்ய அனுப்புவது, சீதை வால்மீகி முனிவருடன் தங்கி, ராமரின் வாரிசுகளான லவ குசர்களைப் பெற்றெடுப்பது, ராமரின் சிறப்பான ஆட்சி, பரதன், சத்ருக்னன், லக்ஷ்மணன் ஆகியோரின் வாரிசுகளுக்கு ஆள்வதற்கு நாடுகளை வழங்குவது, ராமர் சம்புகனை வதம் செய்வது, ராமர் அச்வமேத யாகம் நடத்திய சமயத்தில் லவ குசர்கள் வந்து வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்தைப் பாடுவது, ராமர் சீதையை மீண்டும் தன் கற்பை நிரூபிக்கக் சொல்வது, சீதை அழைத்ததும் அவள் தாய் பூமாதேவி வந்து தன்னுடன் பூமிக்கு அடியே பாதாள லோகத்துக்குக் சீதையை கொண்டு போய்விடுவது, சீதை இல்லாத ராமரின் துக்கம், மகாவிஷ்ணுவான ராமர் தம் அவதாரத்தை நிறைவு செய்து, அயோத்தி வாசிகளுடன் சரயூ நதியிலிறங்கி உலககைத் துறந்து வைகுண்டத்துக்குத் திரும்புவது – ஆகியவை இடம் பெறுகின்றன.
    Ver livro