Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
ஐ லவ் மை அப்பா I Love My Dad - cover
LER

ஐ லவ் மை அப்பா I Love My Dad

Shelley Admont, KidKiddos Books

Editora: KidKiddos Books

  • 0
  • 0
  • 0

Sinopse

குட்டி முயல் ஜிம்மிக்குத் தன் அண்ணன்களைப் போல மிதிவண்டியை நன்றாக ஓட்ட தெரியவில்லை.இதற்காக அவன் கிண்டல் செய்யப்படுகிறான். இதில் அப்பா ஜிம்மிக்கு எப்படி புதிய விஷயங்களை பயமின்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்று காண்பிக்கும்போது தான் வேடிக்கையே தொடங்குகிறது.இந்த குழந்தைகள் புத்தகம் சிறிய பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற தொகுப்பின் பகுதியாகும்.இந்த கதையை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு உறங்கும்முன் வாசிக்கத் தகுந்தது மற்றும் இதை நீங்கள் உங்கள் மொத்த குடும்பத்துடன் சேர்ந்து படித்து மகிழலாம்!!
Disponível desde: 08/05/2024.
Comprimento de impressão: 34 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Valmiki Ramayanam Part 7 - Uttara Kandam - cover

    Valmiki Ramayanam Part 7 -...

    Sandeepika

    • 0
    • 0
    • 0
    ராமரைச் சந்தித்து வாழ்த்த வந்த அகஸ்திய முனிவர் ராமருக்கு ராவணனின் முழு சரித்திரத்தை சொல்ல ஆரம்பிப்பது, ராவணனின் முன்னோர்கள் பற்றிய கதைகள், ராவணனும் அவன் சகோதரர்களும் பற்றிய கதைகள், ராவணன் போர் வெறியுடன் பல உலகங்களுக்கும் திக் விஜயம் செய்து பலரையும் வெல்வது, ராவணனின் அகங்காரத்தை சிவபெருமான் அடக்குவது, ராவணன் குபேரனின் மகனிடமிருந்து சாபம் பெறுவது, ராவணன் வாலியிடமும், கார்த்த வீரியார்ஜுனனிடமும் அவமானப் பட்டு, சமாதானமாய்ப் போனது, ராவணன் மகன் இந்திரஜித்தின் அபார ஆற்றல் ஆகியவை முனிவரால் சொல்லப் படுகின்றன. 
     தொடர்ந்து , அயோத்தி மக்கள் சீதையைப் பற்றி அவதூராய்ப் பேசியதை அறிந்த ராமர் அவளை வனவாசம் செய்ய அனுப்புவது, சீதை வால்மீகி முனிவருடன் தங்கி, ராமரின் வாரிசுகளான லவ குசர்களைப் பெற்றெடுப்பது, ராமரின் சிறப்பான ஆட்சி, பரதன், சத்ருக்னன், லக்ஷ்மணன் ஆகியோரின் வாரிசுகளுக்கு ஆள்வதற்கு நாடுகளை வழங்குவது, ராமர் சம்புகனை வதம் செய்வது, ராமர் அச்வமேத யாகம் நடத்திய சமயத்தில் லவ குசர்கள் வந்து வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்தைப் பாடுவது, ராமர் சீதையை மீண்டும் தன் கற்பை நிரூபிக்கக் சொல்வது, சீதை அழைத்ததும் அவள் தாய் பூமாதேவி வந்து தன்னுடன் பூமிக்கு அடியே பாதாள லோகத்துக்குக் சீதையை கொண்டு போய்விடுவது, சீதை இல்லாத ராமரின் துக்கம், மகாவிஷ்ணுவான ராமர் தம் அவதாரத்தை நிறைவு செய்து, அயோத்தி வாசிகளுடன் சரயூ நதியிலிறங்கி உலககைத் துறந்து வைகுண்டத்துக்குத் திரும்புவது – ஆகியவை இடம் பெறுகின்றன.
    Ver livro
  • Avvaiyar Moothurai - Tamil Audio Book - மூதுரை - ஔவையார் - பாடலும் விளக்கமும் - cover

    Avvaiyar Moothurai - Tamil Audio...

    Avvaiyar

    • 0
    • 0
    • 0
    மூதுரை – ஒளவையார்: தமிழ் இலக்கியத்தின் பொற்கால படைப்புகளில் ஒன்றான மூதுரை,  ஒளவையார் அவர்களால் இயற்றப்பட்டது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்வியல் நெறிகளை எளிமையான மற்றும் இனிமையான சொற்களில் போதிக்கும் இந்த நூல், ஒழுக்கம், நற்பண்புகள், கல்வி, மரியாதை போன்றவற்றை கற்றுத்தரும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. பள்ளிக் கல்வியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மூதுரை, தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறப்புமிக்க நூலாகும். மூதுரை தமிழ் கலாசாரத்தையும், நல்லொழுக்கப் பாதையையும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரிய பொக்கிஷமாகும்.
    Ver livro
  • Panchatantra Stories - cover

    Panchatantra Stories

    Thilagam, Deepika Arun, Bavya

    • 0
    • 0
    • 0
    பழைய பஞ்சதந்திரக் கதைகளை நீங்க கேட்டிருப்பீங்க—அதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி, சண்டை போட்டு, சில சமயம் கொடுமையா நடந்துக்கற கதைகள் தான் நிறைய இருக்கும், இல்லையா? 
    சிட்டுக்குருவி போட்காஸ்ட் ல குழந்தைகளுக்கான பஞ்சதந்திரக் கதைகள் தொடர்ல, பழைய கதைகளை கொஞ்சம் மாத்தி, கருணையும் நல்ல மனசும் பிரச்சனைகளை தீர்க்கும்ங்கிற முடிவோட உங்களுக்கு சொல்றோம். இதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் கொல்லாம, ஏமாத்தாம, புத்திசாலித்தனமா யோசிச்சு, உணர்ச்சிகளை சரியா புரிஞ்சுகிட்டு ஒத்துமையா வாழ கத்துக்கறாங்க. இந்தக் கதைகள் உங்களை சிந்திக்க வைக்கும், யோசிக்க வைக்கும், முக்கியமா, உங்கள சுத்தி இருக்குறவங்களோட சிரிச்சிகிட்டு கிரிச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ உதவி பண்ணும்னு நம்பறோம்! கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!
    Ver livro
  • Pavalakkoti - cover

    Pavalakkoti

    Pukazhendi

    • 0
    • 0
    • 0
    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. 
    தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. 
    கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. 
    அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.
    Ver livro
  • Alli Arasani Malai - cover

    Alli Arasani Malai

    Pukazhenthi

    • 0
    • 0
    • 0
    நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. 
    தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. 
    கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. 
    அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.
    Ver livro
  • Sotru Kanakku - cover

    Sotru Kanakku

    Jeyamohan

    • 0
    • 0
    • 0
    அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை அது. தாயத்து கட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட ஒரு  கரடிக்கரம். அன்னமிட்ட கைக்கு காப்பும் காசும் ஈடாகுமா? பசி மிகுந்த வயிற்றுக்கு ஈயப்படும் உணவிற்கு விலை வைக்க முடியுமா? வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வருபவர்களின் பசியோடு ருசியையும் அறிந்து அவர்களுக்கு உணவளித்த ஒரு மாபெரும் மனிதரின் கதை கேளுங்கள் !
    Ver livro