Join us on a literary world trip!
Add this book to bookshelf
Grey
Write a new comment Default profile 50px
Grey
Subscribe to read the full book or read the first pages for free!
All characters reduced
விவேக் விஷ்ணு வெற்றி - cover

விவேக் விஷ்ணு வெற்றி

ரமணிசந்திரன்

Publisher: Pocket Books

  • 0
  • 0
  • 0

Summary

இன்டர்காம் கூப்பிட்டது.பார்த்துக் கொண்டிருந்த ஃபைலினின்றும் பார்வையை எடுக்காமல் கைநீட்டி ரிஸீவரை எடுத்தான் சித்தார்த்தன். முப்பது வயது. ஐந்தடி பத்து அங்குல உயர உடம்பு. மெலிதான இள நீல நிற சூட் - இவைகளின் கூட்டணியில் இருந்த சித்தார்த்தன் ரிஸீவரை காதுக்கு ஒட்டவைத்து “எஸ்” என்றான்.“மிஸ்டர் சித்தார்த்தன்...! அயம் காமேஷ்வரன். உங்கக்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. ஒரு பத்து நிமிஷம் எனக்கு அப்பாய்ன்மென்ட் கொடுக்க முடியுமா...?”சித்தார்த்தன் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை தள்ளி வைத்துவிட்டு பவ்யமாய் எழுந்தான்.“அப்பா...! இப்படியெல்லாம் பேசி என்னோட மனசைக் கஷ்டப்படுத்தாதீங்க... உங்க மகனைப் பார்க்க நீங்க எப்ப வேணும்ன்னாலும்... வரலாம்...!” சொல்லிக் கொண்டே அறையின் கதவுக்குப் போய் தாழ்ப்பாளைப் பிடித்து இழுத்தான்.வெளியே –செல்போனோடு அவனுடைய அப்பா காமேஷ்வரன்.“உள்ளே வாங்கப்பா...”“பத்தே பத்து நிமிஷம் போதும். பதினோராவது நிமிஷம் வெளியே போயிடுவேன்... அப்பாய்ண்மென்ட் கிடைக்குமா...?”“நீங்க மொதல்ல உள்ளே வாங்கப்பா...!”அறைக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த காமேஷ்வரனுக்கு அறுபது வயது. சற்று ஒடிசலான சிவப்பு நிற தேகம். மெலிதான நரைமுடியை படிய வாரியிருந்தார். மொட மொடப்பான கதர் வேஷ்டியும் சர்ட்டும் அவருடைய உடம்புக்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது.“உட்கார்ங்கப்பா...!”“நான் உட்காரலை... மொதல்ல இந்தப் போட்டோக்களைப் பாரு...!”ஒரு ப்ரெளன் கவரை நீட்டினார்.சித்தார்த்தன் நெற்றியில் பெரிதாய் ஒரு கேள்விக்குறி...!“என்ன போட்டோஸ்?”“வாங்கிப் பாரு... தெரியும்...”வாங்கிப் பார்த்தான். கவர்க்குள்ளே ஐந்து போஸ்ட் கார்ட் சைஸ் போட்டோக்கள். ஒவ்வொரு போட்டோவிலும் ஒரு பெண் நேர்பார்வை பார்த்து புன்னகைத்தாள்.“என்னப்பா இதெல்லாம்...?”“பொண்ணுங்க எப்படி இருக்காங்க...?”“நல்லாத்தான் இருக்காங்க...”“இதுல யாராவது ஒரு பொண்ணை செலக்ட் பண்ணிச் சொல்லு... நாளைக்கு பெண் பார்க்க போலாம்.”“அ... அப்பா...”“என்ன...?”“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்...! இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்...”“எதுக்கு ரெண்டு வருஷம் வாய்தா கேட்கிறே?”“கம்பெனியோட பிசினஸ் கிராப் இப்பத்தான் ரெய்ஸாகியிருக்கு... அதை இன்னும் டெவலப் பண்ணிட்டு...இதோ பார்ரா... கம்பெனியோட பிசினஸ் கிராப்பைப் பத்தி நீ கவலைப்படாதே... உனக்கு கீழே ஒரு ஏ.வி.பி., ஒரு ஜி.எம்., ரெண்டு டி.ஜி.எம்., நாலு மேனேஜர்ஸ், ஒரு அட்மினிஷ்ட்ரேஷன் ஆபீஸர், பத்து அக்கவுண்ட் ஆபீஸர்ஸ் இருக்காங்க. இவங்க எல்லாரும் கம்பெனியோட பிசினஸ் கிராப்பை பார்த்துக்குவாங்க.”“அப்பா...! நான் என்ன சொல்ல வர்றேன்னா...?”“நோ... ஆர்க்யூமெண்ட் ப்ளீஸ்... போட்டோக்களைப் பாரு...! அஞ்சுல ஒண்ணை செலக்ட் பண்ணு.”“உடனேவா...?”“உடனே... உடனே...!”“எனக்கு அவகாசம் வேணும்...”“எப்ப எனக்கு உன்னோட முடிவைச் சொல்லுவே?”“இன்னிக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு உங்க கையில இந்த போட்டோக்களில் ஏதாவது ஒண்ணு இருக்கும்.”“நிஜமாத்தானே சொல்றே...?”“இதுல பொய் சொல்ல என்னப்பா இருக்கு...?”“சித்தார்த்...! இந்தப் போட்டாக்களில் இருக்கிற பெண்கள் எல்லாமே நம்ம ஸ்டேட்டஸுக்கு ஏத்த மாதிரி பெரிய இடத்துப் பெண்கள். இதுல நீ யாரை செலக்ட் பண்ணினாலும் எனக்கு சந்தோஷமே!”“ராத்திரி நான் வீட்டுக்கு வரும்போது உங்களுக்கு போட்டோவைக் கொடுத்துடறேன். போதுமா...?”“போதும்...! நான் புறப்படறேன்... நீயும் வீட்டுக்கு சீக்கிரமே வந்து சேரு… உழைப்புக்கும் ஒரு எல்லை இருக்கு... ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்த உடம்பு இப்போ இல்லை. கண்ணாடிக்கு முன்னாடி ஒரு ரெண்டு நிமிஷம் நின்னு உன்னையே நீ பார்த்துக்கிட்டாத்தான் தெரியும்... எப்படி இளைச்சு போயிருக்கேன்னு...!”சித்தார்த் சிரித்தான். “அப்பா...! அடுத்த மாசம் ஊட்டிக்குப் போய் பதினஞ்சு நாள் ரெஸ்ட் எடுக்கப் போறேன். அந்த ரெஸ்ட்ல பழைய உடம்பு வந்துடும்...! கவலைப்படாதீங்க...!உன்னோட அம்மா உயிரோடு இருந்திருந்தா இப்படி உன்னை விட்டிருக்கமாட்டா... எப்பவோ கல்யாணத்தை பண்ணி வெச்சிருப்பா... நீயும் ஒரு பேரப் பிள்ளையையோ பேத்தியையோ பெத்து கொடுத்து இருப்பே...!’ காமேஷ்வரன் தனக்குள் முனகிக் கொண்டே அறையைவிட்டு வெளியேறினார்
Available since: 02/08/2024.
Print length: 69 pages.

Other books that might interest you

  • Mohini Koyil - cover

    Mohini Koyil

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    மாந்திரீக நாவல்களின் வரிசையில் கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் மற்றுமொரு படைப்பு மோகினி கோயில். மும்பை நகரத்திலிருந்து வெளிவரும் மலையாள மாத இதழான "சேல்ஸ் டாக்ஸ்" பத்திரிகையில் 27 மாதங்கள் "யக்ஷிக்காவு" என்ற பெயரில் வெளிவந்த நாவல்.
    
    பேய், பிசாசு, மோகினி என்றால் அனைவரும் பயப்படுவதுண்டு. இக்கதையில் சற்று நேர்மாறாக மோகினியான தேவசேனையின் உதவியுடன் கோவிந்தன் குட்டி என்னும் இளைஞன் எவ்வாறு நன்மை பெறுகிறான் என்பது பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் கூறப்பட்டுள்ளது. மாந்திரீக சக்தி தெய்வீக சக்திக்கு முன்னால் செயலற்று போகும் என்பதை பல திகிலூட்டும் சம்பவங்களுடன் விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது இக்கதை.
    Show book
  • 5 Star Dhrogam - cover

    5 Star Dhrogam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    இளம் வருமான வரி அதிகாரிகளான சாதூரியா மற்றும் நித்திலன் "ஆபரேஷன் ஆக்டோபஸ்" என்னும் விசாரணையில் தவறான வழியில் ஒரு அரசியல் புள்ளி ஈட்டிய வருமானத்தை வெளியில் கொண்டுவர ஈடுபடுகிறார்கள். நான்கு பக்கங்களிலிருந்தும் இந்த பணத்தை அடைய பலர் துடிக்கிறார்கள். இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடும் சிபிஐ மற்றும் வருமான வரி அதிகாரிகள் இடையில் நிகழும் பற்பல மர்மமான தொடர் கொலைகளினால் குழப்புகிறார்கள் . பல எதிர்பாராத திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிறைந்த கதை "பைவ் ஸ்டார் துரோகம்".
    Show book
  • Nirkaadhe Gavanikkadhe - cover

    Nirkaadhe Gavanikkadhe

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    Two rich young men are not satisfied with the luxurious life they have but want to enjoy adrenaline rush by committing some heinous crime! This is the story of the police playing hide and seek with these 2 youngsters. Listen to Nirkadhe Gavanikkadhe.
    
    இரண்டு பணக்கார இளைஞர்களுக்கு அத்தனை உல்லாசத்தையும் அனுபவித்ததும் சாகசமான குற்றங்கள் செய்யும் விபரீத எண்ணம் ஏற்படுகிறது.காவல்துறைக்கும் இவர்களுக்கும் நடுவில் நிகழும் பூனை, எலி துரத்தல்களும், மோதல்களுமே கதை.
    Show book
  • Marma Maaligai - cover

    Marma Maaligai

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    "'Maranam Pathiyirikkunna Thazhvara' is one of the most famous detective novels written by Kottayam Pushpanath. It belongs to the Pushparaj series of Kottayam Pushpanath.
    Detective Pushparaj, he is a private detective working in India. The Criminal Department seeks his help in cracking down on many cases of trauma and confusion. In this novel, 'Maranam Pathiyirikkunna Thazhvara' Detective Pushparaj unravels a mysterious bungalow and some of the events surrounding it. The novel tells the story of a valley where death hides, just like the title of the novel.
    
    கோட்டயம் புஷ்பநாத் எழுதிய மிகவும் பிரபலமான துப்பறியும் நாவல்களில் ஒன்று 'மரணத்தாழ்வரா'. இது கோட்டயம் புஷ்பநாத்தின் புஷ்பராஜ் தொடருக்கு சொந்தமானது. துப்பறியும் புஷ்பராஜ், இந்தியாவில் பணிபுரியும் ஒரு தனியார் துப்பறியும் நபர். அதிர்ச்சி மற்றும் குழப்பம் தொடர்பான பல வழக்குகளைத் தீர்ப்பதற்கு குற்றவியல் துறை அவரது உதவியை நாடுகிறது. இந்த நாவலில் துப்பறியும் புஷ்பராஜ் ஒரு மர்மமான பங்களாவையும் அதைச் சுற்றியுள்ள சில நிகழ்வுகளையும் அவிழ்த்து விடுகிறார். நாவலின் தலைப்பைப் போலவே மரணம் மறைந்திருக்கும் ஒரு பள்ளத்தாக்கின் கதையையும் இந்த நாவல் சொல்கிறது.
    Show book
  • Thirakkadha Kadhavugal - cover

    Thirakkadha Kadhavugal

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    The protagonist meets his boss in his hotel suite. When he is talking, he gets shocked to see the prostitute who comes to meet the boss. Why is he shocked? How does it impact his family? Listen to Thirakkadha Kadhavugal.
    
    தான் பணிபுரியும் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்துப்
    பேசுவதற்காக அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வருகிறான் கதையின் நாயகன். அவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அந்த அதிகாரியை சந்தோஷப்படுத்துவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஓர் அழகான பெண் வருகிறாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ந்து போகிற கதையின் நாயகனுக்கு அடுத்தடுத்து வரும் குழப்பங்கள்தான் ஒட்டு மொத்த கதையும். குழப்பத்திற்கான பதில் கேட்டு எந்தக் கதவைத் தட்டினாலும் அந்தக்கதவு திறக்கப்படுவதில்லை. இறுதியில் ஒரு கதவு திறந்த போது அவனுக்குக் கிடைத்த பதில்தான் என்ன ?
    Show book
  • Porkaasu Thottam - cover

    Porkaasu Thottam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This is a novel that goes back and forth between the past and the present. There is a treasure in a cemetery. The cemetery holds in it a lot of secrets. What are they? This story is sure to drag you into its thrilling world. Listen to Porkaasu Thottam.
    
    இது ஒரு வரலாறும் சமகாலமும் கலந்த புதினம். புதையல் தான் கதையின் மையம். குறிப்பாக மயானமும் மயானத்தில் இருக்கும் ரகசியங்களும் எவரும் அறியாதவை. கேட்பவர்களை தன் கதைக்களத்திற்குள் இழுத்துச்செல்லும் விறுவிறுப்பான நாவல்.
    Show book