¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
முள் முனையில் முகிலா - cover

முள் முனையில் முகிலா

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

சென்னை.அடையார் போட் கிளப் ரோட்டில் - சினிமா டைரக்டர் ஹரிஹரபுத்ரன் பங்களா. உதட்டில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க - பீர் வளர்த்துவிட்ட தொப்பையை - இடதுகை விரல்களால் செல்லமாய் வருடிக் கொண்டே - சுற்றிலும் உட்கார்ந்திருந்த பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.“வரிசையா மூணு சில்வர் ஜூபிளி படங்களைக் குடுத்திருக்கீங்க... இந்த வெற்றிக்கு எது காரணம்ன்னு நினைக்கறீங்க...?”“நான் எடுத்துக்கிட்ட கதையம்சம்தான்...”“இசைக்காகத்தான் படம் ஒடிச்சுன்னு சொல்றாங்களே...?”“சம்பந்தப்பட்டவங்க அப்படி சொல்ல வெச்சுருக்காங்க... என் படங்களோட வெற்றிக்கு காரணம் நல்ல கதைதான்... இந்தக் கருத்தை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையே பட்டவர்த்தனமா எழுதியிருக்கு...”“உங்க அடுத்த படம் என்ன...?”“ஊமை புல்லாங்குழல்கள்...”“லவ் ஸ்டோரியா...?”“படத்தைப் பத்தி இப்ப எதுவும் சொல்றதுக்கில்லை...”“ஹீரோ யாரு...?”“என் படத்துக்கு ஹீரோ கதைதான்...”“கமர்ஷியல் படமா… ஆர்ட் படமா...?”“ஓடினா... கமர்ஷியல் படம்... ஓடாட்டி... ஆர்ட் படம்னு சொல்லிக்கலாம்...”“ஒரு பழம் பெரும் டைரக்டர் உங்களைப் பத்தி கருத்து தெரிவிக்கும்போது - ‘தலைக்கனம் பிடிச்சவர் ஹரிஹரபுத்ரன்’னு சொல்லியிருக்காரே...?”“அவர் சொன்னது சரிதான்... ஏன்னா என்னோட - தலையில் நிறைய விஷயம் இருக்கிறதுனால - கனக்கத்தான் செய்யும்...”“ஒரு பர்சனல் கேள்வி. கேக்கலாமா...?”“கேக்க வேண்டாம்...”“உங்க எதிர்கால லட்சியம் என்ன...?”“எனக்கு மட்டுமில்லை... இந்த சினி ஃபீல்டில் இருக்கிற ஒவ்வொருத்தருக்கும்... பணம் சம்பாதிக்கிறதுதான் லட்சியம்... சினிமாக்காரங்ககிட்டே இதுமாதிரியான கேள்வியைக் கேட்காதீங்க... ரப்பிஷ்...!” கையிலிருந்த சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் இட்டு தீய்த்துக் கொண்டிருக்கும்போதே -டீ பாயின் மேல் இருந்த அந்த டெலிபோன் கிணுகிணுத்தது.ஹரிஹரபுத்ரன் ரிஸீவரை எடுத்தார்.“ஹலோ...” மறுமுனையில் பெண் குரல்.“அப்பா... நான் முகிலா பேசறேன்...”ஹரிஹரபுத்ரன் உடம்பு பூராவும் மலர்ந்தார்.“அடடே... நீயாம்மா? வழக்கமா ராத்திரி நேரம்தான் போன் பண்ணுவே... இப்ப என்னம்மா... திடீர்ன்னு...?”“ஐயோ... அப்பா... நான்... இப்ப நியூயார்க்கிலிருந்து ஓவர்சீஸ் கால் மூலமா பேசலை...?”“பின்னே...?”“மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிலிருந்து...”ஆனந்தத்தில் அதிர்ந்தார் ஹரிஹரபுத்ரன்
Disponible desde: 13/01/2024.
Longitud de impresión: 73 páginas.

Otros libros que te pueden interesar

  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Ver libro
  • Kolayudhir Kaalam - cover

    Kolayudhir Kaalam

    Sujatha

    • 0
    • 0
    • 0
    அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.
    Ver libro
  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Kumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Ver libro
  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Ver libro
  • Galugambada Atankadali - cover

    Galugambada Atankadali

    D V Guruprasd

    • 0
    • 0
    • 0
    'ಸಾವಿನ ಸೆರಗಿನಲ್ಲಿ' ಕೃತಿಯ ಎರಡನೆಯ ಭಾಗವೇ ಈ ಕೃತಿ, 'ಗಲ್ಲುಗಂಬದ ಆತಂಕದಲ್ಲಿ'. ಇದರ ಹೆಸರೇ ಸೂಚಿಸುವಂತೆ ಮರಣದಂಡನೆಯ ಶಿಕ್ಷೆಗೆ ಈಡಾಗಿರುವ ಕೈದಿಗಳ ಕಥೆಗಳ ಗುಚ್ಛವಿದು.
    Ver libro
  • Neeyum Bommai Naanum Bommai - cover

    Neeyum Bommai Naanum Bommai

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது.
    Ver libro