¡Acompáñanos a viajar por el mundo de los libros!
Añadir este libro a la estantería
Grey
Escribe un nuevo comentario Default profile 50px
Grey
Suscríbete para leer el libro completo o lee las primeras páginas gratis.
All characters reduced
முள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு! - cover

முள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு!

ரமணிசந்திரன்

Editorial: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopsis

அண்ணன் நட்ராஜ் நின்றிருந்த தோரணையும், ‘யார்டி அவன்?’ என்று குரலை ஒரு மாதிரி இழுத்துக் கேட்ட விதமும், செளந்தர்யாவின் வயிற்றில் ஓர் அவஸ்தையான ரசாயனக் கலவையை ஏற்படுத்த... கையில் வைத்திருந்த தண்ணீர் பாத்திரம் தானாய் நழுவியது.“டிங்… டிணார்…”“அ... அண்ணா...!” செளந்தர்யாவின் பெரிய விழிகள் நட்ராஜ் முகத்திலேயே திகைத்து நின்றது. நெற்றியிலும் மேலுதட்டிலும் அவசர அவசரமாய் அரும்பிவிட்ட வியர்வைச் சரங்கள் - வழிய நேரம் பார்த்தன.“அவன் யார்ன்னு கேட்டேன்...”“வ... வந்து... வந்து...”“பாத்திரம் விழுந்த சத்தம் கேட்டு - அறைக்குள் எட்டிப் பார்த்த சிவசாமி செளந்தர்யாவின் நிலைமையைப் பார்த்ததும் - முகம் மாறினார்.”“டேய், என்னடா நடந்தது?”அப்பாவைப் பொருட்படுத்தவில்லை நட்ராஜ். வாயில் இருந்த டூத் பேஸ்ட் நுரையை - சமையலறை ஜன்னல் வெளியே - தோட்டத்துச் செடிகள் மீது உமிழ்ந்து விட்டு செளந்தர்யாவின் பக்கம் கண்கள் சிவக்க திரும்பினான்.“யாரவன்?”எச்சில் விழுங்கினாள்.“காதலிக்கிறாயா?”“ஆ... ஆமா...” சொல்லி முடிப்பதற்குள் உடம்பு பூராவும் சில்லிட்டுப் போன மாதிரியான உணர்வு.“எத்தனை நாளா?”“மூ... மூணு மாசமா...”“அவன் பேர் என்ன?”“வ... வ... வருண்.”“என்ன ஜாதி?”“ந... நம்ம... ஜாதிதான்.”‘என்ன... அண்ணன் இவ்வளவு நிதானமாய் பேசிக் கொண்டிருக்கிறார்?’ என்று செளந்தர்யா நினைத்த விநாடி –நட்ராஜ் கத்தினான்.“ரோகிணி! என் பெல்ட்டைக் கொஞ்சம் எடுத்துட்டு வா.”அந்தக் கத்தலுக்காகவே காத்திருந்த மாதிரி ரோகிணி சமையலறைக்குள் நுழைந்தாள். கையில் பாம்பு சட்டை உரித்த மாதிரியான பெல்ட்.சிவசாமி பதறிப்போய் - நட்ராஜின் தோளைப் பற்றினார் “டேய்ய்...!”“அப்பா! இவளைக் காலேஜுக்கு அனுப்பக் கூடாதுன்னு நான் முடிவு பண்ணினப்ப நீங்க என்ன சொன்னீங்க? ‘செளந்தர்யா படிக்க ரொம்பவும் ஆசைப்படறா. படிக்க வையேண்டா’ன்னு சொன்னீங்க. உங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு காலேஜுக்கு அனுப்பினேன். இப்ப இவ என்ன காரியம் பண்ணியிருக்கா தெரியுமாப்பா? இவ படிக்க ஆசைப்பட்டிருக்கா - ஆம்பிளை சுகத்துக்காக.”“டேய், நிறுத்துடா. பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டுப் போகாதே. இந்த வயசுல இதெல்லாம் சகஜம். அந்தப் பையன் யாரு, என்னான்னு விசாரிப்போம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த குடும்பமாய் இருந்தா...”“சம்பந்தம் பேசலாம்னு சொல்றீங்களா?ஆமா! பையன் நம்ம ஜாதின்னு செளந்தர்யா சொல்லிட்டா. ஜாதி பிரச்னை ஓவர். வேற ஏதாவது பிரச்னைகள் இருக்கான்னு பார்த்துட்டு...”ரோகிணி குறுக்கிட்டாள். “உங்க அப்பா பேசறதைப் பார்த்தீங்களா! பொண்ணைக் கையும் களவுமாக பிடிச்சுக் குடுத்திருக்கோம். இத்தனை குடித்தனங்கள் இருக்கிற தெருவுல, நெஞ்சில கொஞ்சம் கூட பயம் இல்லாமே, காலங்காத்தால வீட்டு வாசலுக்கு முன்னாடி ஒருத்தனோட உங்க பொண்ணு பேசிண்டிருக்கான்னு சொன்னா, நாம சொன்னதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் பொண்ணோட கல்யாணத்தைப் பத்திப் பேசிட்டிருக்கார்.”வந்த இருமலை அடக்கிக் கொண்டு சிவசாமி பேசினார்.“வேற என்னம்மா பண்றது? உன் புருஷன் மாதிரி என் பொண்ணை என்னால் பெல்ட்டால் அடிக்க முடியாது. அந்த இருதயமும் எனக்கு இல்லை. அப்படி அடிக்கச் சொல்லி பெல்ட்டைக் கொண்டு வந்து குடுக்க என் பெண்டாட்டியும் உயிரோடு இல்லை.”“பார்த்தீங்களா, உங்கப்பா பேசற குத்தல் பேச்சை?”நட்ராஜ் ரோகிணியை ஏறிட்டான். “இப்ப பேசிட்டிருக்கிறது எங்க அப்பா இல்லை ரோகிணி. பேங்க்ல அவர் தன் பொண்ணு கல்யாணத்துக்காக போட்டு வெச்சிருக்கிற இரண்டு லட்ச ரூபாய் டெபாஸிட் பணம்... அவராச்சு, அவர் பொண்ணாச்சு. எப்படியோ போகட்டும். என்னைப் பெத்த கடனுக்காகவும், என் கூடப் பொறந்த பாவத்துக்காகவும் இரண்டு பேர்க்கும் சோத்தைப் போட்டுடறேன்.”“டேய்! என்ன பேச்சுடா பேசறே.”“இதோ பாருங்கப்பா. நீங்க ஒரு ஸ்கூல் ஹெட் மாஸ்ட்ரா இருபது வருஷம் ஒர்க் பண்ணி ரிட்டையரானவங்க. உங்களுக்கெல்லாம் புத்தி சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை. நீங்களாச்சு, உங்க பொண்ணாச்சு. அவ காதலிக்கிற பையன் யார்ன்னு கேட்டு, கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணுங்க. அண்ணன் அண்ணிங்கிற முறையில் நாங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு வர்றோம். கலந்துக்கிறோம்.கையிலிருந்த பெல்ட்டை அறையின் மூலையை நோக்கி ஆத்திரமாய் வீசிவிட்டு நட்ராஜ் வெளியேற - ரோகிணி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கணவனைப் பின்தொடர்ந்தாள்.அவர்கள் போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிவசாமி தன் பாதங்களை மெத்தென்று தாக்குகிற ஓர் உணர்ச்சியில் கீழே குனிந்து பார்த்தார்.
Disponible desde: 08/02/2024.
Longitud de impresión: 135 páginas.

Otros libros que te pueden interesar

  • Natesa Pillaiyin Naatkurippukal - நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் - cover

    Natesa Pillaiyin Naatkurippukal...

    Sudhakar Kasturi

    • 0
    • 0
    • 0
    நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்  
    இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்திரங்களையும் அவர்களுக்கு இணையாகக் கற்பனைப் பாத்திரங்களையும் ஒருசேர உலவவிடுவது கத்தி மேல் நடக்கும் ஒரு செயல். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்ரமண்ய சிவாவும், மாடசாமி பிள்ளையும் வந்து போகும் நாவலில், பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டர்சன்னும் ஆனியும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் நிகர்செய்யும் பாத்திரமாக முத்துராசா. யார் இந்த முத்துராசா? ஏன் சமகாலத்தில் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? ஆனிக்கும் ஆண்டர்சன்னுக்கும் என்ன ஆனது? திரில்லரின் வேகத்தில் வரலாற்றின் சில பக்கங்களையும் புரிந்துகொள்ளலாம், வாருங்கள். உங்களுக்காகவே தன் நாட்குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் நடேச பிள்ளை.  
    எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
    Ver libro
  • 1+1=0 - cover

    1+1=0

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    சுடர்க்கொடி ஒரு தைரியமான பத்திரிகை நிருபர் அவரும் அவர் சகோதரனும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் எடுக்கும் நடவடிக்கை வெற்றியா? தோல்வியா?
    கேளுங்கள் 1+1=0 ராஜேஷ்குமாரின் விருவிரு துப்பறியும் நாவல்.
    Ver libro
  • Varnavin Maranam - cover

    Varnavin Maranam

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    A gripping murder mystery where a husband allegedly kills his wife and commits suicide. But when three more deaths follow mysteriously, what dark secrets come to light? Listen to this thrilling Tamil audiobook "Varnavin Maranam" by Rajesh Kumar. 
    இளமாறன் தன் மனைவி செவ்வந்தியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானா? அல்லது யாரோ திட்டமிட்டு செய்த கொலையா? மூன்று மரணங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள். ராஜேஷ் குமாரின் "வர்ணாவின் மரணம்" நாவல் - முழு ஆடியோ புக்.
    Ver libro
  • Poi Maan Karadu - cover

    Poi Maan Karadu

    Kalki Kalki

    • 0
    • 0
    • 0
    சேலம் ஜில்லாவில் உள்ள பொய் மான் கரடு எனும் இடத்தில் தனது கற்பனை கதாபாத்திரங்களை உலவவிட்டு ஒரு மர்மக்கதையை படைத்துள்ளார் அமரர் கல்கி. கொலையாளி யார், யார் கொலையுண்டார்கள் போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்த பாணியில் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான கதை. 
    Poimaan Karadu is a real place in Salem district Tamilnadu. Amarar Kalki creates a thriller novel based on fictional incidents that happen near this place.
    Ver libro
  • Galugambada Atankadali - cover

    Galugambada Atankadali

    D V Guruprasd

    • 0
    • 0
    • 0
    'ಸಾವಿನ ಸೆರಗಿನಲ್ಲಿ' ಕೃತಿಯ ಎರಡನೆಯ ಭಾಗವೇ ಈ ಕೃತಿ, 'ಗಲ್ಲುಗಂಬದ ಆತಂಕದಲ್ಲಿ'. ಇದರ ಹೆಸರೇ ಸೂಚಿಸುವಂತೆ ಮರಣದಂಡನೆಯ ಶಿಕ್ಷೆಗೆ ಈಡಾಗಿರುವ ಕೈದಿಗಳ ಕಥೆಗಳ ಗುಚ್ಛವಿದು.
    Ver libro
  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Kumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Ver libro