Junte-se a nós em uma viagem ao mundo dos livros!
Adicionar este livro à prateleira
Grey
Deixe um novo comentário Default profile 50px
Grey
Assine para ler o livro completo ou leia as primeiras páginas de graça!
All characters reduced
மன்னிக்கப்பட்ட மரணம் - cover
LER

மன்னிக்கப்பட்ட மரணம்

ரமணிசந்திரன்

Editora: Pocket Books

  • 0
  • 0
  • 0

Sinopse

பீட்டர் திண்ணையில் சைக்கிளை சாய்த்து நிறுத்திவிட்டு - வீட்டுக்குள் நுழைந்தான். கண்களிலும்- மீசையிலும் நடிகர் பிரதாப்பை நினைவுக்குக் கொண்டு வந்தான். சிவில் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு பக்கத்து டவுனில் சொந்தமாக சிவில் கன்சல்டன்ஸி அலுவலகம் நடத்தி வருபவன். பிஸ்னெஸ் சூடுபிடித்து விட்டதால் இன்னும் சில வாரங்களில் சைக்கிளை உதறிவிட்டு ஒரு ஹிண்ட்-சூசூகி வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.ஈஸி சேரில் உட்கார்ந்து - யோவானின் நல்வழி புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்த பீட்டரின் அப்பா ஸ்டேன்லி அவனுடைய வரவால் கலைந்து போய் நிமிர்ந்தார்.“என்ன பீட்டர் இன்னிக்கு லேட் போலிருக்கு?”“இன்னிக்கு செவ்வாய். அந்தோணியார் கோயிலுக்கு போய்ட்டு வந்தேன்”ஸ்டேன்லி பீட்டரின் அப்பா. பாங்க் ஒன்றில் வேலையிலிருந்த ஸ்டேன்லி ரெண்டு வருஷத்திற்கு முன்னால் வாலண்டியர் ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டவர். இப்போது ரிடையராகிற வயது. சுத்தமாய் தலை, தாடிப் பிரதேசங்களில் நிறமிழந்திருந்தார். படிக்க கண்ணாடியின் துணை அவசியமாயிருந்தது. மார்பில் நிளமாய் தொங்கிய செயினின் முடிவில் ஒரு வெள்ளி சிலுவை புரண்டது.பீட்டர் ஷர்ட்டைக் கழற்றி சுவர் ஆணியில் மாட்டிவிட்டு பின்பக்கம் போய் கை, கால், முகம் கழுவிவிட்டு துண்டால் முகத்தை ஒற்றியபடியே திரும்பி வந்தான்.“ஏன் பீட்டர்...”“சொல்லுங்கப்பா...”“கவர்ன்மெண்ட் வொர்க் ஒண்ணை கான்ட்ராக்ட் எடுத்திருந்தியே...?நான் எடுக்கலைப்பா... கருணாம்பிகா மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் டைரக்டர் மருதநாயகம் எடுத்த கான்ட்ராக்ட் அது... அதுக்காக என்னை வேலை பார்க்க சொன்னார்...”“அதுல என்னவோ ப்ராப்ளம்னியே, சரியாயிடுச்சா?”“இல்லைப்பா.... பாதியில நான் வொர்க்கை பார்க்க முடியாதுன்னுட்டேன்... அவனெல்லாம் ஒரு பெரிய மனுஷன்... கவர்ன்மென்ட் பணத்தை திங்கறதுலயே குறியா இருக்கான்... மனசாட்சி உள்ளவன் அந்த ஆளோட சேர்ந்து வேலை செய்ய மாட்டான்...”“ஸோ, வொர்க் - வேண்டாம்னுட்டே....?”“இன்னிக்குதான் சொன்னேன்... சொன்னதோடு மட்டும் நிக்கப் போறதில்லை கவர்ன்மென்ட் ஆஃபிசர்ஸ்கிட்டே அந்த மருதநாயகத்தோட ஊழலை பத்தி சொல்லப் போறேன்...”“சில பெரிய மனுஷங்க அப்படிதான் இருப்பாங்க பீட்டர்.... நமக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கிக்க வேண்டியது தான்... அதுக்காக அங்கேயும் இங்கேயும் அவங்களைப் பத்தி சொல்லி வீண் பகையை வளர்த்துக்க வேண்டாம். அந்த ஆளோட வொர்க்கை செய்ய மாட்டேன்னு சொல்லிட்டியில்லே? விடு பிரச்னையை...”“ந்நோ... இப்படி எல்லாரும் பயந்துகிட்டிருந்தா கவர்ன்மென்ட் பணத்தைத் திங்கறவன் தின்னுட்டேதான் இருப்பான்... இவனை மாதிரி நாலு பெரிய மனுஷங்க மாட்டிகிட்டா எல்லாருக்கும் கொஞ்சம் பயம் வரும்...”“நீ சொன்னா கேக்க மாட்டே பீட்டர்...!”ஸ்டேன்லி மறுபடியும் அந்த நல்வழி புத்தகத்துக்குள் மூழ்கினார்.பீட்டர் கண்ணாடி முன்பாக நின்று தலை வாரி- பவுடரை ஒரு கோட்டி முகத்துக்குக் கொடுத்துவிட்டு மறுபடியும் சர்ட்டுக்குள் நுழைந்தான்.“அப்பா... நான் சர்ச்சுக்கு போய்ட்டு வர்றேன்...”பீட்டர் வெளியே வந்தான்
Disponível desde: 13/01/2024.
Comprimento de impressão: 90 páginas.

Outros livros que poderiam interessá-lo

  • Porkaasu Thottam - cover

    Porkaasu Thottam

    Indra Soundarrajan

    • 0
    • 0
    • 0
    This is a novel that goes back and forth between the past and the present. There is a treasure in a cemetery. The cemetery holds in it a lot of secrets. What are they? This story is sure to drag you into its thrilling world. Listen to Porkaasu Thottam.
    
    இது ஒரு வரலாறும் சமகாலமும் கலந்த புதினம். புதையல் தான் கதையின் மையம். குறிப்பாக மயானமும் மயானத்தில் இருக்கும் ரகசியங்களும் எவரும் அறியாதவை. கேட்பவர்களை தன் கதைக்களத்திற்குள் இழுத்துச்செல்லும் விறுவிறுப்பான நாவல்.
    Ver livro
  • May June Julie - cover

    May June Julie

    Pattukkottai Prabhakar

    • 0
    • 0
    • 0
    ஒரு இளம் பெண் திடிரென்று தற்கொலை செய்து கொள்கிறாள். அவளின் கணவன் தன் மனைவி தற்கொலை செய்துகொள்ள எந்தக் காரணமும் இல்லை என்று நம்புகிறான். துப்பறிவாளர்கள் பரத்-சுசீலா களத்தில் இறங்க, மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.
    
    A young woman kills herself. Her husband swears that there is no reason for her to commit suicide. Detectives Bharath and Suseela start investigating and mysterious incidents unfold. To know more listen to May June Julie.
    Ver livro
  • Thamaraikulam - cover

    Thamaraikulam

    Kottayam Pushpanath

    • 0
    • 0
    • 0
    பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த யூதா என்ற அதிபயங்கர பெண்பித்துபிடித்த மந்திரவாதியின் பிடியில் சிக்கும் சோபியாவின் குடும்பம், பலவித துர்சம்பவங்களை எதிர்கொள்கிறது. சோபியாவின் வீட்டில் வேலைசெய்யும் கிளாராவும் , கோவிலகத்தை சேர்ந்த உதயனும் இதை கண்டுபிடித்து அதை தடுக்க மாந்திரிக நம்பூதிரி மற்றும் பாதிரியார் காபிரியேல் உதவியை நாடுகிறார்கள். தெய்வ சக்தியினால் தீய சக்தி எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யமிகுந்த திகிலூட்டும் அனுபவங்களுடன் அமைந்த கதை "தாமரைக்குளம்"
    Ver livro
  • Aetho Nadakirathu - cover

    Aetho Nadakirathu

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    பிரபல மனநல மருத்துவர் அமிர்தவர்ஷினி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் எதிர்பாரத விதமாக நிகழ்ச்சி அரங்கில் கொல்லபடுகிறார்..போலீஸ் வரவழைக்க ப்படுகிறார்கள் ,போலீஸின் யூகம் படி அரங்கில் உள்ள ஒருவரால் தான் கொலை நடந்திருக்கிறது,அது யார் ? எதற்காக என்ற ஆவலா? அதற்கு கேளுங்கள்
    ஏதோ நடக்கிறது!
    Ver livro
  • Detective DK - Case No:04 - சாத்தான்காட்டு ரகசியம் - Where death waits! - cover

    Detective DK - Case No:04 -...

    Narshen Kaviyan

    • 0
    • 0
    • 0
    பல நூறு ஆண்டுகளாக யாரும் அணுக முடியாத சாத்தான்காடு. அங்கு நுழைந்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து போனார்கள். ஆனால் அந்தக் காட்டுக்குள் அமானுஷ்யத்தைத் தாண்டி ஒரு பெரிய ரகசியம் புதைந்திருக்கிறது. நம் நாயகன் DK எவ்வாறு அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருகிறான் என்பதைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும். மர்மம், திகில், சாகசம் நிறைந்த இந்த படைப்பை தவற விடாதீர்கள்! 
    Pala nooru aandugalaga yaarum anaaga mudiyatha Saathaan Kaadu… Anga pona yellaaarum marma maathiri sethutu vandhirkanga. Aana andha kaattukulla oru periya ragasiyam amanooshyatha thaandi marandhu irukku. Nam hero DK eppadi andha marma ragasiyatha veli kondu varraan-nu kaanum idha video miss pannadheenga! Marmam, thigil, saagasam niraintha oru vera level experience. 
    An Ancient Forest. A Deadly Curse. One Man Dares to Enter. For centuries, no one has returned alive from Saathankadu – a forest whispered to be cursed. Those who entered met mysterious and violent deaths. Locals speak of ghostly shadows, whispers in the dark, and an unseen presence that guards something… ancient. But when a strange symbol connected to a powerful political figure appears in the forest's border, Detective DK and Rishi must step in not just to uncover the truth, but to survive it. What lies beyond the fear? A lost history? A hidden power? Saathankadu Ragasiyam is the fourth thrilling adventure in the Detective DK Investigations series - blending psychological horror, Tamil folklore, and raw investigation in one unforgettable tale.
    Ver livro
  • Theepiditha Thendral - cover

    Theepiditha Thendral

    Rajesh Rajeshkumar

    • 0
    • 0
    • 0
    "சற்றே அமானுஷ்யம் கலந்த ஒரு ஃபேமிலி த்ரில்லர் இந்த நாவல். மொத்தம் இரண்டு ட்ராக்குகள். ஒரு ட்ராக்கில் ஒரு அழகான குடும்பக்கதை. இரண்டாவது ட்ராக்கில் ஒரு அமானுஷ்ய கதை.
    
    இந்த அமானுஷ்ய கதையில் வரும் சிவகாமியின் நடவடிக்கைகள் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
    
    சிவகாமியின் ஒரே மகள் இதயா. சிவகாமியின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் மகள் இதயாவுக்கு திருமணத்தை நடத்த முடிவு செய்து வரன் பார்க்கிறான். நல்ல வரன்கள் வருகின்றன. அந்த வரன்களில் யாரைத் தேர்ந்து எடுப்பது என்கிற குழப்பம் வருகிறது.
    
    குழப்பத்தை தீர்த்துக்கொள்ள, சிவகாமி தன் மகள் இதயா வெளியே போனதும், மாடியில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு அறையைத் திறந்து கொண்டு உள்ளே போகிறாள். நூலாம்படைகளை விலக்கிக்கொண்டு ஒரு தேக்குமர பழைய பீரோவைத் திறக்கிறாள். பீரோ சத்தமில்லாமல் திறந்து கொள்ள, உள்ளே பீரோவின் இரண்டாவது அறையில் இரண்டடி உயரத்திற்கு ஒரு பெரிய கண்ணாடி ஜாடி தெரிய, ஜாடியின் கழுத்துப் பாகம் வரைக்கும் ஃபார்மலிக் அமிலம் நிரம்பிருக்கிறது... அதன் உள்ளே..?
    
    தீப்பிடித்த தென்றலைக் கேளுங்கள். செவிகளும் தீப்பிடிக்கும்."
    Ver livro